மனிதர்களாய் பிறந்த அனைவரின் விருப்பமும் வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்பதாகும். ஒரு ஜாதகத்தில் ஒரு ஜாதகரின் வெற்றியை நிர்ணயிப்பதில் 12 பாவகங்களுக்கும் சம்பந்தம் உண்டு.
12 பாவகங்களையும் கேந்திரம், திரி கோணம், பண பர ஸ்தானம், மறைவு ஸ்தானம், உப ஜெய ஸ்தானம் என ஐந்து வகையாக பிரித்துள்ளார்கள். இதுபோன்ற பலவிதமான பிரிவுகள்மூலம் எதிலும் வெற்றி பெறக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
விதி, மதி, கதி என்ற மூன்று விதிகளே முதன்மையாக ஒரு ஜாதகத்தின் வெற்றிக்குத் துணையாக அமைகிறது.
விதி (லக்னம்)
விதி என்பது லக்னம். ஜோதிடரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலை யெழுத்தாக அமைகிறது. ஒரு ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா என்பதை லக்னமே தீர்மானிக்கிறது.
எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம் என்பதால் லக்ன வ-மையே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்கும் பிரதான காரணி யாகும். ஒருவர் ஜாதகத்தில் லக்னம், லக்னாதி பதி வ-மையாக கேந்திர திரிகோணங்களில் நின்று இயற்கை சுபகிரகங்களின் தொடர்பை பெற்றால் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றியடைவார். லக்னாதி பதி ஆட்சி, உச்சம் பெறுவதும் வெற்றிமேல் வெற்றியைத் தரக்கூடிய அமைப்பாகும். மிகக் குறிப்பாக ஒரு ஜாதகத்தின் லக்னப்புள்ளி ஒரு ரகசியத்தைச் சொல்-க்கொண்டே இருக் கும். லக்னப்புள்ளி நின்ற நட்சத்திர அதிபதி ஆட்சி, உச்சம் பெறுவது முதல் தரமான வெற்றிக்கான அமைப்பாகும். அதிலும் லக்னப் புள்ளி நின்ற நட்சத்திர பாதம் புஷ்கராம்ச பாதங்களில் அமைவது மிகச் சிறந்த வெற்றி யாளருக்கே அமையும்.
புஷ்கராம்ச யோகத்தைப் பற்றிய கட்டுரை நமது "பாலஜோதிட'த்தில் மிகத் தெளிவாக நான் ஏற்கெனவே எழுதியுள் ளேன். புஷ்கராம்சம் என்பது 12 ராசிகளில், ஒவ்வொரு ராசியிலுமுள்ள ஒரு குறிப்பிட்ட இரண்டு நட்சத்திர பாதம் அடங்கும். இதில் கேது, செவ்வாய், புதனின் நட்சத்திரங்கள் புஷ்காரம்சத்தில் வராது. மற்ற கிரகங்களான சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 1, 4-ஆம் பாதங்களும், சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தின் 2-ஆம் பாதமும், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியின் 2, 4-ஆம் பாதங்களும், சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் 3-ஆம் பாதமும், சனி பகவானின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி 2-ஆம் பாதங்கள், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் 4-ஆம் பாதம் புஷ்கராம்ச கட்டத்தில் அடங்கும். என் அனுபவத்தில் சுமாரான ஜாதகத்தைகூட புஷ்கராம்ச பாதத்தில் அமர்ந்த கிரகங்கள் வெற்றிபெறச் செய்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஜாதகரைக் குறிக்கும் லக்னம், லக்னாதி பதி வலுவாக இருந்தால் ஜாதகரின் செயல் பாடுகள் சிறப்பாக, வெற்றியானதாக இருக்கும் எனப் பார்த்தோம். எந்த ஒரு யோகமும் லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தை தரும்.
லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகனது வெற்றி இருக்கும்.
