ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
26-11-2019- விருச்சிகம்.
28-11-2019- தனுசு.
30-11-2019- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 2, 3, 4.
செவ்வாய்: சுவாதி- 1, 2.
புதன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2, 3.
குரு: மூலம்- 2.
சுக்கிரன்: மூலம்- 1, 2, 3, 4.
சனி: பூராடம்- 1, 2.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து தன் ராசியைப் பார்க்கிறார். அவருடன் 3, 6-க்குடைய புதனும் பார்க்கிறார். செவ்வாயும் புதனும் ராகுவின் சாரம் (சுவாதி) பெறுகிறார்கள். அத்துடன் 9-க்குடைய குருவும் ராசியைப் பார்க்கிறார். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். அலைச்சலும் திரிச்சலும் அதிகம் இருந்தாலும் தேக சுகத்தில் பாதிப்பு இருக்காது. 2-க்குடைய சுக்கிரன் 9-ல் நிற்கிறார்; திரிகோணம் பெறுகிறார். 2-ஆமிடத்தை சூரியனும் செவ்வாயும் பார்க் கிறார்கள். எதிர்பாராத தனப்பிராப்தி அமையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். பிள்ளைகளின் ஆதரவும் அனுச ரணையும் அனுகூலமாக அமையும். சகோதரவகையில் சுபச்செய்திகள் தேடிவரும். செய்முறைச் செலவுகளும் உண்டாகும். வேலையாட் களுக்கு வேலைப்பளு அதிக மாகும். பிறரிடம் பொறுப்பு களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக கடமை களைச் செய்வதால் நிர்வா கத்துறையின் பாராட்டைப் பெறலாம். உடன்பிறந்த வகை யிலும், சம்பந்தக்காரர்கள் வகையிலும் தவிர்க்க முடியாத செலவுகளைச் சந்திக்கவேண்டும். ஒருசிலருக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலை களும் தொல்லைகளும் காணப்பட்டாலும் 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்கள் திட்டப்படியே எல்லாம் நிறைவேறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும், ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி சேர்க்கை. அத்துடன் வீடுகொடுத்த குரு ஆட்சி. எனவே, அட்டமாதிபத்திய தோஷம் விலகும். 4-க்குடைய சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 7-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்து 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பொருளாதாரநிலை திருப்தியாக அமையும். புதுமுயற்சிகள் எல்லாம் தங்குதடையின்றி நிறைவேறும். எதிர்பாராத தனப் ராப்தியும், அதிர்ஷ்ட யோகமும் தேடிவந்து அரவ ணைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவி யோகமும், ஊதிய உயர்வும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் முன்னேற்றமும் விருத்தியும் உண்டாகும். அட்டமத்துச்சனி உங்களுக்கு பொங்குசனி யாகப் பொலிவை ஏற்படுத்தும். தங்குதடை யில்லாத மங்களம் பொங்கும். சிலருக்கு குடியிருப்பு மாறும். சிலருக்கு பதவி, இடம் மாறும். சிலருக்கு உபதொழில் யோகம் அமையும். வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு இக்காலம் நற்காலம், பொற்காலம். மனைவி, மக்களோடு குடும்பத்தில் இணைந்திருப்பவர்களுக்கு அட்டமத்துச்சனி தொழில்நிமித்தம் பிரிந்திருக்கும் சூழ்நிலை அமையும். அது ஆனந்தமான பிரிவுதான்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம். அவருடன் செவ்வாய் சம்பந்தம். செவ்வாயும் புதனும் ராகு சாரம். (சுவாதி). ராகு ஜென்மத் தில் சுயசாரம். செல்வாக்கும் புகழும் பெருமையும் உண்டாகும். உங்கள் திறமைக்குப் பாராட்டுக் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திருப்தியாக செயல்பட்டு மனநிறைவடையலாம். மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொருளா தாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும். எப்போதும் மனம் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருப்பதால் செயல்கள் அனைத்தும் சீரும்சிறப்புமாக அமையும். 