சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்..?????

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-where-1

செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வார். பெயர், புகழ் இருக்கும். தன் இனத்தின் தலைவராக ஜாதகர் இருப்பார். தைரியசாலியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல மனைவி அமைவாள்.

செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். இளம் வயதில் படிப்பு விஷயத்தில் சில தடங்கல்கள் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். எனினும், அவர்களுடன் விவாதமும் இருக்கும். ஜாதகர் சிறந்த பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் கட்டுமான துறையில் இருப்பார்கள். சிலர் நிலம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் இருப்பார்கள். கணிதத்தில் சிறந்த திறமை இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரி

செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வார். பெயர், புகழ் இருக்கும். தன் இனத்தின் தலைவராக ஜாதகர் இருப்பார். தைரியசாலியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல மனைவி அமைவாள்.

செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். இளம் வயதில் படிப்பு விஷயத்தில் சில தடங்கல்கள் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். எனினும், அவர்களுடன் விவாதமும் இருக்கும். ஜாதகர் சிறந்த பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் கட்டுமான துறையில் இருப்பார்கள். சிலர் நிலம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் இருப்பார்கள். கணிதத்தில் சிறந்த திறமை இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார்.

tt

சகோதரர்கள் நல்லவர் களாக இருப்பார்கள். பூமி, வாகனம் இருக்கும். சிலர் கமிஷன் ஏஜென்ட்களாக இருப்பார்கள். சிலர் காப்பீடு ஏஜென்டாகவோ பயண ஏஜென்டாகவோ இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். சிலர் எம்.பி.ஏ. படித்தவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கை யின் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். பின்னர் அது சரியாகிவிடும். சிலர் விவசாயிகளாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். வீடு, வாகனம் இருக்கும். அரசரைப் போல வாழ்வார்கள். சிலருக்கு தோல் நோய் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.

செவ்வாய், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு அரசியலில் பெயர் இருக்கும். சிலர் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பார்கள். அதில் புகழ் பெறுவார்கள். துணிச்சல் குணம் இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசா-யாக இருப்பார். சிலருக்கு காலில் அடிபடும். ஜாதகர் தன் மனைவியுடன் விவாதம் செய்வார்.

செவ்வாய், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையின் முற்பகுதியில் சில பிரச்சினைகள் இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலர் விவசாயம் செய்வார்கள். சொந்தத்தில் நிலம் இருக்கும். சிலர் எந்திர வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் தொழிற்சாலை வைத்திருப்பார்கள். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் மகத்தான மனிதர்களாக இருப்பார்கள்.பேச்சுத் திறமை இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். அடிக்கடி ஜுரம் வரும். ஜாதகர் கடுமையாக பேசுவார். துணிச்சல் குணம் இருக்கும். மனைவியுடன் சுமாரான உறவு இருக்கும். பூமி, வாகனம் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். தந்தை- மகனுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும். எனினும், தன் தாத்தாவின் பெயரையும் தந்தையின் பெயரையும் கூறி, ஜாதகர் அரசரைப்போல வாழ்வார். அதிகமாக பேசுவார். சிலர் நகை வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் பண முதலீடு வர்த்தகத்தில் இருப்பார்கள். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். பூமி, வாகனம் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார். தன் குலத்தில் பெரிய மனிதராக இருப்பார். பூமி, வீடு இருக்கும். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் நிறைந்தவராக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் பயணம் செய்து, பணம் சம்பாதிப்பார்.

செவ்வாய், புதன், குரு 12-ஆம் பாவத் தில் இருந்தால், இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். அடிக்கடி ஜுரம் வரும். வாழ்க்கை யின் பிற்பகுதியில் ஜாதகர் நிறைய சம்பாதிப் பார். மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டேயிருப் பார். யாரையும் மதிக்க மாட்டார். அவரிடம் ஆணவ குணம் எப்போதும் இருக்கும்.

செல்: 98401 11534

bala260424
இதையும் படியுங்கள்
Subscribe