Advertisment

சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்..???.?

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-where-2

செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் உற்சாகமாக இருப்பார். பிடிவாத குணம் இருக்கும். பணக்காரராக இருப்பார். மனதில் சஞ்சலம் இருக் கும். சிலருக்கு உடலில் குறைபாடு இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.

Advertisment

செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், காம சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வாத, விவாதம் இருக்கும். ஜுரம், தொண்டையில் பாதிப்பு இருக்கும். 32 வயதிற்குப் பிறகு, நல்ல பணவரவு இருக்கும்.

ஜாதகரிடம் கடனாக பணம் பெறுபவர்கள், மீண்டும் அதைத் திரும்ப தரமாட்டார் கள்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு தம்பிகள் இருக்க

செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் உற்சாகமாக இருப்பார். பிடிவாத குணம் இருக்கும். பணக்காரராக இருப்பார். மனதில் சஞ்சலம் இருக் கும். சிலருக்கு உடலில் குறைபாடு இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.

Advertisment

செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், காம சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வாத, விவாதம் இருக்கும். ஜுரம், தொண்டையில் பாதிப்பு இருக்கும். 32 வயதிற்குப் பிறகு, நல்ல பணவரவு இருக்கும்.

ஜாதகரிடம் கடனாக பணம் பெறுபவர்கள், மீண்டும் அதைத் திரும்ப தரமாட்டார் கள்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு தம்பிகள் இருக்கமாட்டார்கள். தோல்நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும். 28 வயதிற்குப் பிறகு, நல்ல பணவரவு இருக்கும். கோபம் அதிகமாக வரும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.

Advertisment

vv

செவ்வாய், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந் தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு 28லிலிருந்து 32 வயதிற்குள் திருமணம் நடக்கும். பூமி, வாகனம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு மனைவி தவிர, இன்னொரு பெண்ணும் உறவில் இருப்பாள். வாழ்க்கை வசதியாக இருக்கும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் விளையாட்டு துறையில் பெயர், புகழுடன் இருப்பார்கள். சிலர் கலைத் துறையில் தொழில் நுட்ப கலைஞர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஆண்கள் அதிகமாக பயணம் செய்வார்கள்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிக மாக வரும். காலில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் அதிகமாக தூங்கு வார்கள். சோம்பேறியாக இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அதிகமாக பேசுவார். சிலருக்கு மறுமணம் நடக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சொந்தத்தில் வீடு இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். இளம்வயதில் உடல்நலம் கெடும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு விலைமாதர்களுடன் உறவு இருக்கும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். அதிகமாக பேசுவார். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். 42 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். குடும்பத்தில் பெயர், புகழ் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பண வசதி படைத்தவராக இருப்பார். கை, கால், தோள்பட்டையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பயணம்செய்து, பணம் சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு ரத்தத்தில் பிரச்சினை இருக்கும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். இளமை யில் உடல்நல பாதிப்பு இருக்கும். தலைவலி, சீதளம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு தாமதமாக திரு மணம் நடக்கும். கோப குணம் இருக் கும். அதிகமாக செலவு செய்வார் கள்.

bala030524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe