ஒரு மனிதரைப் பார்த்து பிறர் யாராவது, "உனக்கு மூளை இருக்கா?' என்று கேட்டால் அவர் மிகவும் கோபமாகிவிடுவார். "யாரைப் பார்த்து இப்படி கேட்கலாம்?'
என சண்டைக்கு வந்துவிடுவார். ஆக, பொதுவான வாழ்க்கையில் அனைவருமே அவரவர்க்கு நிறைய மூளை, புத்திசாலித்தனம், அறிவு என இன்னபிற விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிதர்சனமாக அவரவர் அறிவின் அளவு என்னவென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
ஜோதிடம் அறிவைப் பற்றிக் குறிக்க ஐந்தாமிடத்தை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. ஐந்தாமிடம் என்பது புத்தி, எண்ணம், யூகித்தல், தெளிதல், பெருந்தன்மை, ஞானம், பகுத்தறிதல், அறிவு, சொல், முன்யோசனை, கல்வி, ஞானதிருஷ்டி, சிந்தனை, தெளிவான யோசனை என இவற்றைக் கூறும் இடமாகும்.
ஐந்தாமிடம், ஐந்தாமிட அதிபதி உச்சம்பெற்றிருந்தால் ஒரு ஜாதகருக்கு அறிவில் நிலை அதிகம் இருக்கும். ஐந்தாமிடத்தில் ஒரு கிரகம் நீசம்பெற்றிருந்தாலும் அல்லது ஐந்தாமிடத்து அதிபதி நீசம்பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு அறிவு மிகக் குறைவாகவே இருக்கும். இவர்களை முட்டாள்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். ஐந்தாமதிபதி 6, 8, 12-ல் இருந்தால் அறிவின் அளவு மிகக் குறைவாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். இவர்கள் ஞாபகசக்தி குறைந்து, மறதி அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஐந்தாமதிபதி சுபர் பார்வைஃ சேர்க்கைப்பெற்றால் கற்பூரம் போன்ற புத்திசாலித் தனம் பெற்றவர். ஐந்தாமதிபதி அசுபர் பார்வை, சேர்க்கைப்பெற்றால் எதையும் புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் ஜாதகர் சிரமப்படுவார்.
அறிவைப் பற்றி பேசும்போது நிச்சயமாக குருபகவானை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குருவின் பலமும் ஒருவரின் அறிவின் அளவைத் தெளிவாகக் கூறும். 12 லக்னத்தினருக்கும் அறிவின் அளவு எவ்வளவு எனும் கணக்கை இனி கணிக்கலாம்.
மேஷ லக்னம்
மேஷ லக்னாதிபதி செவ்வாய். இவர்களில் ஐந்தாமதிபதி சூரியன். இவர் உச்சமானால் பிறரை அடக்கியாளும் கம்பீரமான அறிவு மிகும். சூரியன் நீசமானால் மிகவும் கோழையாக, பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பார். சூரியன் ஆறில் இருப்பின் காரண காரியமின்றி சண்டையிடுவர். எட்டில் இருப்பின், இவர் சுத்தமான முட்டாள் என்று பிறர் முடிவு கட்டிவிடுவார்கள். 12-ல் இருப்பின் அதிக மறதிக்கு உள்ளாவார்கள். அறிவுக்குரிய குரு இவர்களின் நாளாமிடத்தில் உச்சமாகி இருந்தால் கல்வியறிவு மிக அதிகமாக இருக்கும். பிறருக்கு கல்வி போதிக்கும் பேராசிரியராக இருப்பார். குரு நீசமானால் புத்தி குறைபாட்டுடன் அடிமை வேளையில் இருப்பார்கள். இவர்களின் சூரியன் உச்சமானால் 50 மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். சூரியன
ஒரு மனிதரைப் பார்த்து பிறர் யாராவது, "உனக்கு மூளை இருக்கா?' என்று கேட்டால் அவர் மிகவும் கோபமாகிவிடுவார். "யாரைப் பார்த்து இப்படி கேட்கலாம்?'
