சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் லக்னத் தில் இருந்தால், சிலருக்கு கண்ணில் நோய் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் கஷ்டங் களுடன் வாழ்க்கையை நடத்துவார். சிலர் இசை மேதைகளாக இருப்பார்கள். சிலர் வெளியூர் சென்று, தங்களின் திறமை களை வெளிப்படுத்தி, பணம் சம்பாதிப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். இளம்வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல்கள் இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். சிலர் இசை கலைஞர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் குறைவாக இருக்கும். இல்வாழ்க்கை பரவாயில்லாமல் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். 25 வயதிற்குப்பிறகு, பணம் சம்பாதிப்பார். 32 வயதிற்குப்பிறகு, திருமணம் நடக்கும்.
ஜாதகர் அடிக்கடி தொழிலை மாற்றிக் கொண்டேயிருப்பார். சிலர் வீட்டை மாற்றியவண்ணம் இருப்பார்கள். வாரிசு இருக்கும். எனினும், சந்தோஷம் குறைவாகவே இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் காவல் துறையில் இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். கண்ணில் பிரச்சினை இருக்கும். குழந்தை பிறந்த பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் சுய சம்பாத்தியத்தால் முன்னுக்கு வருவார்.
பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். காலில் அடிபடும். கண்ணில் ஆப்ரேஷன் பண்ண வேண்டியதிருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் இசை கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர்களாக இருப்பார்கள். மனைவியுடன் விவாதம் இருக்கும். ஜாதகர் நேர்மையானவராக இருக்க மாட்டார்.
கோப குணம் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நல பாதிப்பு இருக்கும். வீண் விவாதம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் சிலர் சண்டை போடுவார்கள். வீண் செலவுகள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார்.
கடவுள் நம்பிக்கை இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். ஜாத கருக்கு தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கோபம் அதிகமாக வரும். ஜாதகர் யாரையும் மதிக்க மாட்டார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் டாக்டராகவோ- வைத்தியராகவோ இருப்பார்கள். கண்ணில் பிரச்சினை இருக்கும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். குடும்பத்தில் சண்டை இருக்கும். ஜாதகர் யாரிடமும் சந்தோஷமாக பழக மாட்டார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் படைத்தவராக இருப்பார். இளம் வயதில் படிப்பில் பிரச்சினை இருக் கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஒரு வாரிசு இருக்கும். அடிக்கடி பயணம் இருக் கும். அதன்மூலம் பண வரவு இருக் கும். சிலருக்கு கண்ணில் பிரச்சினை இருக்கும். மனநோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். ஜாதகர் பல தொழில் களைச் செய்வார்.
அயோக்கியராக இருப் பார். செலவுகள் அதிக மாக இருக்கும்.
செல்: 98401 11534