ந்திரன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந் தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தாய் நல்லவளாக இருப்பாள். ஜாதகர் பல கலைகள் அறிந்தவராக இருப்பார். நல்ல பேச் சாற்றல் இருக்கும். நன்கு பணம் சம்பாதிப்பார். சிலர் அரசரைப்போல வாழ்வார்கள்.

‌சந்திரன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பிள்ளைகள் நல்லவர் களாக இருப்பார்கள்.பூர் வீக சொத்து இருக்கும். ஜாதகர் பிறரை ஈர்க் கும் வண்ணம் பேசு வார். பண வசதி இருக்கும். ஜாதகர் நிறைய படித்த வராக இருப்பார். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக் கும்.

சந்திரன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் வெளி யூர் சென்று வர்த்தகம் செய்வார். பயணங்கள் இருக்கும். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். முன்னோரின் சொத்து கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். பெண் குழந்தைகள் இருக்கும். ஆண் வாரிசு இருப்பது அரிது.

ss

Advertisment

சந்திரன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், சொந்த வாகனம் இருக்கும். பிரம்மாண்டமான வீடு இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பலசாலியாக இருப்பார்.

சந்திரன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார் கள். பிள்ளைகளால் நல்ல பெயர் கிடைக் கும். சிலர் தங்களுடைய செயல்களால் குடும் பத்திற்கு நல்ல பெயரைப் பெற்றுத்தருவார்கள்.

சந்திரன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பண வசதி இருக்கும். சிலர் பரும னான சரீரத்தைக் கொண்டிருப்பார்கள். சாதுர்யமாக செயல்படுவார்கள். காலில் அடிபடும். தெய்வ நம்பிக்கை இருக்கும். சுப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை இருக் கும்.

சந்திரன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந் தால், மனைவி நல்லவளாக இருப் பாள். திருமணத் திற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும். ஜாதகர் சாதுர்யமான மனிதராக இருப்பார். நிறைய படித்தவ ராக இருப்பார்.தன் தொழிலுக் காக பயணங்கள் மேற்கொள்ளுவார். வீடு, மனை, வாகனம் இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். பின்னர் வாழ்க்கை நன்றாக இருக்கும். பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே உணரக்கூடியவராக ஜாதகர் இருப்பார். சிலருக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை இருக்கும். வீட்டில் பல சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். 36 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் மன்னரைப் போல வாழ்வார். முன்னோரின் சொத்து கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள். பிள்ளை கள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஆணவ குணம் இருக்கும். பிறரை ஏமாற்றிப் பிழைக்க நினைப் பார்கள்.

சந்திரன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நியாயவாதியாக இருப்பார். எப் போதும் நேர்மையைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். சிலர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார் கள். சிலர் வக்கீலாக, நீதிபதியாக இருப்பார்கள். சிலர் தீர்க்கதரிசனம் உள்ளவர்களாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். 32 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். தெய்வ நம்பிக்கை இருக்கும். ஜாதகர் நேர்மையானவழி யில் சம்பாதிக்க நினைப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார்.

சந்திரன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டம் இருக்கும். ஜாதகர் கடுமை யாக உழைப்பார். நல்ல பணவசதி இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக் கும். ஆடம்பரமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் பிறரை மட்டம் தட்டி பேசுவார்.

பிறரின் வளர்ச்சி யைப் பார்த்து பொறாமைப்படுவார்.