விண்ணிலுள்ள கோள்கள் யாவற்றையும் ஆராய்ந்து அதனை மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையோடு இணைத்து தன்னை பற்றியும் தன் எதிர்காலத்தை பற்றியும் ஒருவர் அறிந்துகொள்ள மிக அற்புதமான ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கியவர் பிருகு முனிவர் ஆவர். இவர் பிரம்மாவின் மானச புத்திரர் என போற்றப் படுபவர். ஸ்ரீ மகாலட்சுமியின் அருள்பெற்ற இவர். "பிருரு சம்ஹிதை' எனும் நூலை உருவாக்கினார். இவர்தான் ஜோதி டத்தில் ஆதி குரு எனலாம்.
திரேதாயுகத்தில் வேதம் தோன்றி வழக்கத்தில் வந்த காலத்திலேயே இந்த ஜோதிட சாஸ்திரம் தோன்றியுள்ளது. ஜோதிடம் என்றால் (ஜோதி- இடம்) இருட் டில் இருப்பவருக்கு ஒளி தருவது என்று பொருள். இவர்கள் "தெய்வகவிஞர்கள், ஜோதிடர்கள்' என்று கருதப்பட்டு வந்தார்கள். மெஞ்ஞானத்தை அளிப் பவர்கள் என்று பொருள்.
"இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்.''
-குறள்
திருவள்ளு வரின் திருக்குறள் அருள்வாக்கு இதை செய்பவர்கள் ஜோதிடர்கள் என்றால் மிகையாகாது. இந்த வேலையில் ஈடுபட்டால் செழிப்பு வரும். இந்தத் தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். இந்த கல்வி பயின்றால் சீரும் சிறப்பும் பொருளும் ஈட்டமுடியும். இந்த பெண்ணை மணந்தால் நல்வாழ்க்கை அமையும். இந்தத் தொழிலில் ஈடுபட்ட நிரந்தர வருமானம் வரும். எவருடன் கூட்டு சேர்ந்தால் நன்மைகள் அதிகம் பெறலாம். இப்படி வழிகாட்டியாக வருமுன் நடப் பதை, நடக்கப்போவதை அறிவிப் பது ஜோதிடக்கலை. ஜோதிடம் அறிந்தவர்கள் மட்டுமே வாக்கு சுத்தி ஏற்பட்டு கூற இயலும்.
ஒருவர் நிறைய ஜோதிட புத்தகங்கள் படிக்கலாம்; படித்திருக்கலாம். அவ ரால் வாக்கு சுத்தி இல்லா மல் பலன் கூறமுடியாது. வாக்கு சுத்தி என்பது கடவுள் அளித்த வரப் பிரசாதமாகும். ஆசார அனுஷ்டானம், நித்திய பூஜை செய்பவராக இருக்கவேண்டும். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். குரு வாக்கு சுத்திக்கு அதிபதி. குரு சொந்த வீட்டிலோ இரண்டாம் வீட் டிலோ அல்லது இரண்டாம் வீட்டை பார்வை செய்தால் அந்த ஜோதிடர் சரியாக கணித்து சொல்ல வல்லவர் எனலாம். 5-ஆம் வீடு ஞானசக்தி (ஒய்ற்ன்ற்ண்ர்ய்) பூர்வபுண்ணியம் தெய்வ சக்தி.
அதற்கும் குருதான் காரகம் வசிக்கிறார். அதனால் குரு 5-ஆம் வீட்டில் இருந்தாலும் 5-ஆம் வீட்டு அதிபதியோடு இருந்தாலும், 5-ஆம் வீட்டை பார்த்தாலும் மிகவும் தீர்க்க தரிசனமுடையவர் எனலாம். சந்திரன் மனதுக்கு காரகர். அவரும் நல்ல நிலையில் இருத்தல் நன்று. சிறந்த ஜோதிடராகலாம். கை ரேகை சாஸ்திரத்தில் ஆழ்காட்டி விரல் நீண்டு, அதை ஓட்டிய குரு மேட்டில் சாலமன்றிங், வளைகோடுகள் ஒன்றிரண்டு காணப்பட்டாலும் அவர் கூறும் பலன் தரும்.
"பவானி கிரக சாரேண சூசயந்தி
மனீஷீண. கோவக்தா தாரதம் பஸ்ய
தமேகம் வேதஸம்ஷினா.'
அதாவது பிரம்மாவுக்கு நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, நிச்சயமாக தெரியும் என்கிறார். வருமுன் நடப்பதை சொல்பவர்கள் ஜோதிடர்கள், பிரம்மஞானிகள். இவர்களை தெய்வக்கவிஞர்கள் என்று முன்னோர்கள் போற்றினர்.
திரிகால ஞானிகள் என போற்றப் பட்டுவந்தனர்.