என சண்டைக்கு வந்துவிடுவார். ஆக, பொதுவான வாழ்க்கையில் அனைவருமே அவரவர்க்கு நிறைய மூளை, புத்திசாலித்தனம், அறிவு என இன்னபிற விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிதர்சனமாக அவரவர் அறிவின் அளவு என்னவென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
ஜோதிடம் அறிவைப் பற்றிக் குறிக்க ஐந்தாமிடத்தை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. ஐந்தாமிடம் என்பது புத்தி, எண்ணம், யூகித்தல், தெளிதல், பெருந்தன்மை, ஞானம், பகுத்தறிதல், அறிவு, சொல், முன்யோசனை, கல்வி, ஞானதிருஷ்டி, சிந்தனை, தெளிவான யோசனை என இவற்றைக் கூறும் இடமாகும்.
ஐந்தாமிடம், ஐந்தாமிட அதிபதி உச்சம்பெற்றிருந்தால் ஒரு ஜாதகருக்கு அறிவில் நிலை அதிகம் இருக்கும். ஐந்தாமிடத்தில் ஒரு கிரகம் நீசம்பெற்றிருந்தாலும் அல்லது ஐந்தாமிடத்து அதிபதி நீசம்பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு அறிவு மிகக் குறைவாகவே இருக்கும். இவர்களை முட்டாள்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். ஐந்தாமதிபதி 6, 8, 12-ல் இருந்தால் அறிவின் அளவு மிகக் குறைவாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். இவர்கள் ஞாபகசக்தி குறைந்து, மறதி அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஐந்தாமதிபதி சுபர் பார்வைஃ சேர்க்கைப்பெற்றால் கற்பூரம் போன்ற புத்திசாலித் தனம் பெற்றவர். ஐந்தாமதிபதி அசுபர் பார்வை, சேர்க்கைப்பெற்றால் எதையும் புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் ஜாதகர் சிரமப்படுவார்.
அறிவைப் பற்றி பேசும்போது நிச்சயமாக குருபகவானை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குருவின் பலமும் ஒருவரின் அறிவின் அளவைத் தெளிவாகக் கூறும். 12 லக்னத்தினருக்கும் அறிவின் அளவு எவ்வளவு எனும் கணக்கை இனி கணிக்கலாம்.
மேஷ லக்னம்
மேஷ லக்னாதிபதி செவ்வாய். இவர்களில் ஐந்தாமதிபதி சூரியன். இவர் உச்சமானால் பிறரை அடக்கியாளும் கம்பீரமான அறிவு மிகும். சூரியன் நீசமானால் மிகவும் கோழையாக, பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பார். சூரியன் ஆறில் இருப்பின் காரண காரியமின்றி சண்டையிடுவர். எட்டில் இருப்பின், இவர் சுத்தமான முட்டாள் என்று பிறர் முடிவு கட்டிவிடுவார்கள். 12-ல் இருப்பின் அதிக மறதிக்கு உள்ளாவார்கள். அறிவுக்குரிய குரு இவர்களின் நாளாமிடத்தில் உச்சமாகி இருந்தால் கல்வியறிவு மிக அதிகமாக இருக்கும். பிறருக்கு கல்வி போதிக்கும் பேராசிரியராக இருப்பார். குரு நீசமானால் புத்தி குறைபாட்டுடன் அடிமை வேளையில் இருப்பார்கள். இவர்களின் சூரியன் உச்சமானால் 50 மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். சூரியன் நீசமானால் 10 மதிப்பெண். குரு