சந்திரன், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், அழகான தோற்றம் இருக்கும். தர்ம சிந்தனை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பலரின் ஆதரவைப் பெற்றவராக இருப்பார். தலைவர் நிலையில் இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். கண்ணில் பிரச்சினை இருக்கும். குடும்பம் நன்றாக இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். 29 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். தைரிய குணம் இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 3-ஆம் பாவத் தில் இருந்தால், நல்ல குடும்பம் இருக்கும். ஜாதகர் நிறைய படித்த வராக இருப்பார். அதிக மாக பயணம் செய்வார். துணிச்சல் குணம் இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். அதனால், மன பிரச்சினைகள் இருக்கும். ராஜயோகம் இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், வீடு, வாகனம் இருக்கும். சந்தோஷம் இருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். நல்ல வாரிசு அமை யும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.
சந்திரன், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். அரசாங்கத் தில் நல்ல பதவி இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சிலர் பேராசிரியராக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 6-ஆம் பாவத் தில் இருந்தால், காலில் பிரச்சினை இருக்கும்.
வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டிற்குப் பயணிப்பார்கள். சிலர் பொய் பேசுவார்கள். மன்னரைப் போல வாழ்வார்கள். மன நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சந்திரன், புதன், குரு, சனி 7-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். அழகான மனைவி இருப் பாள். நல்ல வாரிசு இருக்கும். பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல பண வசதி இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். பயணம் இருக்கும். நல்ல வாரிசு அமையும்.
சந்திரன், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாத கர் பணக்காரராக இருப்பார். வீடு, வாகனம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாத கர் தன் தந்தையின் பேச்சைக் கேட்பார். நன்கு படித்தவராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். பல சிக்கல்கள் இருக்கும். 34 வயதிற் குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். தைரிய குணம் இருக் கும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும். வாழ்க்கையில் உயர் வும் இருக்கும்; தாழ்வும் இருக் கும். ஜாதகர் நிறைய படித்த வராக இருப்பார். பிறருக்கு ஆலோசனைகள் கூறுவார்.
சந்திரன், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பார். தைரிய குணம் இருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். வயிற்றில் பிரச்சினை இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக் கும். ஜாதகர் வெளியூரில் சென்று நன்றாக வாழ்வார்.
நன்கு சாப்பிடு வார். நன்கு தூங்கு வார். வாழ்க்கை யில் சிக்கல்கள் இருக்கும்.
செல்: 98401 11534