சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். போதைக்கு அடிமையாக இருப்பார். பெண் மோகம் இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. ஜாதகர் மோசமான மனிதராக இருப்பார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் பலரிடமும் சண்டை போடுவார். விவாதம் செய்வார். திருமணமானபிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் யாரிடமும் சந்தோஷமாக பேசமாட்டார்.

ss

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் சொந்த ஊரைவிட்டு, வெளியூரில் வாழ்வார்கள். அதில் வெற்றி கிடைக்கும். தூரத்து உறவினரின் ஆதரவுடன் ஜாதகர் தொழிலை ஆரம்பிப்பார். ஆண் வாரிசு இருக்கும். ஆனால், வாரிசுடன் சுமாரான உறவே இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். ஜாதகருக்கு வேறு பெண்களுடன் உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் அயோக்கியராக இருப்பார். பல சட்ட விரோத செயல்களைச் செய்பவராக இருப்பார். படிப்பில் தடங்கல்கள் இருக்கும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல்கள் இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். பிறரை ஏமாற்றுவதில் மன்னராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் அரசாங்கப் பதவியில் இருப்பார்கள். ஜாதகர் அனைவரிடமும் வாதம் செய்வார். உறவினர்களிடம் சுமாரான உறவு இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.

கா-ல் நோய் இருக்கும். உட-ல் பெரிய தழும்புகள் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

தலைமுடி நரைக்கும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். போதைக்கு அடிமையாக இருப்பார். உறவினர் களிடம் வாதம் புரிவார். கெட்ட மனிதராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சந்தோஷம் இருக்காது.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சிலர் வெளியூரில் சென்று, வாழ்வார்கள். தைரிய குணம் இருக்கும். அனைவரிடமும் ஜாதகர் சண்டை போடுவார். அவருக்கு இரண்டிற்கும் மேலான மனைவிகள் இருப்பார்கள். எனினும், சந்தோஷம் இருக்காது. சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். கோப குணம் இருக்கும். அதர்ம வாதியாக ஜாதகர் இருப்பார். கடவுள் நம்பிக்கை உள்ளவரைப் போல வெளியே தன்னைக் காட்டிக் கொள்வார். முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும். சகோதரர் களுடன் சரியான உறவு இருக்காது.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந் தால், சிலர் அரசியல்வாதியாக இருப் பார்கள். தைரிய குணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும். ஜாதகர் மற்றவர்களை மதிக்க மாட்டார்.

அயோக்கியனாக இருப்பார். பொய் பேசுவார். சட்ட விரோத காரியங் களைச் செய்து, பணம் சம்பாதிப் பார். கண்ணில் நோய் இருக்கும். ஜாதகருக்கு தன் தாயாருடன் சுமாரான உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஒரு வாரிசு இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். மனநோய் இருக்கும். சகோதரர்களுடன் ஜாதகர் வாதம் செய்வார். சிலர் பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள். 36 வயதிற் குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண்செலவுகள் இருக் கும். போதை பழக்கம் இருக்கும். ஜாதகர் எல்லோரிடமும் சண்டை போடுவார். சிலர் வெளியூரில் சென்று, தொழில் செய்வார்கள். அதன்மூலம் பணம் வரும். ஜாதகர் அதர்ம செயல்களைச் செய்வார். கடன் அதிகமாக இருக்கும்.

செல்: 98401 11534