Advertisment

சூரியன், செவ்வாய், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-mars-and-guru-are-placed-there

சூரியன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால்,ஜாதகர் பெரிய மனிதராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சட்டம் தெரிந்தவராக இருப்பார்.

Advertisment

நல்லவராக, நேர்மையானவராக இருப்பார். கோப குணம் இருக்கும். தன் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்.

சூரியன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். பணக்காரராக இருப்பார். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஜாதகர் கோபமாக பேசுவார். வாரிசு தாமதமாக பிறக்கும். பெயர், புகழ் இருக்கும்.சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் கஷ்டப்பட்டு உழைப்பவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். தைரிய க

சூரியன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால்,ஜாதகர் பெரிய மனிதராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சட்டம் தெரிந்தவராக இருப்பார்.

Advertisment

நல்லவராக, நேர்மையானவராக இருப்பார். கோப குணம் இருக்கும். தன் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்.

சூரியன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். பணக்காரராக இருப்பார். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஜாதகர் கோபமாக பேசுவார். வாரிசு தாமதமாக பிறக்கும். பெயர், புகழ் இருக்கும்.சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் கஷ்டப்பட்டு உழைப்பவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். சகோதரர்களால் சந்தோஷம் இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதியில் பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பயணங்கள் செய்பவராக இருப்பார்.

Advertisment

gg

சூரியன், செவ்வாய், குரு 4 -ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பண வசதி படைத்தவராக இருப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலர் நகை, வைர வியாபாரிகளாக இருப்பார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் தந்தையிடமிருந்து விலகி இருப்பார்கள். தாய், தந்தை, உடன்பிறந்தோர் ஆகியோருடன் சுமாரான உறவு இருக்கும்.

சூரியன்,செவ்வாய், குரு 5 -ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு ஒரு வாரிசு இருக்கும். பண வசதி இருக்கும். ஜாதகர் படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள். சிலர் ராணுவத்தில் இருப்பார்கள். சிலர் அரசாங்க பதவியில் இருப்பார்கள். ஜாதகர் சட்டம் அறிந்தவராக இருப்பார். ஜாதகர் தன் குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார்.

சூரியன், செவ்வாய், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். திருமண விஷயத்தில் சிறிய தடைகள் இருக்கும். வாழ்க்கை வசதியாக இருக்கும். ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். தலைவலி இருக்கும். சிலருக்கு காலில் காயம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். அவரின் மனைவி அழகாக இருப்பாள். ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். தான் கூறியதே சரி என பிடிவாதம் பிடிப்பார்.பெரிய பதவியில் இருப்பார். வசதியான வாழ்க்கை வாழ்வார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.சிலருக்கு முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும்.காலில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வசதியான வாழ்க்கை வாழ்வார். பெரிய மனிதராக இருப்பார். இளம் வயதில் அடிக்கடி ஜுரம் வரும். படிப்பு நன்றாக வரும். ஜாதகர் சூழ்நிலைக்கேற்றபடி பேசுவார். பல தொழில்களைச் செய்வார். தொழி லில் லாபமும் இருக்கும். நஷ்டமும் இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர்,புகழ் இருக்கும். ஜாதகர் தன் தாத்தா, தந்தை ஆகியோரின் பெயரைக் காப்பாற்றுவார்.

சூரியன், செவ்வாய், குரு 10 ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். தர்ம குணம் கொண்டவராக இருப்பார். சிலர் வழக்கறிஞ ராகவோ நீதிபதியாகவோ இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள். குடும்ப சுகம் இருக்கும். வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் அனைவரும் மதிக்கும் வண்ணம் இருப்பார்.

சூரியன், செவ்வாய், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நன்கு செலவு செய்வார். பெரிய பதவியில் இருப்பார்.

பெரிய தொழிலதிபதி ராக இருப்பார். வீடு, மனை இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடை இருக்கும். சிலருக்கு தலை முடி உதிரும். சிலருக்கு திருமணம் 32 வயதிற்குப் பிறகு நடக்கும். ஜாதகருக்கு மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பது பிடிக்காது. நல்ல பண வசதி இருக்கும். பெண் மோகம் இருக்கும். செலவுகள் அதிக மாக இருக்கும். ஜாதகர் தன் மனைவியிடம் சந்தோஷமாக பேச மாட்டார்.

bala151223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe