வகிரகங்களில் தலையாய கிரகமான சூரியன் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகும். சூரியன் பலம்வாய்ந்த ஒரு உஷ்ண கிரகமாகும். நவகிரகங்களில் அதிக உஷ்ண கிரகமான சூரியன் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர ஒரு வருடகாலம் எடுத்துக்கொள்கிறார். ஒரு ராசியில் ஒரு மாதகாலம் தங்கும் கிரக மான சூரியன் அதன் அருகே மற்ற கிரகங்கள் வருகின்றபொழுது சூரியனுடன் இணையும் கிரகங்கள் பலம் இழக்கிறது.

சூரியன் உச்சம்பெறக்கூடிய மாதமான சித்திரை குறிப்பாக- ஏப்ரல், மே மாதங் களில் சூரியனின் வெப்பத்தை வெகு தொலைவில் இருக்கக்கூடிய நம்ளே தாங்கமுடியவில்லை என்றால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கக்கூடிய கிரகங்களின் நிலையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஜாதகம் கணிக்கின்றபொழுது சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் இருக்கின்றபொழுது அக்கிரகத்திற்கு அருகில் அஸ்தங்கம் என குறிப்பிடுவார்கள். சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமைந்து அஸ்தங்கம் பெறுகின்றபொழுது அக்கிரகத்தின் சக்தியை இழக் கின்றது. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட தொலைவில் சூரியனுக்கு இருந்தால் அஸ்தங்கம் அடையும் அதனைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் பார்ப்போம்.

சூரியனுக்கு மிக அருகில் முன்பின் 12 டிகிரிக்குள் சந்திரன் இருப்பது நல்லது அமைப்பு இல்லையென்று ஒரு கருத்து உண்டு.

பொதுவாக சூரியனுக்கு மிக அருகில் சந்திரன் இருக்கின்றபொழுது அமாவாசை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பிறப்பவர்களுக்கு மனக் குழப்பம், தெளிவில்லாத நிலை ஏற்படுகிறது.

Advertisment

aa

சூரியனுக்கு முன்பின் 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைவது அவ்வளவு நல்லதல்ல. இந்த நேரத்தில் பிறப்பவர்களுக்கு உடன்பிறப் புக்கு தோஷம் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந் தால் கடுமையான களத்திர தோஷம் உண்டாகி இல்லற வாழ்வில் சில பிரச்சினைகள், ஹார்மோன்ரீதியான உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக சூரியன், செவ்வாய் இணைந்து இருப்பது இருதார தோஷம் என்று ஒரு கருத்தை உண்டு.

சூரியனுக்கு 13 டிகிரிக்குள் புதன் இருப்பது அஸ்தங்கம் ஆகும். பொதுவாக சூரியன் புதனை ஒட்டிய சஞ்சரிப்பதால் புதன் அஸ்தங்கம் அடைவது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்து வது இல்லை, புதன், சூரியன் சேர்க்கை என்பது நிபுண யோகத்தை ஏற்படுத்துவதால் கல்வியில் சாதிக்கக்கூடிய ஒரு அதிசயத்தை உண்டாக்கிறது. கல்வியில் நல்ல நிலை இருந்தா லும் மாமன்வழியில் சில மனக்கவலைகள் உண்டாகிறது.

சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு அமையப் பெற்றால் குரு அஸ்தங்கம் பெறுவார். குரு அஸ்தங்கம் பெற்றால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், பொருளாதாரரீதியாக ஏற்ற இறக்கமான நிலை ஏற்படும்.

சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமையப்பெற்றால் அஸ்தங்கம் பெறுவார். இப்படி அமையப்பெற்றவர்களுக்கு இல்லற வாழ்வில் பிரச்சினை, பெண்கள்மூலம் நிம்மதி குறைவு, கண் சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு கள், சக்கரை வியாதி ஏற்படுகிறது.

சூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள் சனி அமையப்பெற்று அஸ்தங்கம் பெற்றால் தந்தைக்கு உடல் பாதிப்பு, வயது மூத்தவர் களிடம் கருத்து வேறுபாடுகள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குறிப்பாக சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப்பெற்று அஸ்தங்கம் பெற்றால் தோஷம் என்றாலும் சூரியனுக்கு மிக அருகில் 1 அல்லது 2 டிகிரிக்குள் இருந் தால் மட்டுமே அதிகமாக பாதிப்பு ஏற்படு கிறது. மற்றபடி சற்று இடைவேளையோடு இருந்தால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்து வதில்லை.

அனைத்து கிரகங்களையும் ஈர்க்கக்கூடிய சக்தி சூரியனுக்கு இருந்தாலும் சூரியன் ராகு வுக்கு மிக அருகில் இருந்தால் சூரியன் பலவீனம் அடைந்து விடுவார். அதனை தான் நாம் கிரகண தோஷம் என்று கூறுவோம். அப்படிப்பட்ட நிலை இருக்கின்றபொழுது சூரியனுக்கு முன்பு ராகு இருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தைவழி உறவினர்கள்வகையில பகை, உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்புகள் ஏற்படுகிறது.

அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்கள் காரகத்துரீதியான பலன்களை ஏற்படுத்துவதில் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்றா லும் அக்கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அஸ்தங்க தோஷம் இன்றி நற்பலனை தரும்.

சூரியனுக்கு மிக அருகில் சுக்கிரன் இருக் கின்றபொழுது களத்திரகாரகன் சுக்கிரனே அஸ்தங்கம் அடைவதால் கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் அடைகின்ற காலங்களில் திருமண சுபகாரியங்கள் செய்யாமல் இருக்கக் கூடிய பழக்க வழக்கங்கள்கூட நடைமுறையில் உண்டு.