திருமண பொருத்தத்திற்கு அவசியமான ஜாதக இடங்கள் எவை? -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/what-are-essential-horoscope-placements-marriage-compatibility-s

திருமணப் பொருத்தத்திற்கு அவசிய மானது என்ன? இதற்கு முதலில் மனைவி அமைவது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை நாம் ஆராயவேண்டும். அதற்கு ஹோரா சாஸ்திராவின் அடிப்படை அறிவு ஜோதிடருக்கு அவசியமாகும்..

ஆண் ஜாதகத்தில் சுப கிரகங்கள் கேந்திரம் அல்லது கோணங்களில் இருந்து, களத்திர பாவமான 7-ஆம் பாவத்தை சுபகிரகங்கள் பார்க்குமானால், அவனுக்கு அமையப்போகும் பெண்ணானவள், நல்ல குணமுள்ளவளாக இருப்பாள். ஆனால், 7-ஆமிடத்தை செவ்வாய் பார்க்குமானால், அவள் முன்கோபம் உடையவளாக இருப் பாள். சூரியன் பார்வை செய்ய கம்பீரமான வளாகவும், மனோ தைரியம், ராஜலட்சணங் கள் உடையவளாகவும் இருப்பாள். களத்திர பாவத்தில் சந்திரன் இருந்து, அந்த 7-ஆம் வீடு சுக்கிரன், புதன், சந்திரன், குருவின் ஆட்சி வீடாக இருந்தால் அவனுக்கு வாய்க் கும் மனைவி, அழகுள்ளவளாகவும், பெண்மை நிறைந்தவளாகவும், கணவன்பால் அன்பும்

திருமணப் பொருத்தத்திற்கு அவசிய மானது என்ன? இதற்கு முதலில் மனைவி அமைவது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை நாம் ஆராயவேண்டும். அதற்கு ஹோரா சாஸ்திராவின் அடிப்படை அறிவு ஜோதிடருக்கு அவசியமாகும்..

ஆண் ஜாதகத்தில் சுப கிரகங்கள் கேந்திரம் அல்லது கோணங்களில் இருந்து, களத்திர பாவமான 7-ஆம் பாவத்தை சுபகிரகங்கள் பார்க்குமானால், அவனுக்கு அமையப்போகும் பெண்ணானவள், நல்ல குணமுள்ளவளாக இருப்பாள். ஆனால், 7-ஆமிடத்தை செவ்வாய் பார்க்குமானால், அவள் முன்கோபம் உடையவளாக இருப் பாள். சூரியன் பார்வை செய்ய கம்பீரமான வளாகவும், மனோ தைரியம், ராஜலட்சணங் கள் உடையவளாகவும் இருப்பாள். களத்திர பாவத்தில் சந்திரன் இருந்து, அந்த 7-ஆம் வீடு சுக்கிரன், புதன், சந்திரன், குருவின் ஆட்சி வீடாக இருந்தால் அவனுக்கு வாய்க் கும் மனைவி, அழகுள்ளவளாகவும், பெண்மை நிறைந்தவளாகவும், கணவன்பால் அன்பும், ஈர்ப்பும் உடையவளாகவும் அமைவாள். அழகான நல்ல புக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பாள்.

களத்திர பாவத்தில் புதன் இருக்க அந்த ஜாதகனுக்கு வாய்க்கும் மனைவி பண்பும், பயிற்சியும் உடையவளாக இருப்பாள். புத்தி சாலியும் ஆவாள். குரு இருக்க, அவனுக்கு, முறைப்படி திருமணம் நடக்குமானால், வாய்க்கும் மனைவி பலமொழிகளை அறிந்தவளாக இருப்பதோடு, நற்புத்திகளை புகட்டுபவளாகவும் இருப்பாள். நல்ல குழந்தைகளை பெற்றெடுப்பாள். ஆனால், கணவனின் குடும்பத்தாருடன் ஒத்துப்போக மாட்டாள்.

ss

7-ஆம் வீடு சனியின் வீடாகி, அதில் குரு இருக்கப் பிறந்தவள் கணவனுக்கு மதிப் பளித்தாலும்கூட, அவன்மீது எப்போதும் சந்தேகம் கொள்வாள். ஒவ்வாத மனப்பான்மையும் உடையவளாக இருப்பாள்.

ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் 7-ல் சுக்கிரன் இருப்பது நல்லதல்ல என்று சொல்வதுண்டு. ஆயினும், சுக்கிரன் தன் ஆட்சி வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்து, குரு அல்லது புதனுடன் இணைந்திருந்தால் அந்த தோஷம் விலகும்.

ஆண் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் சனியிருக்க, அவனது திருமணம் மரபுக்கு நேர்மாறானதாகவோ, தனது குலம், ஜாதி, இனம் இவற்றிற்கு மாறுபட்டோ இருக்கும். ஆனால், தம்பதிகளுக்குள் ஆழ்ந்த நேசமும், தோழமையும் கூடுதலாகவே இருக்கும்.

பெண் ஜாதகத்தில் 7-ல் சனி இருப்பின் அவளுக்கு வரப்போகிற கணவன் கீழ் ஜாதியில் பிறந்தவனாக அல்லது கீழ்த் தரமான குணங்களை உடையவனாகவோ இருப்பான். மனைவியை ஒரு விளையாட்டு பொம்மையாக- பொருளாக கருதுவான். ஆனால் மனையாளின் மனமகிழ்ச்சிக்காக எவ்வித தியாகத்தையும் செய்வான்.

ஆண் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் ராகு இருக்குமா னால் அவன் இயற்கைக்கு முரண்பட்ட வழிகளில் தனது காமவெறியை தீர்த்துக் கொள் வான். கேது இருக்குமானால் வாய்க்கும் மனைவி நிதானமான புத்தி உள்ளவளாகவும் சுக- துக்கங்களை சமமாக பாவிப்பவளாகவும் இருப் பாள். எவரிடமும் விரோதம் கொள்ளமாட்டாள்.

பெண்கள் ஜாதகத்தில் 7-ல் இருக்குமானால் அவள் பருவமடைந்த நாள்முதல் அது தொடர்பான நோயும், திருமணத்திற்குபின் ரஜஸ் வாலா (மாத விடாய்) தோஷம் உடையவளாக இருப்பாள். கேது இருக்குமானால் கணவன் உலக பற்றற்ற வனாக, தெய்வ நம்பிக்கை மிக்கவனாக இருப்பான்.

பெண்கள் ஜாதகத்தில் 5-ஆமிடம் புத்திர பாக்கியத்தையும், கருச்சிதைவையும், குறைப் பிரசவத்தையும்கூடக் குறிக்கும். ஆண்கள் ஜாதகத்தில் 5-ஆமிடம் புத்திர பாக்கியத்தை யும், அந்தந்த ஜாதகனுக்குத் திருமணத்தால் ஏற்படப்போகும் நன்மை- தீமைகளையும் குறிக்கும். 7-ஆமிடமென்பது முக்கியமான வீடாகும்.

மண வாழ்வைப் பொறுத்த வரை 7-ஆமிடம் என்பது, அவரவர்களுக்கு ஏற்பட விருக்கும் பாலுறவு, அத னால் ஏற்படும் திருப்தி, காமவெறி, கட்டுக்கடங்கா வாழ்க்கை, வெட்கமின்மை ஆகியவற்றையும் குறிக்கும்.

பொதுவாகவே, 9-ஆம் இடத்திலிருந்து மறுதாரம், குண விவாகம், புத்திர பிராப்தியால் ஏற்படும் நன்மை- தீமைகள், தெய்வ அனுகூலம் மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றைக் குறிக்கும். கணவன்- மனைவி உறவையும், பாலுறவையும் அதன் மூலம் கிடைக்கும் திருப்தியையும், சந்தோஷத்தையும் ஏக்கத்தையும் குறிக்கும்.

12-ஆமிடம் காமவெறியையும், அதன்மூலம் ஏற்படும், சுக- துக்கங்களை யும், இன்ப- துன்பங்களையும் துல்லியமாக எடுத்துக்காட்டும். எனவே, மேற்சொல்லப் பட்ட அனைத்து இடங்களுமே முக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.

இந்த பலன்களெல்லாம் அந்தந்த கிரகங் கள் இருக்குமிடம், அவற்றை பார்க்கும் கிரகத்தின் தன்மை, கிரகங்களின் இணைவு, பாவகாரகத்துவம் இவற்றின் காரணமாக அவ்வப்பொழுது மாறக்கூடும். எனினும் இந்த விளக்கங்களை எல்லாம் ஜோதிடர் கள் ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

செல்: 97891 01742.

bala190124
இதையும் படியுங்கள்
Subscribe