மதி (ராசி)
ஒரு ஜாதகத்தில் விதி எனும் லக்னத்திற்கு அடுத்தபடியாக வெற்றிக்கு வித்திடுவது மதி எனப்படும் சந்திரன். ஒருவர் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் சஞ்சரிக்கி றாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திர மாகும். இதன்மூலம்தான் தசா புக்தி செயல் பட்டு ஜாதகரின் வாழ்க்கை பயணம் செயல் படுகிறது. 5-ஆமிடம் எனும் பூர்வபூண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றியமைப்பது என்பதை மதி காட்டுகிறது. லக்னம், லக்னாதிபதி பலமிழந்த நிலையில் ராசியையும் அதன் அதிபதியையும் கவனிக்கவேண்டும். அதனால் விதி கெட்டால் மதி என்று சொல்வார்கள்.
அதன்படி ராசியில் எந்த பாவ கிரகம் இடம்பெறாமல் இருக்கவேண்டும். ராசிக்கும், ராசியாதிபதிக்கும் இயற்கை பாவர், சம்பந்தம் இருக்கக்கூடாது. மேலே லக்னத்திற்கு கூறியதுபோல் ராசியாதிபதி ஆட்சி, உச்சம் பெறுவதும், புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் அமைவது வெற்றிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் அமைப்பா கும். மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வு களும் தசாபுக்தியோடு இணைந்தே செயல் படுவதால் மதி எனப்படும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் வெற்றியை அதிகப்படுத்துகிறது.
எண்ணம்போல் வாழ்க்கை என்பது பழமொழி. ஒருவரின் எண்ண ஓட்டத்தில் நல்ல- தீய சிந்தனைகள புகுத்துவது மதி எனும் சந்திரனாகும்.
ஒருவரின் தசாபுக்திக்கு ஏற்பட்ட ஜாதகரின் எண்ண ஓட்டத்தை தசாபுக்திமூலம் இயக்கு பவர் தசாநாதன்.
தசாபுக்தி சாதகமான காலத்தில் ஜாத கருக்கு வெற்றி வாய்ப்புகள் குவியும். தசா புக்தி சாதகமற்ற நிலையில் தோல்வியை அதிகம் சந்திக்க நேரும்.
கதி என்பது சூரியன்
விதி- மதி இரண்டும் கெட்டாலும் கதி என்று அழைக்கப்படும் ஆத்மக்காரகன் மற்றும் லக்ன பாவகத்திற்கும் காரகனான சூரியனை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுசெய்து பார்க்கவேண்டும்.
ஒருவருக்கு ஜாதகத்தில் 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய பலத்தால் மதியால் மாற்றியமைக்கப்பட்டதை 9-ஆமிடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது.
லக்னத்திற்கான காரக கிரகம் சூரியன். சூரியன் ஆத்மக்காரகன். எனவே ஜாதகத்தில் சூரியன் பலம் பெறவேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் வெற்றி பெறக்கூடிய நபராக இருப்பார். அதேபோன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வெற்றி கிடைக்கும்.
இதை மேலும் புரியும்படி சொன்னால் விதி, மதி இரண்டும் ஜாதகரின் வெற்றிக்கு கை கொடுக்காத நிலையில் கோட்சாரம் பலரை கைதூக்கி விட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கோட்சாரத்தை கதி என்றும் கூறலாம்.
ஒரு ஜாதகத்தின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப- அசுபப்பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக்கும் அனை வருக்கும், அவரவர் பூர்வஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதகக் கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம்மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வெற்றி அமைகிறது.
விதி, மதி, கதி மூன்றுமே ஒரு ஜாதகத்தில் செயல்படாவிட்டால் ஒருவர் ஜாதகத்தின் வெற்றிக்கு காரணமான 3-ஆம் பாவகத்தை இயக்கி வெற்றிபெறமுடியும். மூன்றாம் பாவகம் வ-மை படைத்தவர்களின் வெற்றியை யாராலும் அசைக்கமுடியாது. உப ஜெய ஸ்தானமான 3, 6, 10, 11-ஆம் பாவகங்களும் ஒரு ஜாதகத்தின் வெற்றிக்கு அதிக பங்கு வகிக்கிறது. அத்துடன் ஒரு பாவகத்தின் பாவத் பாவமான 3-ஆம் பாவகமும் வெற்றியை வழங்கும்.
ஒற்றைப்படை ராசிகள் இரட்டைப்படை ராசிகள் எப்படி வெற்றியை ஏற்படுத்துகிறது என்பதை வரும் வாரத்தில் பார்க்கலாம்.
தொடரும்
செல்: 98652 20406