செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(21.02.25)

/idhalgal/balajothidam/what-will-happen-if-mars-mercury-jupiter-and-venus-are-same-position210225

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். பணக்காரராக இருப்பார். பல வியாபாரங்களைச் செய்வார். பிறரை ஏமாற்றும் குணம் எப்போதும் இருக்கும். பிற பெண்களுடன் தொடர்பு இருக் கும். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் நிறையப் படித்த வராக இருப்பார். ஆடம்பர வாழ்க்கை இருக்கும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும்.

ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

gg

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் வெளியூரில் சென்று

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். பணக்காரராக இருப்பார். பல வியாபாரங்களைச் செய்வார். பிறரை ஏமாற்றும் குணம் எப்போதும் இருக்கும். பிற பெண்களுடன் தொடர்பு இருக் கும். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் நிறையப் படித்த வராக இருப்பார். ஆடம்பர வாழ்க்கை இருக்கும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும்.

ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

gg

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் வெளியூரில் சென்று வாழுவார். நிறைய படித்தவ ராக இருப்பார். தலையில் முடி குறைவாக இருக்கும்.

ஈர-ல் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சொந்தத்தில் வாகனம் இருக்கும். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள். அங்கு நல்ல பண வரவு இருக்கும். சிலர் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகம் செய்வார்கள்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணமிருக் கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் அரசிய-ல் இருப்பார்கள். சிலர் கட்டட கான்ட்ராக்டர்களாக இருப்பார்கள். சிலர் பழ வியாபாரியாக இருப்பார்கள்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமான மனிதராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு திருமண விஷ யத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் மனைவி யுடன் விவாதம் செய்வார்கள். சிலருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும். அதற்காக செலவு செய்வார்கள்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் தன்னைவிட கீழான நிலையிலுள்ள பெண்களுடன் பழகு வார். வீண்செலவுகள் இருக்கும். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். ஜாதகர் கம்பீரமாக பேசுவார். நல்லவரைப்போல நடிப்பார்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் உள்ளவராக இருப்பார். பலசா-யாக இருப் பார். கோப குணம் இருக்கும். விபத்து அவ்வப் போது நடக்கும். மின்சக்தி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். நீர் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கோபம் வரும். வெளியூர் அல்லது வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வர்த்தகம் நடக்கும். ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். தைரிய குணம் கொண்ட வராக இருப்பார். பிறரை மட்டம் தட்டி பேசுவார். தாயுடன் சுமாரான உறவு இருக்கும். ஜாதகர் தன் சகோதரர்களை மதிக்க மாட்டார்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். நல்ல பண வரவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். ஜாதகருக்கு பெற்றோருடன் சரியான உறவு இருக்காது.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந் தால், ஆணவ குணமிருக்கும். கோபம் வரும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது. சிலர் தங்களின் பேச்சால் நன்கு நடக்கக்கூடிய காரியங்களைக் கெடுத்துக் கொள்வார்கள். எனினும் சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.

சிலர் தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி களை விட்டுவிட்டு, வீணான செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். கோபம் அதிகமாக வரும். அதனால் பிரச்சினைகள் ஏற்படும். கண்ணில் நோய் இருக்கும். சிலர் வெளியூரில் சென்று, பணம் சம்பாதிப்பார்கள்.

bala210225
இதையும் படியுங்கள்
Subscribe