சூரியன், சந்திரன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தைரிய குணம் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் வாதம், விவாதம் நடக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு வெளியே சென்று பெயர், புகழ் பெறுவார்கள். நல்ல வாரிசு இருக்கும்.

ss

சூரியன், சந்திரன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். வாரிசுகள் சில நேரங்களில் மன கஷ்டத்தைத் தருவார்கள். ஜாதகருக்கு எல்லா இடங்களிலும் பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பயணம் செய்து, தன் பேச்சை வைத்து பணம் சம்பாதிப்பார். வீடு, மனை, வாகனம் இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். தந்தையுடன் கொண்டிருக்கும் உறவில் சிறிய பிரச்சினை இருக்கும்.தைரிய குணம் இருக்கும். ஜாதகர் தன் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். வீடு, மனை, வாகனம் இருக்கும். யாரையாவது நம்பி சொத்து வாங்கினால், அதில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.

அரசியலில் பெயர், புகழ் இருக்கும். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். சிலருக்கு படிக்கும் காலத்தில் தடங்கல்கள் உண்டாகும். அவற்றைக் கடந்து படிப்பார்கள். வாரிசுகளில் ஒருவர் மிகச் சிறந்த வராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் பிறரை ஈர்க்கக் கூடியவராக இருப்பார்.

சூரியன், சந்திரன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், நிறைய பகைவர்கள் இருப்பார்கள். எனினும், அவர்களை வென்று, ஜாதகர் தன் காரியங்களை முடிப்பார். பித்த நோய் இருக்கும். தலைவலி வரும். 28 வயதிற்குப் பிறகு, நல்ல பண வரவு இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

சூரியன், சந்திரன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். அழகான மனைவியாக இருப்பாள். ஜாதகர் அலைபாயும் மனதைக் கொண்டிருப்பார். பணக்காரராக இருப்பார். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்காக பயணங்கள் மேற்கொள்வார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பிரச்சினைகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். 23 வயதிற்குப் பிறகு, சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் தன் ஊரை விட்டு வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். முன்னோரின் சொத்து இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெரிய மனிதர்களுடன் தொடர்பு இருக்கும். அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம். தந்தையின் உடல்நலத்தைக் கவனிக்கவேண்டும்.

சூரியன், சந்திரன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். 31 வயதிற்குப் பிறகு, அரசியலில் ஈடுபாடு உண்டாகும். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் பேராசிரியர்களாக இருப்பார்கள். சிலர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார்கள். குடும்பத்தில் விரோதிகள் அதிகமாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். தூக்கம் குறைவாக இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மனச் சிக்கல்கள் அதிகமாக இருக்கும். சிலர் அதிகமாக சிந்திப்பார்கள். சிலர் எழுத்தாளராகவோ ஜோதிடராகவோ குருக்களாகவோ இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார்.

வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மனதில் குழப்பங்கள் இருக்கும். சிலருக்கு 26 வயதிலிருந்து 29 வயது வரை உடல்நல பாதிப்பு இருக்கும். ஜாதகருக்கு தன் ஊரில் பெயர், புகழ் இருக்காது. வெளியே பெயர், புகழ் இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் தொழில் அல்லது வர்த்தகம் செய்து பணத்தைச் சம்பாதிப்பார்கள்.

செல்: 98401 11534