உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தான் மிக உயர்ந்த மேன்மையான வாழ்க்கை வாழவேண்டுமென பேராவா இருக்கும். எல்லாருக்கும் பல்லக்கில் ஏறி பவனிவர ஆசை இருக்கும்தான். ஆனால் வாழ்க்கை, ஒருசிலரை மட்டுமே பல்லக்கில் ஏறி, உலா வர அனுமதிக்கிறது. சிலரை பல்லக்குக்கு முன்னும், பின்னுமாக வரவைக்கிறது. சிலரை பல்லக்கு தூக்கிக்களாக, வாழ்வு அமைய நிர்பந்திக்கிறது.
ஆக, மனிதருக்கு உயர்ந்த வாழ்வு, மத்திம வாழ்வு, தாழ்ந்த வாழ்வு என வழங்க முடிவுசெய்கிறது. இதனை உத்ர காலாமிர்தம், மனிதனுக்கு எந்த கிரக அமைப்பு, எம்மாதிரியான வாழ்க்கை நிலையை கொடுக்கும் என பிரித்துக் கூறுகிறது.
1. உயர்ந்த வாழ்க்கை நிலை
இவர்களுக்கு 9, 10-ஆம் அதிபதிகளின் சேர்க்கை, பரிவர்த்தனை பார்வை இவை ஜாதகத்தில் அமைந்திருக்கும்.
2. மத்திம வாழ்க்கை நிலை
9-ஆமிடத்திற்கு, 9, 10-க்குரியவர்கள் சம்பந்தம் பெற்றிருப்பர். அதாவது 9-ஆமிடத்திற்கு, 9, 10-க்குரியவர்கள் 5, 6-ஆமிட அதிபதிகள் ஆவார். 5, 6-ஆம் அதிபதிகள் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை இவை மத்திம வாழ்க்கை நிலையைத் தரும்.
3. தாழ்ந்த வாழ்வு நிலை
இவர்களுக்கு 10-ஆமிடத்திற்கு 9, 10-க்குரியவர்கள் சம்பந்தம் தாழ்ந்த வாழ்வு நிலையைத் தரும். அதாவது 10-ஆமிடத்திற்கு 9, 10 எனில் 6, 7-ஆமிடத்தைக் குறிக்கும். இவர்கள் சேர்க்கை, பரிவர்த்தனை பார்வை தாழ்ந்த வாழ்க்கை நிலையைத் தரும். ஆயினும் இந்தமாதிரி அமைப்புக் கொண்ட சிலர் நன்றாகவே இருக்கிறார் களே என்ற யோசனை வரும்.
இதற்கு உத்ர காலாமிர்தம் விடை அளிக்கிறது.
மேற்கண்ட மூன்று ஜோடிக் கிரகங்கள் தங்களுக்குள் சம்பந்தம் பெற்றிருந்தா லும், கேந்திரத்தில் அமைந்திருந்தாலும், லக்னாதிபதி நின்ற ராசியாதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், ஜாதகர் மிக நல்ல வாழ்க்கை வாழ்வார் எனக் கூறுகிறது.
12 லக்னத்துக்
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தான் மிக உயர்ந்த மேன்மையான வாழ்க்கை வாழவேண்டுமென பேராவா இருக்கும். எல்லாருக்கும் பல்லக்கில் ஏறி பவனிவர ஆசை இருக்கும்தான். ஆனால் வாழ்க்கை, ஒருசிலரை மட்டுமே பல்லக்கில் ஏறி, உலா வர அனுமதிக்கிறது. சிலரை பல்லக்குக்கு முன்னும், பின்னுமாக வரவைக்கிறது. சிலரை பல்லக்கு தூக்கிக்களாக, வாழ்வு அமைய நிர்பந்திக்கிறது.
ஆக, மனிதருக்கு உயர்ந்த வாழ்வு, மத்திம வாழ்வு, தாழ்ந்த வாழ்வு என வழங்க முடிவுசெய்கிறது. இதனை உத்ர காலாமிர்தம், மனிதனுக்கு எந்த கிரக அமைப்பு, எம்மாதிரியான வாழ்க்கை நிலையை கொடுக்கும் என பிரித்துக் கூறுகிறது.
1. உயர்ந்த வாழ்க்கை நிலை
இவர்களுக்கு 9, 10-ஆம் அதிபதிகளின் சேர்க்கை, பரிவர்த்தனை பார்வை இவை ஜாதகத்தில் அமைந்திருக்கும்.
