சூரியனும் சந்திரனும் எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் என்ன நடக்கும்? -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/what-happens-if-sun-and-moon-are-combined-any-planets-mahesh-verma

பிறக்கும் சமயத்தில் சூரியன், சந்திரனுடன் இருந்தால், ஜாதகர் ஆணவ குணம் கொண்டவராக இருப்பார். கெட்ட செயல்களை அதிகமாக செய்வார்.

பெண்களுடன் உறவு இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பார். சிலர் வாழ்வின் பிற்பகுதி யில் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் கிரானைட், நவரத்தின வர்த்தகம் செய்பவராக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாயுடன் இருந்தால், ஜாதகர் புகழ்பெற்றவராக இருப்பார்.நல்ல செயல்களைச் செய்வார். சிலர் காவல்துறையில் அல்லது இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

சிலருக்கு சொந்தத்தில் நிலம் இருக்கும். சகோதரர் களுடன் உறவு நன்றாக இருக்கும்.

சூரியன், புதனுடன் இருந்தால், ஜாதகருக்கு புத் ஆதித்ய யோகம் இருக்கும்.நன்கு

பிறக்கும் சமயத்தில் சூரியன், சந்திரனுடன் இருந்தால், ஜாதகர் ஆணவ குணம் கொண்டவராக இருப்பார். கெட்ட செயல்களை அதிகமாக செய்வார்.

பெண்களுடன் உறவு இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பார். சிலர் வாழ்வின் பிற்பகுதி யில் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் கிரானைட், நவரத்தின வர்த்தகம் செய்பவராக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாயுடன் இருந்தால், ஜாதகர் புகழ்பெற்றவராக இருப்பார்.நல்ல செயல்களைச் செய்வார். சிலர் காவல்துறையில் அல்லது இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

சிலருக்கு சொந்தத்தில் நிலம் இருக்கும். சகோதரர் களுடன் உறவு நன்றாக இருக்கும்.

சூரியன், புதனுடன் இருந்தால், ஜாதகருக்கு புத் ஆதித்ய யோகம் இருக்கும்.நன்கு படித்தவராக இருப்பார்.

அறிவாளியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.

பிறரிடம் அன்பாக பேசுவார். வேத சாஸ்திரங்களைக் கற்றவராக இருப்பார்.இசை அறிவு இருக்கும். இசைக் கருவிகளை இயக்கத் தெரிந்தவராக இருப்பார். காவியங்களை எழுதுவார்.

திறமையான ஓவியராக இருப்பார். பல கலைகளை அறிந்தவராக இருப்பார்.

சூரியன், குருவுடன் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். நல்ல காரியங்களைச் செய்பவராக இருப்பார்.

ss

பணக்காரராக இருப்பார். சாஸ்திரங்களை அறிந்த வராக இருப்பார்.

நண்பர்களுடன் நன்கு பழகுவார். சாதுர்ய குணம் இருக்கும். இரக்க குணம் இருக்கும். பிறருக்கு உதவுவார்.

சூரியன், சுக்கிரனுடன் இருந்தால்,ஜாதகர் அறிவாளி யாக இருப்பார்.

பலசாலியாக இருப்பார். தன் காரியங்களை நல்ல முறையில் முடிப்பார். சிலருக்கு பெண்களால் ஆதாயம் இருக்கும். காம எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

சூரியன், சனியுடன் இருந்தால், ஜாதகர் அறிவாளி யாக இருப்பார். விஞ்ஞானியாக இருப்பார். காரியங்களை வேகமாக முடிப்பார். சிலருக்கு வாரிசு இருக்காது.

பிறக்கும் சமயத்தில் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாயுடன் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். போரில் வெற்றிபெறுவார்.

போர்க்கலை தெரிந்தவராக இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார்.தாயாருடன் சிறிய கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் காவல்துறையிலோ இராணுவத்திலோ இருப்பார்கள். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார்கள்.

சந்திரன், புதனுடன் இருந்தால், ஜாதகருக்கு பேச்சுத் திறமை இருக்கும்.

பணக்காரராக இருப்பார். நல்ல குணங்கள் படைத்தவராக இருப்பார். நல்ல எழுத்தாளராகவோ, கவிஞராகவோ இருப்பார். பிறரை ஈர்க்கக்கூடிய தோற்றம் இருக்கும்‌. சிரித்த முகத்துடன் உரையாடுவார். அனைவரிடமும் அன்புடன் பேசுவார். மெலிந்த சரீரத்தைக் கொண்டிருப்பார். இரக்க குணம் இருக்கும். சந்திரன், குருவுடன் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

புத்திசாலியாக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். பெரிய மனிதராக இருப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். பணவசதி படைத்தவராக இருப்பார். சாந்தமாக பேசுவார். பலருக்கும் நன்மைகள் செய்வார். தர்ம சிந்தனைகள் கொண்டவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார். தன் கூட்டத்தில் முக்கிய மனிதராக இருப்பார். அனைவரும் மதிக்கும் நிலையில் அவர் இருப்பார்.

சந்திரன், சுக்கிரனுடன் இருந்தால், ஜாதகர் பல வர்த்தகங்களில் ஈடுபடுவார்.பல பொருட்களையும் விற்பதில் திறமை சாலியாக இருப்பார். பல கலைகளைக் கற்றவராக இருப்பார். வாசனைப் பொருட்களின்மீது ஆர்வம் உள்ளவராக இருப்பார். சிலருக்கு அலை பாயும் மனம் இருக்கும்.

சந்திரன், சனியுடன் இருந்தால், ஜாதகர் தொழிலதிபராகவோ, விவசாயியாகவோ இருப்பார். நன்கு வியாபாரம் செய்பவராக இருப்பார்.

மனைவியைத்தவிர, பிற பெண் களுடனும் உறவு இருக்கும். தன் வயதை விட, வயதில் மூத்த பெண்களுடன் பழகுவார். பணக்காரராக இருப்பார். உடலில் நோய் இருக்கும். சிலருக்கு மன நோய் இருக்கும்.

செல்: 98401 11534

bala201023
இதையும் படியுங்கள்
Subscribe