சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்.....?

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-are-anywhere

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். அழகான தோற்றம் இருக்கும். சிலருக்கு உடல் உறுப்புகளில் ஏதாவது

குறைபாடுகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். அதிகமான சிந்தனை இருக்கும். சகோதர்களுடன் உறவு நன்றாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். சிலர் கண்ணாடி போட வேண்டியதிருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுவார்.

ds

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று வாழ வேண்டியதிருக்கும். தைரிய குணம் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். பல வ

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். அழகான தோற்றம் இருக்கும். சிலருக்கு உடல் உறுப்புகளில் ஏதாவது

குறைபாடுகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். அதிகமான சிந்தனை இருக்கும். சகோதர்களுடன் உறவு நன்றாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். சிலர் கண்ணாடி போட வேண்டியதிருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுவார்.

ds

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று வாழ வேண்டியதிருக்கும். தைரிய குணம் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். பல வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதிப்பார்கள். வாரிசுகள் வாதம் செய்வார்கள். தலைவலி வரும். நீண்ட ஆயுள் இருக்கும். காலில் அடிபடும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலர் கலைத்துறையில் இருப்பார்கள். சிலர் தச்சராக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். பேச்சாற்றல் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும். அழகான தோற்றம் இருக்கும். சிலர் குள்ளமாக இருப்பார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஜாதகருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். கோபம் வரும். காலில் பிரச்சினை இருக்கும். இளம் வயதில் படிப்பில் சிக்கல்கள் இருக்கும். கல்லீரலில் பிரச்சினை இருக்கும். 32 வயதிற்குப் பிறகு, பண வரவு இருக்கும். நல்ல வாழ்க்கை இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி அமைவாள்.

சிலருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடக்கும். காதல் திருமணமாக அமையலாம். தைரிய குணம் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும்.

ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வெளிநாட்டில் பெயர், புகழுடன் இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். சிலருக்கு வலிப்பு வரும். சீதளம் பிடிக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பண வசதி இருக்கும். எட்டு வயதிற்குப்பிறகு, உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். வீடு, நிலம் இருக்கும். சிலர் விவசாயியாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தந்தையின் சொத்துகளை அழிப்பார். தந்தை யுடன் வாதம் செய்வார். நன்கு படித்தவராக இருப்பார். சிலர் வெளிநாட்டில் படிப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். பண வரவு இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலருக்கு இளமையில் கஷ்டங்கள் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். கோப குணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் கடுமையான வாழ்க்கை இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும் ஜாதகர் சுயமாக உழைத்து, பணத்தைச் சம்பாதிப்பார். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். சொந்த வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் பொய் பேசுவார்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். மலேரியா, டைஃபாய்ட் நோய்களின் பாதிப்பு வரலாம். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் ருசித்து சாப்பிடுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

செல்: 98401 11534

bala090824
இதையும் படியுங்கள்
Subscribe