Advertisment

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் எந்த கிரகங்களுடன் இருந்தால் என்ன நடக்கும்? மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/what-happens-if-mars-mercury-jupiter-venus-are-any-planets-mahesh-verma

செவ்வாய், புதனுடன் இருந்தால் பண பற்றாக்குறை இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். சிலர் பலசாலியாக இருப்பார்கள். பல பெண்களுடன் பழகுவார்கள்.

சொத்துகளை இழப்பார்கள். போதைக்கு அடிமையாக இருப்பார்கள்.

Advertisment

சிலருக்கு உடலில் ஊனம் இருக்கும். கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைக்க மாட்டார்கள்.

செவ்வாய், குருவுடன் இருந்தால், ஜாதகர் மந்திர வித்தைகள் தெரிந்தவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார்.

சிலர் பேராசிரியராகவோ சாஸ்திரங்களைக் கற்றவர்களாகவோ இருப்பார்கள்.

எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பார்கள். நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். பெரிய பதவிகளில் இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். தைரியசாலியாக இருப்பார்கள்.

Advertisment

பலசாலியாக இருப்பார்கள். நிலம், வீடு இருக்கும். சிலர் பிறரின் பணத்தில் வியாபாரம் செய்வார்கள்.

ss

செவ்வாய், புதனுடன் இருந்தால் பண பற்றாக்குறை இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். சிலர் பலசாலியாக இருப்பார்கள். பல பெண்களுடன் பழகுவார்கள்.

சொத்துகளை இழப்பார்கள். போதைக்கு அடிமையாக இருப்பார்கள்.

Advertisment

சிலருக்கு உடலில் ஊனம் இருக்கும். கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைக்க மாட்டார்கள்.

செவ்வாய், குருவுடன் இருந்தால், ஜாதகர் மந்திர வித்தைகள் தெரிந்தவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார்.

சிலர் பேராசிரியராகவோ சாஸ்திரங்களைக் கற்றவர்களாகவோ இருப்பார்கள்.

எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பார்கள். நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். பெரிய பதவிகளில் இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். தைரியசாலியாக இருப்பார்கள்.

Advertisment

பலசாலியாக இருப்பார்கள். நிலம், வீடு இருக்கும். சிலர் பிறரின் பணத்தில் வியாபாரம் செய்வார்கள்.

ss

செவ்வாய், சுக்கிரனுடன் இருந்தால் ஜாதகர் கணிதத்தில் நிபுணராக இருப்பார். நல்ல குணம் படைத்தவராக இருப்பார். தேவையற்றதைப் பேசுபவராக இருப்பார்.

பாவச் செயல்களை துணிச்சலாக செய்வார். அதிகார தோரணை யுடன் பிறரிடம் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்வார். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். சிலர் காமவெறி கொண்டவர் களாக இருப்பார்கள்.

செவ்வாய் பலவீனமாக இருந்தால், உடல்நலம் பாதிக்கப்படும்.உடலுறவின்போது, உயிரணுக்கள் சீக்கிரமாக வெளியே வரும்.

சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகருக்கு மனைவி யின் மீது அன்பு இருக்கும். செவ்வாய், சனியுடன் இருந்தால் ஜாதகர் சிந்தித்துப் பேசுபவராக இருப்பார். தொழிலதிபராக இருப்பார்.

சூழ்நிலையைப் பார்த்து பேசுவார். கோப குணம் இருக்கும். சிலர் கலகத்தை உண்டாக்குவார்கள்.

சிலர் பெரிய திருடர்களாக இருப்பார்கள். சிலர் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

உளறுவார்கள். சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதனால், பெயர் கெடும்.

சிலர் வாகனத்தில் வெளியே செல்லும்போது, பிறரிடம் சண்டை போடுவார்கள்.

புதன், குருவுடன் இருந்தால், ஜாதகர் இசைக்கருவிகளை இசைக்க அறிந்தவராக இருப்பார். நடனம் தெரிந்தவராக இருப்பார். துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். சந்தோஷமாக வாழ்வார். நீதி, நியாயப்படி வாழ்வார். இரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

அனைவரிடமும் நன்கு பழகுவார். தன் இனத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுத்தருவார். கணக்கு விஷயங்களில் நிபுணராக இருப்பார். சிலர் ஆடிட்டர்களாக இருப்பார்கள். சிலர் முதலீட்டுத் துறையில் இருப்பார்கள். சிலர் வெளியுறவுத் துறையில் பணியாற்றுவார்கள்.

புதன், சுக்கிரனுடன் இருந்தால் ஜாதகர் இசையில் தேர்ச்சிபெற்றவராக இருப்பார். நேர்மையானவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அன்புடன் பழகுவார்.

சாதுர்யமாக பேசுவார். நல்ல தோற்றம் இருக்கும். பலருக்கு தலைவராக இருப்பார். ஆனால், புதன் சுய வீட்டில் இருந்தால் அல்லது சுக்கிரன் நீசமடைந்தால் பெண் மோகம் அதிகமாக இருக்கும். இளம் வயதிலேயே தவறான வழியில் சென்று கெடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சிலர் அதிகமாக பேசுவார்கள்.

புதன், சனியுடன் இருந்தால், ஜாதகர் கலகம் உண்டாக்குபவராக இருப்பார்.இசை கற்றவராக இருப்பார்.

காவியங்களைப் படித்தவராக இருப்பார். சிலர் காவியங்களைப் படைப்பவர்களாக இருப்பார்கள்.

மெலிந்த தோற்றம் இருக்கும். புதன் நீசமாக இருந்தால் ஆண்மைக் குறைவு இருக்கும். சிலர் இரும்பு வியாபாரிகளாக இருப்பார்கள்.

கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். குரு, சுக்கிரனுடன் இருந்தால் ஜாதகர் பணக் காரராக இருப்பார். நண்பர்கள் இருப்பார்கள்.

வாரிசுகள் இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் சாஸ்திரம் கற்றவராக இருப்பார். சிலர் சாஸ்திரங்களைப் பற்றி விவாதிப்பவர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். சிலர் தலைவர்களாக இருப்பார்கள். சிலர் கணிதத்தில் திறமை சாலிகளாக இருப்பார்கள்.

குரு, சனியுடன் இருந்தால், ஜாதகர் வீரராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். பணக்காரராக இருப்பார். பெண்களால் அவருக்கு உதவி இருக்கும்.

குரு நீசமடைந்தால் அல்லது சனி நீசமடைந்தால், ஜாதகர் கடையில் சேல்ஸ் மேனாக இருப்பார். அதிகமாக தூங்குவார். வயிற்றில் நோய் இருக்கும்.

சுக்கிரன், சனியுடன் இருந்தால் நிலையான புத்தி இருக்காது. வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

பலர் பசுக்களை வளர்ப்பார்கள். சிலர் மர வியாபாரம் செய்வார்கள். சிலர் பிறரைக் கிண்டல் பண்ணுபவர்களாக இருப்பார்கள். சிலர் துணி வியாபாரியாக இருப்பார்கள்.

செல்: 98401 11534

bala271023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe