ஜாதகம் பார்க்க ஜோதிடரை நாடுபவர்களின் முதன்மையான பிரச்சினைகளில் கடன் பிரச்சினையும் ஒன்று. கடன் வாங்கி காதுகுத்து, திருமணம் நடத்தும்போதும் வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யும்போதும், கார் வாங்கும்போதும், ஜோதிடர் என்ற நண்பரின் ஆலோசனை பலருக்குத் தேவைப் படுவதில்லை. கடன் என்ற அரக்கனின் வாயில் அகப்பட்டு மீளாத்துயரில் சிக்கும் சமயத்தில் ஜோதிடரின் ஆலோசனையை நம்பி வருவார்கள்.
"உங்களை நான் கும்பிடும் தெய்வ மாக நம்பி வந்துள் ளேன். எப்படியா வது கடன் பிரச் சினையிலிருந்து மீட்டுவிடுங்கள்'' என்று புலம்புவார்கள். இந்த வசனங் களை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை. பலரின் வாழ்க்கை யில் நடக்கும் நிதர்சனமான நிகழ்வுகள் இதுதானே. கடன் வாங்க செலவுசெய் யும் தொகை யில் சிறு துளியை ஜோதிடருக்குக் காணிக்கையாகக் கொடுத் தால், கடன் வாங்கினால் மீள முடியுமா என்ற கேள்விக்கு விடை கடன் வாங்கும்முன்பே தெரிந் திருக்கும் அல்லவா?
கடனால் துன்பத்தை அனுபவிக்கú வண்டும் என்ற கர்மா அதிகமாகத் தன் பணியை நடத்தும்போது ஜோதிடரை நாடவேண்டும் என்ற ஞானம் ஏற்படாது. இந்தக் கட்டுரையில் கடன் உருவாகும் காலம், கடன் தீரும் காலம் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ஆமிடம் மட்டுமே கடனை உற்பத்தி செய்யும் என்ற தவறான புரிதலில் பலர் உள்ளார்கள். மறைவு ஸ்தானமான 6, 8, 12-ஆமிடங்களுக்கும் கடனை அதிகரிக்கும் சக்தி உள்ளது. என் அனுபவத்தில் 6-ஆமிடம் என்பது தீரும் கடன். 8-ஆமிடம் என்பது தீராத கடன். 8-ஆமிடம் என்பது 6-ஆம் பாவத் தின் பாவாத்பாவம். 6-ஆமிடத்திற்கு 8-ஆம் பாவக சம்பந்தம் இருந்தால் கடனுக்கு பயந்து தீராத நோய், அவமானக் கடன் உருவாகும். பலர் அசுப கிரகங் கள் 6-ஆமிட மான மறைவு ஸ்தானத்தில் நின்றால் கடன், நோய் நிவர்த்தி என்றுதான் இன்று வாதிட்டு வருகிறார்கள். அதிகப்படியான ஜோதிட விதிகள், அனுபவத்தில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை. அதேபோல் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
அனுபவமே சிறந்த ஆசான்.
நாம் ஒரு ஆய்விற்காக, ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் 6-ஆம் பாவகத்தில் சனி உள்ளதாக எடுத்துக்கொள்வோம். எந்த லக்னமாக இருந்தாலும் பரவாயில்லை. 6-ல் உள்ள சனிபகவான் தனது 3-ஆம் பார்வையால் 8-ஆமிடமான ஆயுள், ஆரோக்கியம், வம்பு, வழக்கு ஸ்தானத்தைப் பார்ப்பார். 7-ஆம் பார்வை 12-ஆமிடமான விரயம், அயன, சயன, வெளிநாட்டுப் பயண ஸ்தானத்தில் பதியும். 10-ஆம் பார்வை 3-ஆமிடமான முயற்சி ஸ்தானத்தில் விழும். 6-ஆமிடத்தில் நிற்கும் சனிபகவன் 3, 6, 8, 12 எனும் மறைவு ஸ்தானங்களை முழுமையாக இயக்குவார்.
3-ஆமிடம் என்பது ஜாமின், டாக்கு மென்ட்; 6-ஆமிடம் என்பது கடன், நோய், உத்தியோகம். 8-ஆமிடம் என்பது வம்பு, வழக்கு, தீராத கடன், நோய், தீர்க்கமுடியாத வழக்கு, ஆயுள், அவமானம், சர்ஜரி, கண்டம்.
12-ஆமிட என்பது தலைமறைவு அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, தூக்கம், பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் புண்ணிய காரியங் கள், பிறருக்கு அடிமையாக வாழ்தல்.
சனி நின்ற இடம் புனிதம்; பார்த்த இடம் பாழ் என்பது பழமொழி. 6-ல் நிற்கும் சனி பகவான் தனது 3-ஆம் பார்வையால் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் 8-ஆம் பாவக காரகத்துவங்களான அவமானம், வம்பு, வழக்கு, தீராத நோய் அழியவேண்டும்.
ஆனால் புதிய பிரச்சினைகள், இனம் புரியாத நோய், அறுவை சிகிச்சை, நோயால் கடன் உருவாகுதல் அல்லது கடனுக்கு பயந்து நோய் அதிகரிக்கும். என் அனுபவத் தில் இதுபோன்ற பல ஜாதகத்தைப் பார்த்தி ருக்கிறேன்.
12-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிலர் வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாமல் முடமாவார்கள் அல்லது படுத்த படுக்கையாவார்கள். அல்லது கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உடன் பிறந்தவர்களால் மன சஞ்சலம் அல்லது எல்லைத் தகராறு, பாகப் பிரிவினை யில் முரண்பாடு, டாக்குமென்ட் சம்பந்தப் பட்ட பிரச்சினை உருவாகும்.
6-ல் சனி நிற்கும் பலர் சனி தசை, புக்திக் காலங்களில் யாருக்காவது பணத்தைக் கடன் கொடுத்தால் அவர்களுக்கு அந்தப் பணம் வராது; ஏமாற்றம்தான் வரும். அதேசமயம் யாரிடத்திலாவது பணத்தைக் கடன் வாங்கினார்கள் என்றால் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்கமுடியாது மிகவும் கஷ்டப் பட்டுவிடுவார்கள். அதாவது கடன் கொடுத் தால் கொடுத்த பணம் இவர்களுக்குத் திரும்ப வராது; கடன் வாங்கினால் வாங்கிய பணத்தை அவ்வளவு எளிதாக திரும்பக் கொடுக்கமுடியாது. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் கண்டிப்பாக இவர்கள் சிக்குவார்கள்.
அதேபோல் ஏலச்சீட்டு, நகை அடமானம், வட்டிக்குப் பணத்தைக் கொடுப்பது அல்லது வட்டிக்கு பணத்தை வாங்குவது, கிரடிட் கார்டு, ஷேர் மார்க்கெட், சூதாட்டம் போன்றவற்றில் பணத்தைப்போட்டு இழப்பது போன்ற ஏதேனும் ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இவர்கள் சிக்குவார்கள். மேலும் இவர்கள் நகைகளை அடமானம் வைத்தால் அவ்வளவு எளிதாக மீட்கமுடியாது வட்டிக் குப் பணத்தைக் கொடுக்கும் தொழிலை என்றைக்குமே இவர்கள் செய்யக்கூடாது மீறி செய்தார்கள் என்றால் ஏமாற்றப்படு வார்கள். அதேபோல் இவர்கள் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடவேகூடாது. மேலும் இவர்கள் வம்பு வழக்கு அடிதடி சண்டைகள், கோர்ட், கேஸ் இதுபோன்ற விஷயங்களில் தலையிட் டார்கள் என்றால் தீர்ப்பு, நியாயம் இவர் கள் பக்கம் சாதகமாக வராது. அதாவது இவர்கள் மற்றவர்கள்மீது வழக்கு போடக் கூடாது.
6-ல் சனி உள்ளவர்கள் சனி தசை, புக்திக் காலங்களில் மேலே கூறிய நிகழ்வுகள் அனைத் தும் நடந்தது நூறு சதவிகிதம் உண்மை என்பார்கள். மாறாக பூர்வீகத்தைவிட்டு வெளியேறி வெளியூர், வெளிநாட்டில் நல்ல கௌரவமான உத்தியோகத்தில் வாழ்பவர் களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. அவர் களின் கல்விச் சான்றிதழ்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும். ஒப்பந்த அடிப்படையான உத்தியோகம் என்பதால் எளிதில் வேலையை மாற்றமுடியாது. ஆறாமிடம் மற்றும் அதன் அதிபதிக்கு குரு பார்வை இருந்தால் எதிரிகளின் கை ஓங்கியிருக்கும். கடன் பெருகும். விபத்துகள் உண்டாகும்.
அதேபோல் லக்னாதிபதி, 6-ஆம் அதிபதி சம்பந்தம், 6, 10-ஆமிட சம்பந்தம் தொழில் கடனை உற்பத்தி செய்யும். தொழில் சார்ந்த விஷயங்களில் அடுத்தவர்களால் ஏமாற்றம் அடைவார்கள். தொழிலில் அதிக நஷ்டம் ஏற்படும். தொழிலுக்கு ஒழுங்காக வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள். வேலையாட்கள் மூலமாக பிரச்சினைகள், ஏமாற்றங்கள், தர்ம சங்கடங்கள், துரோகங்கள், நஷ்டங்கள் ஏற்படும். தொழில் சார்ந்து ஒரு அசிங்கம், ஒரு அவமானம் இவர்கள் வாழ்க்கையில் சந்தித்தே தீருவார்கள். அல்லது சுய ஜாதகப் படி சரியான தொழிலைத் தேர்வுசெய்ய மாட்டார்கள்.
கடன் உருவாகும் காலம் பணத்தின் அருமையை மற்றவரிடம் கடன் கேட்கும்போது அறிந்துகொள்ளலாம். ஒரு ஜாதகத்தில் ஆறாம் பாவகமே, ஆறாம் அதிபதியே கடனை உருவாக்கக்கூடிய அமைப்பைக் கொடுக்கும். ஆறாம் பாவகத்திற்கும், 6-ஆம் அதிபதிக்கும் சுப கிரகத் தொடர்பு இருக்கக்கூடாது. 6-ஆம் அதிபதி, லக்னாதிபதி, தன, லாபாதி களைவிட வலுக்கவே கூடாது. அவயோக தசா புக்திக்கேற்றவாறும், கோட்சாரத்திற்கு ஏற்றவாறும் அந்தந்த காலகட்டங்களில் கண்டிப்பாகக் கடன் ஏற்பட்டே தீரும்.
ஜாதகத்தில் ஆறாம் அதிபதி வலுத்து குருவின் பார்வை பெற்றால் கேட்டவுடன் கடன் கிடைக்கும். 6-ஆம் அதிபதியோ, 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ஆம் அதிபதியின் நட்சத்திரங்களோதான் ருண, ரோக, சத்ரு, ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ஆம் பாவக காரகர்கள் சனி, செவ்வாய். ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12 ஆகிய நான்கு பாவகங்களும் துர் ஸ்தானங்கள் அல்லது மறைவு ஸ்தாதானங்கள் ஆகும். ஒருவர் கர்மவினைப்படி அனுபவிக்கவேண்டிய துன்பங்களைப் பரிபூரணமாகத் தருவது இந்த மறைவு ஸ்தானங்களே.
இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பொறா மல் வலுக் குன்றியவர்களுக்கு விபரீத ராஜயோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம், புதையல் கிட்டும். இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். மறைவு ஸ்தானங்கள் வலுப் பெற்றவர்களுக்கு நோயும் கடனும் தேடிவரும். மனித வாழ்வையே தடம்புரட்டிப் போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கு உண்டு.
தசாபுக்தியோடு தொடர்புபெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாக இருக்கும். மாரக தசையோடும் புக்தியோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்புபெறும் கோட்சார கிரகங்கள் சாமானியர்களைக்கூட உருத்தெரியாமல் செய்துவிடும் வலிமை உண்டு. ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ஜாதகருக் குக் கடன் ஏற்படுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம கர்மவினைகளே. கடன் தொடர் பான அனைத்து பிரச்சினைகளையும்- அதாவது கடன் ஏற்படும் காலம், அதனால் உருவாகும் மன உளைச்சல் மற்றும் வம்பு வழக்கு, கடனிலிருந்து மீளும் காலம் ஆகிய வற்றை ஒருவரின் ஜனனகால ஜாதகத்தின் கீழ்க்காணும் காரணிகளே தீர்மானம் செய்கிறது. அவை ஆறாமிடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுக்தி, அந்தர காலங்களில் கடன் உருவாகும்.
ராகு- கேதுக்களின் தசாபுக்திகள் மற்றும் ராகு- கேதுக்களுடன் சேர்ந்த கிரகங்களின் தசாபுக்திகள் கடனை ஏற்படுத்துகின்றன.
எந்த லக்னமாக இருந்தாலும் புதன் தசை, புதன் புக்திகளில் கடன் ஏற்படுகிறது.
ஆறாம் பாவகத்துடன் தொடர்புடைய எல்லா கிரகத்திற்கும் கடனை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது.
ஆறாம் பாவகத்தை அல்லது ஆறாம் அதிபதியைப் பார்த்த கிரகம் கடன் வாங்கத் தூண்டும்.
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கும், லக்னாதி பதிக்கும் பாவ கிரகங்கள் சம்பந்தம் இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக் காவது கடன்பட்டுக்கொண்டே இருப்பார்.
1, 6-ஆம் அதிபதி பரிவர்த்தனை- ஆயுள் முழுவதும் கடன் இருக்கும்.
2, 11-ஆம் அதிபதி 6-ல்- குடும்பம் கடனில் முழ்கும்.
4-ஆம் அதிபதி 6-ல்- சொத்து கடனில் மூழ்கும்.
6-ஆம் அதிபதி வலுப்பெற்று 1, 8 சம்பந்தம் பெற்றால் தீராத கடன்.
6-ஆம் அதிபதி 11-ஆம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் கொடுத்த கடன் திரும்ப வரும். கடன் அடையும்.
லக்னாதிபதி பலமிழந்து 6-க்குடைய வன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும்.
பரிகாரம்
ஒருசிலருக்கு வாங்கிய கடனைத் திருப்பக் கட்டும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு கடனே வாழ்க்கையை முடித்து விடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ அதன்படிதான் கடன் வாழ்க்கை- கடன்படாத வாழ்க்கை அமைகிறது. கடன் என்றாலே கர்மாதான். ஒருவர் கடனை முழுமையாகத் தீர்க்க உபரி வருமானம் பெருகவேண்டும். உபரி வருமானம் வரத்துவங்கினால் மட்டுமே கடனிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கும். சுய ஜாதகரீதியான தசை, புக்தி எவ்வளவு சுமாராக இருந்தாலும், தொழில் ஸ்தானமான 10-ஆமிடமும், லாப ஸ்தானமான 11-ஆமிடமும் தசாபுக்தியில் வலுவாக இயங் கும் காலங்களில் உபரி வருமானம் உண்டாகி கடன் தீரும். அதேபோல் கோட்சாரத்தில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும் காலங் களில் எவ்வளவு கடன்சுமை இருந்தாலும் பனிபோல் விலகும்.
செல்: 98652 20406