2. மத்திம வாழ்க்கை நிலை
9-ஆமிடத்திற்கு, 9, 10-க்குரியவர்கள் சம்பந்தம் பெற்றிருப்பர். அதாவது 9-ஆமிடத்திற்கு, 9, 10-க்குரியவர்கள் 5, 6-ஆமிட அதிபதிகள் ஆவார். 5, 6-ஆம் அதிபதிகள் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை இவை மத்திம வாழ்க்கை நிலையைத் தரும்.
3. தாழ்ந்த வாழ்வு நிலை
இவர்களுக்கு 10-ஆமிடத்திற்கு 9, 10-க்குரியவர்கள் சம்பந்தம் தாழ்ந்த வாழ்வு நிலையைத் தரும். அதாவது 10-ஆமிடத்திற்கு 9, 10 எனில் 6, 7-ஆமிடத்தைக் குறிக்கும். இவர்கள் சேர்க்கை, பரிவர்த்தனை பார்வை தாழ்ந்த வாழ்க்கை நிலையைத் தரும். ஆயினும் இந்தமாதிரி அமைப்புக் கொண்ட சிலர் நன்றாகவே இருக்கிறார் களே என்ற யோசனை வரும்.
இதற்கு உத்ர காலாமிர்தம் விடை அளிக்கிறது.
மேற்கண்ட மூன்று ஜோடிக் கிரகங்கள் தங்களுக்குள் சம்பந்தம் பெற்றிருந்தா லும், கேந்திரத்தில் அமைந்திருந்தாலும், லக்னாதிபதி நின்ற ராசியாதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், ஜாதகர் மிக நல்ல வாழ்க்கை வாழ்வார் எனக் கூறுகிறது.
12 லக்னத்துக்கு வாழ்வு நிலை
மேஷ லக்னம்
9+10= சனி, குரு = உயர்ந்த வாழ்க்கை நிலை.
5+6= சூரியன்+புதன்= மத்திம வாழ்க்கை நிலை.
6+7= புதன்+ சுக்கிரன்= தாழ்ந்த வாழ்க்கை நிலை.
இந்த மூன்று அமைப்புகளில், மேஷ லக்ன, 6-ஆம் அதிபதி புதன் உச்சமானால், மிக மேன்மை வாழ்க்கை கிடைக்கும்.
அதுபோல் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை பெற்றாலும் நல்ல வாழ்க்கை நிலை கிடைக்கும்.
ரிஷப லக்னம்
9+10=சனி= இவர் உச்சமானால், மிகப்பெரிய தொழிலதிபராகி வாழ்க்கை உயர்ந்த நிலையில் இருக்கும்.
5+6= புதன், சுக்கிரன் பரிவர்த்தனை, சேர்க்கை இருப்பின் இவர்களும் மத்திய வாழ்க்கையில், உயர்நிலை பெறலாம். 6+7= சுக்கிரன், செவ்வாய் இவர்கள் சம்பந்தம் மண வாழ்வில் சற்று பிரச்சினையை உண்டாக்கும். மேலும் வேலை என்பது சற்று நிலையில்லாமல் இருக்கும் என்பதால் தாழ்ந்த நிலை என்றார்கள் போலும்.
மிதுன லக்னம்
9+10= சனி+குரு- இவர்கள் சம்பந்தம் உயர் வாழ்க்கை நிலையைத் தரும். இதில் ஒரு கிரகம் நீசமானாலும்கூட, மறு கிரக சேர்க்கை, நீச பங்கராஜ யோகத்தைக் கொடுத்து, முதல்தரமான வாழ்க்கை நிலையைத் தந்துவிடும்.
5+6= சுக்கிரன்+செவ்வாய். இவர்களின் லட்சியம் சட்டென்று நிறைவேறாது. ஆசைகள் அலைபாயும். வாழ்க்கையில் நிறைய செழிப்பைக் காண இயலாது. எனவே மத்திம வாழ்க்கை அமையும். 6+7= செவ்வாய்+குரு= இந்த இரண்டு கிரகங்களும் உச்சமானால், ஜாதகர் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடுவார். இவர்கள் தொழில் மேன்மைக்கு வாங்கும் கடன், மெதுவாக இவர்களை தாழ்ந்த நிலை வாழ்க்கைக்குத் தள்ளிவிடும்.
கடக லக்னம்
9+10= குரு+ செவ்வாய். இந்த கிரக சேர்க்கை மிக மேன்மையான வாழ்வைத் தரும். இதில் நீசமானாலும், இவர்கள் சேர்க்கை, நீச கிரகத்தின் நீசத் தன்மையை போக்கும் ஆற்றலுடையது. எனவே இந்த அமைப்பு, உயர்ந்த வாழ்க்கையைத் தரும்.