நீசமானால் 10 மதிப்பெண். சூரியன் ஆறில் இருந்தால் 20 மதிப்பெண். சூரியன் எட்டில் இருந்தால் ஐந்து மதிப்பெண். சூரியன் 12-ல் இருந்தால் 20 மதிப்பெண். குரு ஆறில் இருந்தால் 10 மதிப்பெண். குரு எட்டில் இருந்தால் 10 மதிப்பெண். குரு பன்னிரண்டில் இருந்தால் 25 மதிப்பெண். இப்போது அவரவர் பிறப்பு ஜாதகத்தைக்கொண்டு அறிவின் அளவைக் கணக்கிட்டுக்கொள்ளவும். சூரியன் நீசமானவர்கள் சூரியனார் கோவில் சென்று வணங்கவும்
ரிஷப லக்னம்
ரிஷப லக்னாதிபதி சுக்கிரன். இவர்களின் ஐந்தாமதிபதி புதன். இந்த புதன் ஐந்தாம் இடத்திலேயே ஆட்சி மற்றும் உச்சமாவார். இவ்வாறு புதன் உச்சமானால் ரிஷப லக்னம், ரிஷப ராசியினர் கணக்கு, வியாபாரம், வணிகவியல் என உச்சபட்ச அறிவுடையவர்களாக விளங்குவார்கள். இந்த ஐந்தாம் அதிபதி புதன் நீசமானால் இவர்கள் போடும் கணக்குகள்- அது படிப்பு, வாழ்க்கை, எதிர்காலம், முயற்சி என எல்லாமே தோல்வியில் முடியும். புதன் ஆறில் இருப்பின் முன்யோசனை இன்றி கடன் வாங்கிவிட்டு, கஷ்டப்படுவார்கள். புதன் எட்டில் இருந்தால் அறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. புதன் 12-ல் இருப்பின் இவர்களின் முட்டாள்தனத்தால் காதல், கல்யாணம், வாரிசு என அனைவரிடமிருந்தும் பிரிந்து வாழ நேரிடும். குரு உச்சமானால் குயுத்தியான மூளை பெறுவார்கள். குரு நீசமானால் முரட்டுத்தனமான யோசனைகள் அதிர்ஷ்டத்தை விலகச் செய்துவிடும். ஐந்தாமதிபதி புதன் உச்சமானால் 50 மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். புதன் ஆறில் இருந்தால் 20 மதிப்பெண். எட்டில் இருந்தால் 6 மதிப்பெண். பன்னிரண்டில் இருந்தால் 10 மதிப்பெண். புதன் நீசமானால் 10 மதிப்பெண். குரு நீசமானால் 10 மதிப்பெண். குரு ஆறில் இருப்பின் 10 மதிப்பெண். எட்டில் இருப்பின் 15 மதிப்பெண். 12-ல் இருப்பின் 10 மதிப்பெண். இதை அடிப்படையாகக்கொண்டு ரிஷப லக்னம் மற்றும் ராசிக்காரர்கள் தங்கள் அறிவின் நிலையைக் கணக்கிட்டுக்கொள்ளலாம். புதன் நீசமானால் திருவெண்காடு சென்று வழிபடவும்.
மிதுன லக்னம்
மிதுன லக்னாதிபதி புதன். இவர்களின் ஐந்தாம் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் உச்சம்பெறில் இவர்களின் அறிவாற்றல் மிகவும் கௌரவம் கொணரும். அந்த அதீத அறிவு இவர்களின் தொழில்முறையில் மின்னச் செய்யும். இவர்களது புத்திசாலித்தனம் வெளிநாட்டவர்களையும் மிரளச் செய்யும். இதே சுக்கிரன் நீசம் அடைந்தால் இவர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட ஒழுங்காக கற்க இயலாது. சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்தால் இவர்களுக்கு அதிக யோசனை பீறிட்டு வருவதாக நினைத்துக்கொண்டு பின்னர் அடி வாங்குவர். சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருந்தால் இவர்களுடைய மூளையே இவர்களுக்கு எதிராகிவிடும். சுக்கிரன் 12-ல் இருந்தால் அது அவருக்கு ஆட்சி வீடு என்பதால் இவர்களது அறிவு இவர்களுக்கு வீண் அலைச்சல், வெட்டி விரயத்தை தருமே தவிர மிகவும் கெடுக்காது. குரு உச்சமானால் மிகச் சிறந்த அறிவாற்றலுடன் கூடிய பேச்சாளர் ஆகவும் நல்ல மனித வள தொடர்பாளராகவும் பண விஷயத்தில் செழிப்பானவராகவும் இருப்பர். இதே குரு நீசம் அடைந்தால் அறிவின்மை யால் பொலிவற்று எந்தவித பிடிப்பும் இன்றி வெறுமை வாழ்க்கை வாழ நேரிடும். மிதுன லக்ன ஐந்தாம் அதிபதி சுக்கிரன் உச்சமானால் 50 மதிப்பெண். சுக்கிரன் நீச மானால் 10 மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் 5 மதிப்பெண். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்தால் பத்து மதிப்பெண். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருந்தால் ஐந்து மதிப்பெண். சுக்கிரன் 12-ஆம் வீட்டில் இருந்தால் 25 மதிப்பெண். குரு ஆறாம் வீட்டில் இருந்தால் பத்து மதிப்பெண். குரு எட்டாம் வீட்டில் இருந்தால் ஐந்து மதிப்பெண். குரு பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால் பத்து மதிப்பெண். பிறந்த ஜாதகத்தைப் பார்த்து இவர்களின் அறிவின் அளவீட்டை அளவிடுங்கள். சுக்கிரன் பலம்பெற விழுப்புரம்- திருநாவலூர் பார்க்கவீஸ்வரரை வணங்கலாம். நவகிரகங் களில் சுக்கிர பகவானை வணங்கவும்.
கடக லக்னம்
கடக லக்ன அதிபதி சந்திரன். இவர்களின் அறிவு செழுமைக்குரிய ஐந்தாம் அதிபதி செவ்வாய். இவர்களது புத்திசாலித்தனம் தீக்கனல்போல் பொங்கி எழும். இவர்களது ஐந்தாம் அதிபதி உச்சம்பெற்றால் இவர்களது யோசனைகள் அனைவரையும் வசீகரிக்கும். அதிக சிந்தனை திறன் வாழ்க்கையின் தொழில் மேன்மையை உயர்த்தி வெகு கௌரவம் தரும். இவர்களது அதிரடி அறிவு மக்களை பாதுகாக்கும் வழிகளில் இருக்கும். இதே ஐந்தாம் அதிபதி செவ்வாய் நீசமானால் இவர்களது லக்னத்திலேயே நீசம் ஆவார். இவ்விதம் பிறக்கும் குழந்தைகள் அறிவு வளர்ச்சி குறைபாடுடன் இருப்பர். இவர்களை சிறப்பு பள்ளியில் சேர்க்கவேண்டியது இருக்கும். ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆறில் இருப்பின் கடவுள் நம்பிக்கை இல்லாமல் எதிர்மறை சிந்தனை கொண்டவராக இருப் பார். எட்டாம் இடத்தில் இருந்தால் சற்று பைத்தியம்போல் நடந்துகொள்வர். செவ்வாய் 12-ல் இருந்தால் இவர்களது யோசனைகள் இவர்களை பிறருடன் சண்டையிடச் செய்து தனிமைப்படுத்தும். அறிவுக்குரிய கிரகம் குரு இவர்களது லக்னத்திலேயே உச்சமடைவார். இவர்கள் நீத்துறை அல்லது மருத்துவத் துறையில் பெரிய பேரும் புகழும் பெறுவர். இதே குரு நீசம் அடைந்தால் இவரது தாழ்ந்த சிந்தனைகள் தொழில் மற்றும் இல்வாழ்க்கை யில் சண்டையிடச் செய்து நல்ல விஷயங்கள் வாழ்வில் நடக்கவிடாமல் செய்யும். கடக லக்ன ஐந்தாம் அதிபதி செவ்வாய் உச்சம்பெற்றால் 50 மதிப்பெண். செவ்வாய் நீசம் பெற்றால் ஐந்து மதிப்பெண். குரு உச்சம் பெற்றால் 50 மதிப்பெண். குரு நீசம் பெற்றால் 10 மதிப்பெண். செவ்வாய் ஆறாம் இடத்தில் அமர்ந்தால் 15 மதிப்பெண். செவ்வாய் எட்டாம் இடத்தில் அமர்ந்தால் ஐந்து மதிப்பெண். செவ்வாய் 12-ஆம் இடத்தில் அமர்ந்தால் பத்து மதிப்பெண். குரு ஆறாம் இடத்தில் அமர்ந்தால் 20 மதிப்பெண். குரு எட்டாம் இடத்தில் அமர்ந்தால் பத்து மதிப்பெண். குரு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்தால் 20 மதிப்பெண். இதனை அடிப்படையாகக்கொண்டு உங்கள் அறிவை அளந்துகொள்ளவும். செவ்வாய் நீசமானால் வைத்தீஸ்வரன் கோவில்சென்று வழிபடவும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்ன அதிபதி சூரியன் ஆவார். இவர்களின் 5-ஆம் அதிபதி குரு ஆவார். அவரே அறிவின் காரக கிரகமும் ஆவர். சிம்ம லக்ன, சிம்ம ராசியார் தனித்தன்மையுடன் விளங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் போலும். 5-ஆம் அதிபதியும், அறிவு கிரகமு மான குரு உச்சமானால், 12-ஆமிடம் எனும் விரயத்தில் உச்சமடைவார். இவர்களின் அறிவாற்றல், நிதானமாக இல்லாமல், வெகு வேகமாக, பரபரவென்று அமையும். இந்த அறிவின் துணைகொண்டு, வெளிநாடு களிலும், புகழ் பேர், பெருமை பெறுவர். இந்த புகழ், சிலசமயம் வாழ்க்கைச் சறுக்கல் களுக்கும் காரணமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த குரு நீசமானால், அவர் 6-ஆமிடமான மகரத்தில் நீசமடைவார். இவர்களின் அறிவுக் குறைபாட்டால் தொடர்ச்சியாக வேலையில் நீடிக்க இயலாது. வேறுசிலர் சற்று பைத்தியம் பிடித்ததுபோல் அலைவர். குரு 8-ஆமிடத்தில் இருந்தால், அது அவருக்கு ஆட்சி வீடாததாலால், சற்று அழுத்தமாக, மௌன சாமியார் மாதிரி இருப்பர். இவரை பார்ப்பவர்கள், சார்வாள், பக்தியில் முக்தி போய்விட்டாரா அல்லது லைட்டா பைத்தியம் முற்றி போய்விட்டதா எனத் தெரியாமல் முழிப்பர். குரு 12-ஆமிடத்தில் உச்சமடைந்துவிடுவார். சிம்ம லக்னத்தாரின் 5-ஆம் அதிபதி மற்றும் குரு உச்சமானால் 50 மதிப்பெண்கள். குரு நீசமானால் 10 மதிப்பெண்கள். குரு 6-ஆமிடத்தில் அமர்ந்தால் 10 மதிப்பெண்கள். குரு 8-ஆமிடத்தில் அமர்ந்தால் 20 மதிப் பெண்கள். குரு 12-ஆமிடத்தில் அமர்ந்தால் 50 மதிப்பெண்கள். சிம்ம லக்னத்திற்கு மட்டுமே 5-ஆம் அதிபதியும், அறிவுக் கிரகமும் குரு ஒருவரே யாவர். அவர் 6-ல் நீசம்பெறுவதும், 8-ல் ஆட்சி பெறுவதும், 12-ல் உச்சம்பெறுவதும் ஒரு வேற்றுமையில் ஒற்றுமையான, விந்தையான விஷயம்தான். இதனைக்கொண்டு, உங்கள் அறிவின் அளவை அறிந்து கொள்ளுங்கள். குரு நீச நிலையில் இருப்பவர்கள் திருச்சி- திருப்பட்டூர் சென்று பிரம்மாவை வழிபடவேண்டும்.
