காலம் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள். இரண்டு அயன்கள் தட்சணாயினம்.

உத்திராயணம் நான்கு பருவங்கள் என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது சதா சுழன்று வரும் காலத்தில். 12 வருடங்கள் என்பது மாணவர்களுக்கு கல்லூரி செல்லும் பருவமாகும். அந்த பருவம் அவர்களின் கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் காலம். இப்போது அதுவும் மாறும் நிலைதான். பெற்றோரும் மாணவர்களும் என்ன செய்யலாம் என தம் குழந்தைகளின் கல்விக்கு எது உகந்தது என எண்ணி எண்ணி மனம் பாடாய்ப்படுத்தும்.

"அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி

எடுத்த கருமங்கள் ஆகா!

தொடுத்த உருவத்தால் உயர்ந்த மரங்களும்

பருவத்தால் அன்றி வாழா.''

-பழம் பாடல்

என்றாலும் யத்னம். பிரயத்னம், தெய்வத்தனம்போல் முயற்சிதான் வெற்றியை தேடித்தரும். இது ஒரு சாஸ்திர வழிகாட்டல். எனவே முயற்சிதான் திருவினையாக்கும்.

ஒரு ஜாதகத்தின் நான்காமிடம் ஆரம்ப கல்வியையும், ஒன்பதாமிடம் உயர் கல்வியையும் குறிக்கும் இடங்களாகும். ஒரு ஜாதகத்தில் நான்காமதிபதி வலுவுடன் புதனுடன் கூட்டு சேர்ந்தால் கல்வியில் சாதனை புரியலாம்.

ss

நேராக தலைப்புக்கு வருவோம்

பி.காம். எம்.காம். சி.ஏ- சூரியன்+புதன் இணைந்து வாக்கு ஸ்தானத்தில்- அதாவது இரண்டில் இருப்பின், கணிததுறையில் சிறப் பாக விளங்கலாம். சூரியன் பலம்பெற்றால் கணித துறையில் சாதனை படைக்கலாம். குரு பார்த்தால் பி.காம். எம்.காம் போன்ற கல்வி அமையும்.

பி.டெக், எம்.டெக் செவ்வாய் நான்காம் இடத்தை பார்த்தால், பொறியியல் துறையில் உயர் பதவி, பட்டம் பெறலாம். செவ்வாய், புதன், சூரியன் சேர்க்கை பெற்று, குரு பார்வை பெறின் பி.டெக், எம்.டெக் படிப்பு சாலச் சிறந்தது. செவ்வாய், புதன் பரிவர்த்தனை செவ்வாய் வீட்டில் புதன் இருப்பின் பொறியியல் சாதனை படைக்கலாம்.

டாக்டர்

பொதுவாக கேதுவுக்கு மருத்துவத்துறைக் கும் தொடர்புண்டு. லக்னத்திற்கு 9, 10, 11 கேது இருப்பின் மருத்துவ கல்வி உகந்தது. சூரியன், செவ்வாய் சேர்ந்தாலும், சந்திரன் உச்சம்பெற்று வலுவாக காணப்பட்டாலும், மருத்துவம், சித்தா- யுனானி, ஆயுர்வேத, ஹோமியோபதி எதிலும் நாட்டம் செலுத்தலாம்.

ஆடிட்டர்

புதன், ஆட்சி, உச்சம்பெற்று குரு பார்வை பெறின். ஆடிட்டர் படிப்பு பொருத்தமானது.

அதிலும். 3, 12, 21 தேதிகளில் மார்ச், ஜூனில் பிறந்தால் அதிகமான பணவரவை பெறலாம்.

வழக்கறிஞர் (லாயர்)

குரு, புதன், சுக்கிரன் பலன்பெற்று இருப்பினும் குரு 9-ல் அமைந்து ஆறாம் அதிபதி பலம் பெற்றால் வழக்கறிஞர் ஆகலாம். சூரியனும், சந்திரனும் பலம்பெற்று காணப்படின் வாதாடும் திறன் அதிகமாகும். உள்ளங்கையில் செவ்வாய் மேடு இரண்டும் உச்சம் என்றால் கிரிமினல் லாயர் என்ற தகுதி உச்சமாகும்.