ஒருவர் ஜோதிடராக திகழ்வதற்கு கீழ்க்கண்ட அமைப்புகள் இருக்கவேண்டு மென்று பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
லக்னத்தில் கேது அல்லது 5-ல் 9-ல் இருந்தால் ஜோதிட சாஸ்திர வல்லவ ராகலாம். (பிரஹத்பராசா ஹோரா அத் 9- ஸ்லோகம்) புதன் 2-ஆம் இடத்ததிபதி கேந்திரத்தில், சுக்கிரனுடன் உச்ச வீட்டில் இருந்தாலும் சிறந்து விளங்கலாம் என்கிறது சர்வாத்த சிந்தாமணி.
புதன் 9-ஆம் வீட்டில் சுபகிரகப் பார்வை பெற்று காணப்பட்டால், ஜோதிடத்தில் ஜொலிக்கலாம் (பாவர்த்த ரத்னகரா).
ஒருவர் ஜாதகத்தில் குரு, சந்திரன் கோணத்தில் (1, 5, 9) கேந்திரத்தில் சேர்க்கையோ- பார்வையோ பெறின், ஜோதிட வல்லமை வரும். (நாடி கிரந்தம்).
சூரியன், புதன், ராகு இணைந்து 5-ஆம் வீட்டில் இருப்பின், ஜோதிட புலமை வரும் (பாவாத்த ரத்னகரா.) குருவும் புதனும் கேந்திரம், திருகோணத் தில் அமர்ந்திருந்தால் சிறந்த ஜோதிடராகலாம்.
குரு 2-லும் சுக்கிரன் உச்சத்திலும் இருப்பின் சிறந்த ஜோதிடர்.
புதன் இரண்டிலும் குரு கேந்திரத்திலும் சுக்கிரன் உச்சத்தில் இருப்பின் ஜோதிடர் கணக்கில் புலமையாகி அசத்தலாம்.
குரு 2-ல், 5-ல், 9-ல், 10-ல் இருந்தால் வேத சாஸ்திரத்தில், வாக்கு சுத்தி பெற்று புகழடைய லாம்.
சூரியன், புதன், ராகு இணைந்து 5-ஆம் வீட்டில் இருப்பின் ஜோதிட புலமை மிகையாகும்.
கேது, 5-ல் இருந்து புதன், குரு, சனி பார்த்தால், வாக்கு சுத்தி மேன்மை தரும்.
இந்த மதிநுட்பமான ஜோதிடக்கலை எவரையும் சுலபத்தில் ஆட்கொள்வ தில்லை. ஜோதிடமின்றி ஒரு நிகழ்ச்சியும் ஈடேறாது. அக்காலத்தில் மகான்கள் போற்றுவதோடு, மன்னர்களும் மும்மாரி மழை பெய்யுமா என்று ஜோதிடரை நம்பி வினா தொடுப் பார்கள். வானிலை சாஸ்திரம் இல்லா காலம் ஜோதிடம் ஒரு நல்வழி காட்டியாகவே திகழ்ந்தது.
பிரபல ஜோதிடர் ஜாதகங்களைப் பார்ப்போம் டாக்டர் பி.வி. ராமன். இவர் இருபதாம் நூற்றாண்டில் மிக சிறந்த ஜோதிடர். ஜோதிட துறையில் முடிசூடா மன்னர். பல ஆண்டு களாக ஆள்ற்ழ்ர்ப்ர்ஞ்ஹ் ஙஹஞ்ஹக்ஷ்ண்ய்ங் ஆங்கிலத்தில் ஆசிரியராக இருந்து கின்னஸ் சாதனை படைத்தவர். பி.வி. ராமன் ஜோதிடத் திற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். 70-க்கு மேற்பட்ட ஜோதிட நூல் எழுத்தியவர். இவர் ஜாதகத்தில் குரு, சந்திரனை பார்ப்பதால், குரு, சந்திரன் கேந்திரம் பெற்று கஜகேசரி யோகம் ஏற்பட்டு ஜோதிடத் துறையில் பல சாதனை படைத்தவர். லக்னத்திற்கு 5-ஆம் வீட்டதிபதி புதன் அதனைபோல் குரு 10-ஆம் வீட்டில் அமர்ந்து உச்ச சந்திரனை பார்க்கிறார். செவ்வாய் குருவை பார்க்கிறார்.
வேத சாஸ்திரத்தை மேற்கொள் காட்டி உலகப் புகழ்பெற்றார்.
கும்ப லக்னம்
2-ல் ராகு
4-ல் சந்திரன், சனி
6-ல் சூரியன்
9-ல் கேது
10-ல் குரு
ஸ்ரீ வித்வான் வேலட்சுமணன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடத் துறையில் நல்வழி காட்டியவர். இவர் ஜாதகத் தில் கேதுவும் சந்திரனும், கேந்திரத்தில் ஜோதிட ஞானத்தை அருளியுள்ளது. குரு ஆட்சிபெற்று செவ்வாயை பார்ப்பதால் குரு மங்கள யோகம். பெற்றுள்ளார்.
மகர லக்னம்
அதில் கேது
3-ல் புதன்
4-ல் சூரியன், சுக்கிரன்
6-ல் செவ்வாய்
7-ல் ராகு
9-ல் சந்திரன்
10-ல் சனி
12-ல் குரு
எனவே கிரகங்கள் ஜோதிடத்திற்கு பக்க பலமாகும்.
செல்: 044 28611289