5+6= செவ்வாய்+குரு= இதே அமைப்பு இவர்களுக்கு மத்திம வாழ்விலும், முதல் தரத்தை உயர்த்திக் கொடுக்கும். 6+7= குரு+சனி இந்த அமைப்பு ஜாதகரை தொழில் செய்யும்போது பங்குதாரரை வைத்து ஏமாற்றுச் செய்யும். வேலை பார்க்கும் இடத்தில், தேவையில்லாத அவமானம் தரும். எனவே இவர்கள் வாழ்க்கையில் நொந்து, தாழ்ந்த வாழ்க்கை நிலையை அனுபவிப்பர்.
சிம்ம லக்னம்
9+10= செவ்வாய்+சுக்கிரன்= இவர்களின் பார்வை பரிவர்த்தனை அல்லது சேர்க்கை நல்ல ஏற்றம் தரும். இவர்கள் அனேகமாக ரியல் எஸ்டேட் அல்லது பத்திரிகை துறையில் முதன்மைபெற்று, உயர்ந்த வாழ்க்கை நிலையை பெறுவர். 5+6= சனி+குரு= இவர்களின் பரிவர்த்தனைமூலம் மத்திம வாழ்வை பெறுவர். குரு இவர்களின் 8-ஆம் அதிபதியும் ஆவார். அதனால் மத்திம வாழ்வை பெற இயலும். 6+7= சனி= சிம்ம லக்னாதிபதி சூரியன். எனவே, சனி எந்நிலையில் இருப்பினும் லக்னாதிபதிக்கு, தாழ்வு நிலை வாழ்வைத் தருவார்.
கன்னி லக்னம்
9+10 சுக்கிரன்+புதன்= இவர்களின் சேர்க்கையைவிட, பரிவர்த்தனை மிக நல்ல பலன் தந்து உயர்ந்த நிலையைத் தரும். சுக்கிரனும், புதனும் 7-ஆம் பார்வையாக பார்க்க வாய்ப்பே கிடையாது. இந்த கிரக பரிவர்த்தனை தொழி-ல் நல்ல பணச் செழிப்பு அதிர்ஷ்டம் தரும்.
5+6= சனி. இவர் உச்சம்பெற்றால், மத்திம வாழ்வும், நல்ல பெருவாழ்வாக அமையும் வாய்ப்புண்டு.
6+7= சனி+குரு= இவர்கள் பரிவர்த்தனை பெற்றாலும், வாழ்க்கைத் துணைக்கு நோய் அல்லது கடன், அதனால் வீடு நிலைக்காமை, ஆரோக்கியக் குறைவு இவை ஏற்பட்டு தாழ்ந்த நிலை வாழ்வைக் கொடுத்துவிடும்.
துலா லக்னம்
9+10= புதன்+சந்திரன்= இவர்கள் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை பெறக் கூடும். இவர்கள் தங்களின் விரைவான, வேகமான அறிவுத் திறமையால், வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவர்.
5+6= குரு+சனி= இவர்கள் கல்வித் தடைகள், தாயாரின் அனுசரணை கிடைக் காதது, எதையும் சட்டென்று கிரகிக்க முடியாத அறிவு மந்தம் என இவற்றால் மத்திம நிலை வாழ்வை அடைவர்.
6+7= குரு+செவ்வாய்= இந்த கிரக சம்பந்தம் பணவரவில் ஏமாற்றம் தந்துவிடும். உங்கள் சொற்களின் கடுமையே, உங்கள் வாழ்வின் தாழ்வுக்கு காரணமாகும்.
விருச்சிக லக்னம்
9+10= சந்திரன்+சூரியன்= உங்கள் கல்வி, தீர்க்கமான சிந்தனை, பரம்பரை, பூர்வீகம் பெற்றோர் இந்த வகைகளில், வாழ்க்கை உயர்ந்த நிலையில் இருக்கும்.
5+6= குரு+ செவ்வாய்= வேலையில் முழு ஈடுபாடு, கண்டிப்பான பேச்சு, குடும்பத்தினர் ஆதரவு இவை இவர்களை மத்திம வாழ்க்கை வாழச்செய்யும். இதே குரு, செவ்வாய், நீசமாக ஒருவரையொருவர் பார்த்தால், உச்ச வாழ்வு வாழ்வர்.
6+7= செவ்வாய்+சுக்கிரன்= இந்த கிரக சம்பந்தம், எந்த விஷயத்திலும், பிடிப்பின்மை, பற்றற்ற தன்மையைத் தந்துவிடும்.
எனவே, வேலை, திருமணம், நாலுபேர்கூட பழகுவது என எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பர். இந்த குணம் இவர்களுக்கு தாழ்ந்த வாழ்வு நிலையைத் தந்துவிடும்.
