செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்தால், வாழ்க்கை கடுமையாக இருக் கும். கஷ்டங்கள் இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். முகத்தில் பிரச் சினை இருக்கும். சிலரின் வாழ்க்கையில் அவமானப்படும் சம்பவங்கள் நடக்கும். சிலர் பல இடங்களிலும் பணியாற்ற வேண்டியதிருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். சகோதரர் களுக்கு இடையே உறவு சரியாக இருக் காது. கடன் பிரச்சினை இருக்கும். 28 வயதிற்குப்பிறகு பரவாயில்லாத வகை யில் பண வரவு இருக்கும். 32 வயதிற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் மனைவி யிடம் கடுமையாக பேசுவார்.
செவ்வாய், புதன்,
செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்தால், வாழ்க்கை கடுமையாக இருக் கும். கஷ்டங்கள் இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். முகத்தில் பிரச் சினை இருக்கும். சிலரின் வாழ்க்கையில் அவமானப்படும் சம்பவங்கள் நடக்கும். சிலர் பல இடங்களிலும் பணியாற்ற வேண்டியதிருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். சகோதரர் களுக்கு இடையே உறவு சரியாக இருக் காது. கடன் பிரச்சினை இருக்கும். 28 வயதிற்குப்பிறகு பரவாயில்லாத வகை யில் பண வரவு இருக்கும். 32 வயதிற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் மனைவி யிடம் கடுமையாக பேசுவார்.
செவ்வாய், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். இளமையில் பல சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். வீட்டில் யாராவது ஒருவருக்கு மனநோய் இருக்கும். பெற்றோருடன் சுமாரான உறவு இருக்கும். கணவன்- மனைவி உறவு சுமாராக இருக்கும். ஜாதகர் அதிகமாக பயணம் செய்து, பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார்.
செவ்வாய், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந் தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். பூமி, வாகனம் இருக்கும். கோப குணம் இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்து, பணம் சம்பாதிப்பார். சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். சிலர் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். சிலர் கைத்தொழில் மூலம் பணம் ஈட்டுவார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு ரத்தத்தில் பிரச்சினை இருக்கும். முதல் வாரிசுக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும்.
செவ்வாய், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு உடலில் ஏதாவது குறை இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். எனினும், வீட்டில் சந்தோஷம் இருக்காது. சிலர் வெளியூரில் வசிப்பார்கள். பித்த நோய் இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். அனைவரிடமும் சண்டை போடுவார். அதிகமாக கோபப்படுவார். அதன்காரணமாக சில காரியங்கள் கெடும்.
செவ்வாய், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு உடல் நல பாதிப்பு இருக்கும். சிலர் பிறரிடம் சண்டை போடுவார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
பண வசதி இருக்கும். வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கோப குணம் இருக்கும். காலில் நோய் இருக் கும். வாரிசுகள் நன்றாக இருப் பார்கள்.
செவ்வாய், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். கோப குணம் இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார் கள். நல்ல பணவரவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ள வராக இருப்பார். பல தொழில் களைச் செய்து, பணம் சம்பாதிப் பார். சிலர் மரவேலை செய்பவர் களாக இருப்பார்கள். சிலர் மெக்கானிக்காக இருப்பார்கள். சிலர் வெளியூர் அல்லது வெளி நாட்டில் வியாபாரம் செய்வார் கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.
செவ்வாய், புதன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிகமாக வரும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கணவன்- மனைவி சண்டை நடக்கும். இருவரும் பிரிந்து வாழ வேண்டிய சூழல்கூட உண்டா கும். சிலருக்கு மறுமணம் நடக் கும். ஆடம்பரமாக வாழ்வார் கள். சிலர் கடன்காரர்களாக ஆவார்கள். ஜாதகர் அவசிய மற்றதைப் பேசி, அனைவரிட மும் சண்டை போடுவார்.
செல்: 98401 11534