சூரியன், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். தேவையற்றதைப் பேசுவார். சிலர் தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சிலருக்கு நிரந்தர தொழிலே இருக்காது. தந்தையுடன் விவாதம் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். 22 வயதிற்குப் பிறகு, ஜாதகர் சுயமாக சம்பாதிப்பார். சொந்த ஊரைவிட்டு வெளியேசென்று வாழவேண்டிய நிலை உண்டாகும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் ஆளுக்கேற்றபடி பேசுவார். பயணங்கள் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதிகமாக பயணம் செய்வார். அதன்மூலம் பணத்தைச் சம்பாதிப்பார். சிலர் இரும்பு வியாபாரம் செய்வார்கள். சிலர் ஸ்டீல் வர்த்தகம் செய்வார்கள். சிலர் மெக்கானிக்கல் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். சிலர் சொந்த ஊரைவிட்டு வெளியேசென்று, தொழில் செய்வார்கள். நல்ல வாரிசு அமையும்.
சூரியன், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக் காரராக இருப்பார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வழக்கு, நீதிமன்றம் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். சகோதரர்களுடன் விவாதம் நடக்கும். பிள்ளை கள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகருக்கு தன் மனைவியுடன் சிறிய கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் பலரை வைத்து தொழில் செய்வார்.
சூரியன், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். கோபம் அதிகமாக வரும். ஒரு வாரிசுக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். பெண்களின் கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பித்த நோய் இருக்கும். சிலருக்கு மன நோய் இருக்கும். கோபம் அதிகமாக வரும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். அதன் மூலம் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். வெளியூரில், வெளிமாநிலத்தில் பெயர், புகழ் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். அதிகமாக கோபம் வரும். ஜாதகர் மற்றவர்களுடன் சண்டை போடுவார். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். ஆனால், அதற்கேற்ற வேலை அவருக்குக் கிடைக்காது. 32 வயதிற்குப்பிறகு, பணம் சம்பாதிப்பார்.
சூரியன், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் உயரமாக இருப்பார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பிறருடன் நெருங்கி பழக மாட்டார். அதனால், அவருக்கு குறைவான நண்பர்களே இருப்பார்கள்.
சூரியன், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பல தகிடுதத்தங்களைச் செய்வார். அதன்மூலம் பணத்தைச் சம்பாதிப்பார். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் குருநாதராகவோ ஆசிரியராகவோ இருப்பார்கள். அவற்றில் பல கில்லாடி வேலை களைச் செய்வார்கள். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி
10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். பல முயற்சி களைச் செய்வார்கள். பல தோல்விகள் கிடைக்கும். பல இழப்புகள் உண்டாகும். எனினும், திரும்பத் திரும்ப கடுமையாக உழைப்பார்கள். பெயர், புகழ், பணம் இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலருக்கு மனைவியுடன் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். ஒரு வாரிசு இருக் கும். பெண்கள் தங்களின் உடல்நலத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஜாதகர் பயணம் செய்து, பணம் சம்பாதிப் பார். நல்ல படிப்பு இருக்கும்.
சிலர் அரசு பதவிகளில் இருப் பார்கள். பெயர், புகழ் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக் கும். இளமையில் பல கஷ்டங் கள் இருக்கும். ஜாதகர் தன் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். கோபம் அதிக மாக வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் இருக்காது. பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.
செல்: 98401 11534