புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பண வரவு இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். தலைவ- வரும். ஜாதகர் வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார். தைரியசா-யாக இருப்பார்.

புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சீதளம் இருக்கும். சுவாச நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பயணம் இருக்கும். சிலர் கொடுக்கல்- வாங்கல் வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள். சிலர் வாசனை பொருட்களை விற்கும் வர்த்த கத்தில் இருப்பார்கள். சிலர் பூ வர்த்தகத்தில் இருப்பார்கள்.

புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். எந்தத் தொழிலைச் செய்தாலும், பணம் சம்பாதிப்பார். சிலர் குருநாதரைப்போல உபதேசம் செய்வார்கள். சொந்த வீடு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

ss

பெற்றோரால் சந்தோஷம் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். நல்ல அரசு பணியில் இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சிலர் பெரிய குருநாதராக இருப்பார்கள். சிலர் சிறந்த சொற்பொழிவு செய்பவராக இருப்பார்கள். சொந்த வீடு, வாகனம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

Advertisment

புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கா-ல் அடிப்படும். சிலருக்கு கா-ல் தழும்புகள் இருக்கும். சுவாச நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஆடம்பர செலவுகள் இருக்கும். பல பெண்களுடன் ஜாத கருக்கு பழக்கம் இருக்கும். சிலர் பெரிய சார்ட்டட் அக்கவுண்டன்டாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். 38 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பெண் மோகம் இருக்கும். படிப்பில் கவனம் இருக்காது. அதனால், பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தொழிலுக்காக தைரியமாக கடன் வாங்குவார். அழகான தோற்றம் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். துணிச்சல் குணம் இருக்கும். ஆளுக்குத் தகுந்தாற்போல் பேசுவார். அடிக்கடி பயணம் இருக்கும். சிலர் தர்மகுருவைப்போல பேசுவார்கள்.

Advertisment

புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் புண்ணியம் செய்த மனிதராக இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். ஆன்மிக பயணம் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியராக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். 28 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். பணக்காரராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். தந்தையால் சந்தோஷம் இருக்கும். சகோதரர்களால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். அவற்றில் நல்ல வருமானம் வரும்.வர்த்தகம் சம்பந்தமாக வெளியூர்களுக்குப் பயணம் செய்து பணம் சம்பாதிப்பார்.

புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். ஜாதகர் வெளியூருக்குச் சென்று பெயர், புகழுடன் இருப்பார். 42 வயதிற்குப் பிறகு, நல்ல பண வரவு இருக்கும். வாரிசுகள் வெளியூர் அல்லது வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும்.

செல்: 98401 11534