சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். மனதில் எப்போதும் சஞ்சலம் இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். ஜாதகர் பாவச் செயல்களை சர்வ சாதாரணமாக செய்வார். பகைவர் கள் அதிகமாக இருப்பார்கள். எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணமிருக்கும். வீண் பேச்சு இருக்கும். அதன்காரணமாக விரோதிகள் உண்டாவார்கள். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். உடலில் ஏதாவது நோய் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும்.

s

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியர்களாகவோ- பண்டிதர்களாகவோ இருப்பார்கள். பண பிரச்சினைகள் இருக்கும். சிலர் வெளியூரில் சென்று தொழில் செய்வார்கள். நல்ல வாரிசு இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் நண்பர்களிடமும் விரோதம் இருக்கும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். இதய நோய் வரலாம்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். எப்போதும் விரோதிகள் இருப்பார் கள். அதன்காரண மாக மனதில் சந்தோஷம் இருக்காது.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், காலில் அடிப்படும். தைரிய குணம் இருக்கும். சிலருக்கு பிறக்கும் போதே உடலில் ஊனம் இருக்கும். பணவசதி இருக்கும். சிலர் நல்ல பதவியில் இருப்பார்கள். மனதில் சிக்கல்கள் இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். வாரிசு இருக்கும். பல தொழில்கள் இருக் கும். சிலர் ஏதாவது ஏஜென்ஸி ஏற்று நடத்துவார்கள். அதன்மூலம் பண வருமானம் இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நல பாதிப்பு உண்டாகும். மனதில் பயம் இருக்கும். பணவரவு இருக்கும். அதற்கேற்றபடி செலவுகளும் அதிகமாக இருக்கும். பகைவர்கள் நிறைய இருப்பார்கள். தூக்கத்தில் உளறுவார்கள். சிலருக்கு உடலில் தழும்புகள் இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். தர்ம சிந்தனைகள் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் வெளியூர்களில் பெயர், புகழுடன் இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். எப்போதும் மிகுந்த கவனத் துடன் இருப்பார். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள். செலவுகள் அதிகமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் பணக் காரராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பலமொழிகள் தெரிந்தவராக இருப்பார். பேச்சை வைத்து பணம் சம்பாதிப்பார். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு இரண்டிற்கும் மேலாக குழந்தைகள் இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், துணிச்சல் குணமிருக்கும். செலவுகள் அதிக மாக இருக்கும். இளமையில் சிரமங்கள் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். ஜாதகர் யாரையும் நம்பமாட்டார். வீண் பேச்சு இருக்கும். ஆணவக் குணமிருக்கும். வாரிசுகள் வெளியூர் அல்லது வெளி நாட்டில் வாழ்வார்கள்.

செல்: 98401 11534