செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத் தில் இருந்தால், பண வரவு குறைவாக இருக்கும். ஆனால், ஜாதகர் புகழ்பெற்ற மனிதராக இருப்பார். வீட்டில் பிரச்சினை இருக்கும். வெளியே கள்ளத் தொடர்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வெளியூரில் சென்று தொழில் செய்ய வேண்டியதிருக் கும். கோபம் வரும். சிலருக்கு தோல்நோய் இருக்கும்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் முக்கியமான இடங்களில் பேசும்போது, பயந்துகொண்டே பேசுவார். அதனால், வாய்ப்பு கை நழுவி போய்விடும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலர் மெக்கானிக்காக இருப்பார்கள். ஜாதகர் தன் காரியத்தில் மிகவும் கவனமாக இருப்பார். பணவரவு இருக்கும். நல்ல வாரிசு அமையும்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கை யில் சிக்கல்கள் இருக்கும். சிலர் துறவியைப்போல வாழ்வார் கள். அதிக பயணங்கள் இருக்கும். குடும்பச்சுமை அதிகமாக இருக்கும்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் நிறைய படித்தவராக இருப்பார்கள். எனினும், சந்தோஷம் இருக்காது. பெண்களுக்கு வயிற்றில் நோய் இருக்கும். ஆண்களுக்கு பித்தம், அல்ஸர் இருக்கும்.
சிலர் வெளியூர் சென்று வாழ்ந்து, பணம் சம்பாதிப்பார்கள்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு பெரியநோய் இருக்கும். அதிக பயணங்கள் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. இருந்தால், அவர்களால் சந்தோஷம் இருக்காது.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் சந்தோஷம் இருக்காது. கோப குணம் இருக்கும். அடிக்கடி கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும். சிலர் எப்போதும் காம எண்ணங்களுடன் இருப்பார்கள்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் வெளியூரில் சென்று, பணம் சம்பாதிப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். எனினும், சந்தோஷம் இருக்காது.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். பல தொழில்களைச் செய்வார். இளமையில் பல சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு தந்தையுடன் சரியான உறவு இருக்காது. சிலர் கொடுக்கல்- வாங்கல் தொழிலில் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சிலர் விவசாயிகளாக இருப்பார்கள். சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். கோப குணம் இருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். 42 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் பெரிய பதவியில் இருப்பார்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பயணம் இருக்கும். கோப குணம் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் கைத்தொழிலில் திறமை வாய்ந்தவராக இருப்பார். சிலர் ஓவியராக இருப்பார்கள். சிலர் ஆசாரியாக இருப்பார்கள். சிலர் நகைத் தொழிலில் இருப்பார்கள். சிலர் போக்குவரத்துத் தொழிலில் இருப்பார்கள். பண வரவு இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். இல்வாழ்க்கையில் அமைதியே இருக்காது. கள்ளத் தொடர்பு இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். ஆணவ குணம் இருக்கும். பிடிவாத குணம் இருக்கும்.
செல்: 98401 11534