தனுசு லக்னம்
9+10= சூரியன்+புதன்= இது பிரகாசமான அறிவை, தொழில் மேன்மையை, நிறைய மனிதர்களின் தொடர்பை கொடுப்பதோடு, அரசு சார்ந்த ஆதரவையும் கொடுப்பதால் உயர்ந்த வாழ்க்கை நிலை அமையும். 5+6= செவ்வாய்+சுக்கிரன்= இவர்களுக்கு எவ்வளவு லாபம் வந்தாலும், அத்தனையையும் செலவழித்து, விரயமாக்கிவிடுவதால், எப்போதும் மத்திம வாழ்க்கை வாழ்வர். 6+7= சுக்கிரன்+புதன்= இவர்கள் வாழ்வில் தொழிலும், அதி-ருந்து வரும் லாபமும் எதிரும் புதிருமாக அமையும். தொழில் நன்றாக நடந்தாலும், அதி-ருந்து லாபம் சம்பாதிக்க தெரியாதவர்களாக இருப்பர். இதனால் தாழ்ந்த வாழ்க்கை நிலை அமைந்துவிடும்.
மகர லக்னம்
9+10= புதன்+சுக்கிரன்= இவர்கள் தொழிலை ரொம்ப புத்திசா-த்தனம், கடும் உழைப்பு மற்றும் தன் தந்தை, வாரிசு இவைமூலம் எந்த சறுக்கலையும் சமாளித்துவிடும் ஆற்றல் இருக்கும். இந்த அளப்பரிய ஆற்றல், இவர்களை உயர்ந்த வாழ்க்கையை வாழச் செய்யும்.
5+6= சுக்கிரன்+புதன்= இவர்களின் தொழில் மேன்மை, வாழ்க்கை பிரச்சினையின்போது, இவர்களின் தந்தை மற்றும் குடும்பத்தி னரின் ஆதரவு கிடைக்காது. இதனால், போட்டிகளை, பிரச்சினைகளை தனியாளாக சமாளிப்பதால், மத்திம வாழ்க்கை வாழ இயலும்.
6+7= புதன்+சுக்கிரன்= இவர்களுக்கு வேலை சூழல் ஒரேமாதிரி அமையாமல் அல்லாடும். வேலை நிரந்தரமின்மை, வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு இன்மை என இவை தாழ்ந்த வாழ்வு நிலை தரும்.
கும்ப லக்னம்
9+10= சுக்கிரன்+செவ்வாய், இவர்களுக்கு கல்வி மற்றும் தகவல் தொடர்பு அல்லது வீடு, மனை விற்கும் வாங்கும் ரியல் எஸ்டேட் இவற்றின்மூலம் நல்ல மேன்மையடைந்து உயர்ந்த வாழ்க்கை பெறுவர்.
5+6= புதன்+சந்திரன்= இவர்கள் வேகமான அறிவுக்கூர்மை மிக்கவர்கள். எனினும், சில வேளைகளில், இவர்களின் கணிப்புகள் பெரும் நஷ்டத்தைக் கொடுத்துவிடும். இதனால் இவர்கள் ஏற்ற- இறக்கமுள்ள மத்திம வாழ்க்கை வாழமுடியும்.
6+7= சந்திரன்+சூரியன்= உங்கள் லக்னாதி பதி கும்ப சனிக்கு இந்த இரண்டு கிரகங்களும் ஆகவே ஆகாதவை. எனவே இவர்கள் சம்பந்தம், ஜாதகருக்கு தாழ்ந்த வாழ்க்கை நிலை கொடுக்கும்.
மீன லக்னம்
9+10= செவ்வாய்+குரு= இதன் சேர்க்கை பரிவர்த்தனை, அறிவின் வழி பணவரவைக் கொடுப்பதால், ஏதேனும் அறிவு, புத்தி சார்ந்த தொழி-ல் ஈடுபட்டு, உயர்ந்த வாழ்க்கை வாழ்வர்.
5+6= சந்திரன்+சூரியன் சிலசமயம் இவர்கள் எடுக்கும் படபடப்பான அவசர முடிவுகள் இவர்களை மத்திம வாழ்க்கை வாழ வைத்துவிடும்.
6+7= சூரியன்+புதன்= மண வாழ்வு, வேலை, உடல்நலத்தை கவனிக்காதது, வாழ்க்கைத் துணையின் வேலை என இவைசார்ந்த பிரச்சினைகளால் இவர்கள் தாழ்ந்த வாழ்க்கை வாழநேரிடும்.
செல்: 94449 61845