செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நேர்மையானவராக இருப்பார். ஆனால், பணம் இருக்காது. பணம் சம்பாதிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு தந்தை இருக்க மாட்டார். சிலருக்கு இளமையில் பல சிரமங்கள் இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் விவாதம் நடக்கும். முகம் பெரியதாக இருக்கும். அழகான தோற்றம் இருக்காது. முகத்தில் தழும்பு அல்லது அம்மை நோயின் அடையாளம் இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

00

செவ்வாய், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களுடன் விவாதம் இருக்கும். ஜாதகர் வெளியூருக்குச் சென்று வாழ்வார். துணிச்சல் குணம் இருக்கும். சிலருக்கு தம்பி, தங்கை இருக்க மாட்டார்கள். சிலர் பயண ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் பேச்சாளர்களாக இருப்பார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும்‌. சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். ஜாதகர் தன் மாமனார் வீட்டை நம்பி வாழக்கூடாது. ஆணவ குணம் இருக்கும். கடவுள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 38 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Advertisment

செவ்வாய், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் காவல் துறையில் இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.

ஆனால், படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. சிலர் தர்மத்திற்கு எதிராக பேசுவார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு காலில் அடிபடும். பணம் சம்பாதிப்பதற் காக அலைச்சல் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். முதுகுத்தண்டில் நோய் இருக்கும். கடுமையாக உழைத்து வாழ்க்கையை நடத்த வேண்டியதிருக்கும்.

Advertisment

செவ்வாய், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் ஜாதகர் விவாதம் செய்வார். மனைவி நல்லவளாக இருப்பாள். ஆனால், தேவையற்ற பிரச்சினைகளை ஜாதகர் உருவாக்குவார். வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும்.பெண் மோகம் அதிகமாக இருக்கும். வீண் செலவுகள் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். உடல்நல பாதிப்பு இருக்கும். ஜாதகர் விவசாயம் செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். தந்தையுடன் வாதம் செய்வார். வெளியூரில் சென்று வாழ்வார். அங்கு பணம் சம்பாதிப்பார். பெண் மோகம் இருக்கும். ஜாதகர் சில நேரங்களில் ஞானியைப்போல பேசுவார்.

செவ்வாய், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பணம் சம்பாதிப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.

சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். ஜாதகர் மற்றவர்களை மதிக்க மாட்டார். ஆணவ குணம் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் சொந்தமாகத் தொழிற்சாலை வைத்திருப்பார்கள். சிலர் கல்லூரி யில் அறிவியல் ஆசிரியராக இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். வாரிசு பிறப்பதில் பிரச்சினை இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவருடனும் வாதம் செய்வார். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் தடங்கல்கள் இருக்கும். 42 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். வாரிசுகள் வெளியே சென்று வாழுவார்கள். நல்ல மனைவி அமைவாள்.

செல்: 98401 11534