சூரியன், குரு, சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்...?

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-guru-venus-are-there

சூரியன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் எந்த விஷயத்திற்கும் பயப்படமாட்டார். தைரியசாலியாக இருப்பார். குடும்பத்திற்கு நல்ல காரியங்களைச் செய்வார். உறவினர்களுக்கு நல்ல வற்றைச் செய்வார். நண்பர்கள் நிறைய இருப்பார் கள். அரசாங்கத்துடன் விரோதப் போக்கிருக்கும்.

சூரியன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணமிருக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கண்ணில் சிறிய நோய் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கம்பீரமாக பேசுவார். சொந்தமாக வீடு, வாகனம் இருக்கும்.

சூரியன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவர

சூரியன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் எந்த விஷயத்திற்கும் பயப்படமாட்டார். தைரியசாலியாக இருப்பார். குடும்பத்திற்கு நல்ல காரியங்களைச் செய்வார். உறவினர்களுக்கு நல்ல வற்றைச் செய்வார். நண்பர்கள் நிறைய இருப்பார் கள். அரசாங்கத்துடன் விரோதப் போக்கிருக்கும்.

சூரியன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணமிருக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கண்ணில் சிறிய நோய் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கம்பீரமாக பேசுவார். சொந்தமாக வீடு, வாகனம் இருக்கும்.

சூரியன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். கடுமையாக உழைத்து முன்னேறுவார்.சகோதரர் களுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதிகமாக பயணம் செய்ய வேண்டியதிருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.

sun

சூரியன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் ஆரம்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். பல சிக்கல்களைக் கடந்து வீடு, வாகனம் வாங்கவேண்டியதிருக் கும். இதயத்தில் படபடப்பு இருக்கும்.

சூரியன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப் பார்கள். சிலர் அரசாங்கத்தில் பதவியில் இருப் பார்கள். பிள்ளைகளால் சந்தோஷமிருக்கும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். ஆணவ குணம் இருக்கும்.

சூரியன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு துணிச்சல் குண மிருக்கும். பயணங்கள் அதிகமிருக்கும். பெண் மோகமிருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். சிலருக்கு மறுமணம் நடக்கும்.

சூரியன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். திருமணமான பிறகு, வாழ்க்கையில் மாறுதல்கள் நடக்கும். சிலருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் வியாபாரத்தில் மன்னராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் உயர்ந்த பதவிகளிலிருப்பார்கள். குழந்தை பாக்கியம் இருக்கும்.

சூரியன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் விவசாயிகளாக இருப்பார் கள். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். உடலில் சிறிய அளவில் நோய் இருக்கும்.

சூரியன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். தாத்தா, தந்தை சந்தோஷ மாக இருப்பார்கள். சிலர் தர்ம காரியங்களைச் செய்வார்கள். சிலர் ஆலயங்களை உருவாக்கு வார்கள்.

சூரியன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். அரசியலில் பெயர், புகழ் இருக்கும். சிலர் உயர்ந்த பதவியில் இருப் பார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார் கள். சிலருக்கு அதிக அலைச்சல்கள் இருக்கும். சிலர் நீதிபதிகளாக இருப் பார்கள். சிலர் விஞ்ஞானி களாக இருப்பார்கள்.

சூரியன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந் தால் பிள்ளைகள் நல்லவர் களாக இருப்பார்கள்.

அவர்களால் ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும்.

சூரியன், குரு, சனி 12-ஆம் பாவத்திலிருந் தால், செலவுகள் அதிக மாக இருக்கும். பயணம் அதிகம் செய்ய வேண்டிய திருக்கும். சிலருக்கு உடல் பருமனாக இருக்கும். சிலர் உணவை அதிகமாக சாப்பிடு வார்கள்.

செல்: 98401 11534

bala020224
இதையும் படியுங்கள்
Subscribe