கன்னி லக்னம்
கன்னி லக்ன அதிபதி புதன் ஆவார். இவர்களின் அறிவு அதிபதி சனி ஆவார். சனி எப்போதும் மந்தக் கிரகம். இவர் அறிவுக்குரிய பாவாதிபதி ஆகும்போது, கன்னி லக்ன ஜாதகர்கள் சற்று மெதுவாகத் தான் யோசிப்பார்கள். இது சனி கிரகத்தின் இயல்பான குணமாகும். இவர் உச்சம் பெற்றால், இவர்களின் 2-ஆமிடமான துலாத்தில் உச்சம்பெறுவார். இந்த உச்ச சனி, இவர்களுக்கு, அழுத்தமான- அர்த்தமுள்ள, ஆரோக்கியமான பேசும் அறிவாற்றல் இருக்கும். இந்த பேசும் திறமை வேலை, பண விஷயங்களை மேன்மைபடுத்தும். இதே அறிவுக்குரிய 5-ஆம் பாவாதிபதி சனி, நீசம்பெற்றால், சுத்தமாக அறிவு என்பதே இருக்காது. எதைச் சொன்னாலும் புரிந்துகொள்ள இயலாத கரிப்புத்தியாக அமையும். இம்மாதிரி அமைப்புள்ள குழந்தைகளை அறிவு மேம்பாட்டு சிகிச்சை பள்ளிகளில் சேர்க்கவேண்டியிருக்கும். இதே சனி, 6-ஆம் வீட்டில் அமைந்தால் சுமாரான அறிவு கிடைக்கும். ஏனெனில் அது அவரின் ஆட்சி வீடு. சனி 8-ல் இருக்கு மிடத்தில் நீசமாகிவிடுவதால், வாழை மட்டையை பற்றவே வைக்க முடியாது என்பார்களே, அதுபோல என்ன சொன்னாலும் அறிவு வேலை செய்யவே செய்யாது. 12-ஆமிடத்தில் அறிவுக்குரிய சனி இருப்பின், மோசமான விளைவுகளைத் தரும். ஏனெனில் அது சூரியனின் வீடு. சூரியனுக்கும் சனிக்கும் ஆகவே ஆகாது. அதனால் இவர்களின் யோசனைகள் இவர்களை வச்சு செய்து விடும். சில பெண்கள் புதுமையாக சமையல் செய்கிறேன் என்று சிந்திச்சு ஆரம்பிப் பார்கள். கடைசியில் அது வாய்க்கு வைக்க விளங்காமல் ஆகிவிடும். பொருளும் விரயமாகி, எல்லாரிடமும் திட்டும் கிடைக்கும்.
குரு உச்சமானால் அதனறிவு, வாழ்வு முன்னேற்றம் தரும். குரு நீசமானால், இவர்களின் 5-ஆமிடமான மகரத்தில் நீசமாவார். அறிவின் பாவாதிபதி இடத்தில், அறிவுக் காரகர் குரு நீசம் பெறுவது, கதை கந்தல்தான்வடிகட்டிய முட்டாளாக இருப்பர். கன்னி ராசியின் அறிவுக்குரிய 5-ஆம் அதிபதி சனி உச்சமானால் 50 மதிப்பெண்கள். சனி நீசமானால் 5 மதிப்பெண்கள். குரு உச்சம்பெற்றால் 50 மதிப்பெண்கள். குரு நீசம்பெற்றால் 5 மதிப்பெண்கள். சனி 6-ல் அமர்ந்தால் 25 மதிப்பெண்கள். சனி 8-ல் அமர்ந்தால் 0 மதிப்பெண்கள். சனி 12-ல் அமர்ந்தால் 5 மதிப்பெண்கள். குரு 6-ல் அமர்ந்தால் 10 மதிப்பெண்கள். குரு 8-ல் அமர்ந்தால் 5 மதிப்பெண்கள். குரு 12-ல் அமர்ந்தால் 20 மதிப்பெண்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, கன்னி லக்னத்தார், அறிவின் அளவை அறிந்துகொள்ளலாம். சனி நீசமடைந்த கன்னி லக்னத்தார், கண்டிப்பாக சனிக் கிழமைதோறும் ஆஞ்சனேயரை வணங்க வேண்டும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்...)
செல்: 94449 61845