ஐ.ஏ.எஸ்

ஜாதகத்தில் 2 அல்லது 10-ல் சனி, செவ்வாய் சேர்க்கைப்பெற்று பலமுடன் இருந்து 9-ல் சந்திரன் நின்று குரு பார்த்தால் ஐ.ஏ.எஸ் என்ற பட்டம் பெற ஜாதகம் துணைவரும்.

ஐ.பி.எஸ்

செவ்வாய் ஆட்சி, உச்சம்பெற்று, மிக பலத்துடன் அமைந்தால், ஐ.பி.எஸ் என்ற காவல் துறைக்கும், ஏற்றம் தரும். உயர் பதவியும் நாடிவரும்.

வேத சாஸ்திரம்

லக்ன கேந்திர கோணத்தில் கேது அமர்ந்து புதன் குரு பார்வை செய்யின் வேத சாஸ்திரம் சுலபமாகும்.

ரசாயணம்

சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று கேந்திர கோணத்தில் இருப்பின் ரசாயண கல்வியிலும் பத்தாமிடத்தில் சூரியன், புதன், குரு இருப்பின் சேர்க்கை பெறின் எம்.ஏ. பட்டம் இவர்களுடன் ராகு சேர்ந்தால் எம்.எஸ். கல்வியும் இணையும்.

வித்வான் புலவர்

புதன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குருபார்வை பெறின் தமிழ் துறையில் டாக்டர் பட்டம் பெறலாம். குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று 1, 5, 9-ல் இருப்பின் வித்வான், புலவர் பட்டம் பெறலாம் குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 1, 5, 9-ல் இருப்பின் வித்வான் புலவர் பட்டம் ஏதுவாகும். சுக்கிர மேடு உச்சம் பெற்றால் பெரிய சொர்பொழிவாளர் ஆகலாம்.

ஜெபம் மந்திரம் செய்ய

தெய்வ வழிபாடுகள் செய்பவருக்கு ஜெபம் மந்திரத்தின்மேல் நம்பிக்கையுடையோர்க்கு லக்னத்திற்கு 5-ஆமிடத்தில் கேது, சனி வீற்றிருக்க குரு பார்த்தால், குருக்கள், புரோகிதர் மற்றும் மகான்கள் ஜாதகத்தில் காணப்படும். தெய்வீக வழிபட்டால் நாட்டம் காணப்படும்.

உயர் கல்வியில் தடை ஏன்?

ஒரு ஜாதகத்தில் 12-ல் புதன் இருந்து செவ்வாய் பார்வைப்பெற்றால் பட்ட கல்விபெற இயலாது; தடை ஏற்படும்.

* செவ்வாய் நான்காம் வீட்டில் ஆட்சி, உச்சம் பெறின், குறைவான கல்வி பெற இயலும்.

* ஐந்திற்கதிபதிகள் அசுபர்கள் மத்தியில் 7-ல் அமையப்பெற்றால் உயர்கல்வி பெற தடை ஏற்படும்.

* கல்வி அதிபதி புதன் பலவீனம் பெற்று நான்காம் அதிபதியும் பலவீனம் இருந்தாலும் கல்வியில் தடை ஏற்படும்.

"குணம் நாடி குற்றம் நாடி

அவற்றுள் மிக நாடி மிக்ககொளல்''

வள்ளுவர் கூற்றுபடி அவரவர்க்கு

அமையும் நல்ல கல்வியை தேர்வுசெய்து பின் தொடர்ந்தால் வெற்றி சுலபமாகும்.

கல்விக்கு துணை நிற்கும் ஜாதகம் அமைப்பு

*1 உச்சம் பெற்ற கிரகநாதர் 10-ஆமிடத் தில் இருப்பது.

* 2, 10-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை.

* சனி 9-ல் இருந்து வக்ரம் பெற்று ஆட்சி, உச்சம் பெறுவது.

* புதனுக்கு 2, 5, 9-ல் சுபர் இருப்பது அதன் அதிபதிகள் பலம் பெறுவது.v ப் பத்தாமதிபதி நவாம்சத்தில் பலம் பெறுவது.

* புதன் ஆட்சி பெற்று 2, 5-ல் இருப்பது அவர்களை குரு சுக்கிரன் பார்ப்பது.

* இரண்டாம் அதிபதிகள் பலம்பெற்று மிதுனம் கன்னியில் இருப்பது.

சரஸ்வதி யோகம்

குரு ஆட்சி, உச்சம்பெற்று சுக்கிரன், குரு, புதன் 1, 3, 4, 5, 7, 9, 10-ல் பலமுடன் இருப்பது.

எல்லா ராசியினருக்கும்

எல்லா உத்தியோகம்,

வியாபாரம் பெருமை தராது!

உதாரணமாக மேஷ ராசியினருக்கு எது பொருத்தமானது என பார்ப்போம். ஆண்- பெண் இருவருக்கும் உரியவை.

இராணுவம், காவல் துறை, ஆராய்ச்சி துறை மிருகங்களுக்கு, பயிற்சி, தரகு, மெய்காவலர் பதவி. (பி.ஏ) செல்வந்தர் வீட்டில் துணை பணியாளர், பல் மருத்துவம், காவலாளி, பைலட் (விமான ஓட்டி) ஆயுள் காப்பீட்டு முகவர், மன நோய் மருத்துவம் பி.ஆர்.ஓ பொதுஜன தொடர்பு, அரசு வேலை, அரசு சார்ந்த தொழில் இவற்றில் கவனம் செலுத்தலாம்.

வியாபாரம்

இரும்பு உலோக விற்பனை, வாகன உருதி பாகம், விற்பனை, தயாரிப்பு உளுந்து மொத்த வியாபாரம் உளுந்து, எள்ளு பயிரிடல், கழிவுப் பொருள் விற்பனை, துப்பாக்கி வார்ப்பு தொழில், பம்பு செட் விற்பனை, கனரக வாகனம் ஓட்டுவது. டிரங் பெட்டி விற்பனை, உற்பத்தி, மின்விசிறி தயாரிப்பு, எலக்ட்ரிக்கல் ஸ்டோர், சிவப்பு நிற பொருள் விற்பனை, ஆப்பிள் போன்றவை மொத்த வியாபாரம், சென்னிற மிளகாய் வற்றல், செங்கல் சூள்ளையும் ஒத்துவரும்.

எல்லா வாரமும் அதிர்ஷ்ட நேரம்

ஞாயிற்றுக்கிழமை: மாலை 6.00 மணியி-ருந்து 7.00 மணிவரை.

திங்கட்கிழமை: காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை; மாலை 3.00 மணிமுதல் 4.00 மணிவரை; இரவு 10.00 மணிமுதல் 11.00 மணிவரை.

செவ்வாய்க்கிழமை: காலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரை; இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிவரை.

புதன்கிழமை: காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை; மாலை 4.00 மணிமுதல் 5.00 மணிவரை.

வியாழக்கிழமை: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை; பகல் 1.30 மணியும்; இரவு 8.00 மணிமுதல் 9.00 மணிவரை.

வெள்ளிக்கிழமை: காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை; மாலை 5.00 மணிமுதல் 6.00 மணிவரை.

சனிக்கிழமை: 7.00 மணிமுதல் 8.00 மணிவரை; பகல் 2.00 மணிமுதல் 3.00 மணிவரை; இரவு 10.00 மணிமுதல் 11.00 மணிவரை.

மேலே குறிப்பிட்ட நேரங்களில் அந்த நாட்களில் புது முயற்சி செய்யலாம். வெற்றி யைத் பெற்றுத் தரும்.

செல்: 93801 73464

Advertisment