7-ல், 10-க்குடைய குரு ஆட்சிபெறுவதாலும், சுக்கிரன், சனி சம்பந்தப்படுவதாலும் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு மனைவியின் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான மணவாழ்க் கையும் அமையும். சுக்கிரன் 5-க்குடையவர். சனி 9-க்குடை யவர். இருவரும் திரிகோணாதிபதிகள்; 7-ல் இணைவ தால் கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக் கும் மனநிறைவும் திருப்தியும் உண்டாகும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கடமைக் காரியங்களில் முத்திரை பதிக்கலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் சுறுசுறுப் பாக செயல்பட்டு லாபம் காணலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ஆமிடத்தில் குரு, சுக்கிரன், சனி, கேது மறைகிறார்கள். 12-ல் ராகு மறை கிறார். 8-க்குடைய சனி 6-ல் மறைவது நல்லதுதான். ஆனால் 9-க்குடைய குரு 6-ல் மறைவது நல்லதல்ல. என்றாலும் குரு ஆட்சி என்பதாலும்; 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும்; 10-க்குடைய செவ் வாயும் 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமைந்து உங்களை வழிநடத்தும். 12-ல் உள்ள ராகு சுயசாரம் பெறுவதால், சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும். அதேபோல உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களது வெற்றிக்குப் பக்கபலமாக அமையும். 6-ல் மறையும் கிரகங்களினால் சிலநேரம் தடைகளும் தாமதங் களும் உருவானாலும், உங்கள் விடாமுயற்சி யாலும் வைராக்கியத்தாலும் அவற்றைக் கடந்து முன்னேறலாம். இறைவன் எப்போதும் சோம் பேறிக்கும் நம்பிக்கை துரோகிக்கும் அருள்புரிய மாட்டார். வைராக்கியமும் விடாமுயற்சியும் உள்ள கடின உழைப்பாளிக்கு கூடவே இருந்து வழிநடத்துவார். நீங்கள் அந்த இரண்டாம் இடத்தில் அங்கம் வகிப்பவர் என்பதால், குருவருளும் திருவருளும் பரிபூரணமாக வழிநடத்தும். சிறுசிறு குறுக்கீடுகளையும் கடக்கலாம்; முன்னேற்றலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் இடம் தொழில், ஜீவிதம், வாழ்க்கை ஸ்தானம். அந்த இடத்தை சூரியனும் பார்க்கிறார்; 4, 9-க்குடைய செவ்வாயும் பார்க்கிறார். 9-க்குடையவர் 10-ஆமிடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோக மாகும். அவருடன் 2, 11-க்குடைய புதனும் சம்பந்தம். எனவே, திட்டமிட்ட காரியங்களில் திட்டமிட்டபடி செயல் பட்டு வெற்றிபெறலாம். உங்கள் திறமைக்கேற்ற பெருமையும் புகழும் தேடிவரும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கும் குறையாது. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்ற குறளின் தத்துவப்படி, வைராக் கியமும் விடாமுயற்சியும் உங்களை வழிநடத்தி வெற்றிகளைக் குவிக்கச் செய்யும். நம்பிக்கையும், நல்லோர் ஆதரவும் என்றும் உங்களுக்கு இருக்கும் என்பதை 5-ஆம் இடத்து குரு எடுத்துக்காட்டுவார். 10-க்குடைய சுக்கிரன் சம்பந்தம் என்பதால் உங்கள் வாழ்க்கை வளமாகும். முயற்சிகள் நலமாகும். செயல்கள் சிறப்பாகும். 7-க்குடைய சனி களஸ்திரகாரகன் சுக்கிரனோடு சம்பந்தம் பெறுவதால், கிருஷ்ண பகவானுக்கு பாமா போரில் உதவிபுரிந்து வெற்றிபெறச் செய்ததுபோல, உங்கள் வாழ்க்கை யின் முன்னேற்றத்திற்கு மனைவி உறு துணையாக இருந்து செயல்படுவார்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் பலம்பெறு கிறார். ஆரம்பத்தில் ராகு சாரம். (சுவாதி). பிறகு குரு சாரம். (விசாகம்). ராகு 10-ல் இருக்கிறார். குரு 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே, உங்களுடைய தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். அதனால் உங்கள் முயற்சிகளில் சுணக்கம் இருக்காது; தயக்கம் இருக்காது. எல்லாம் வெற்றியாகவும் சிறப்பாகவும் அமையும். பணியில் இருப்பவர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் லாபமும் பெருகும். சிலருக்கு பூமி, வீடு வாகனவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். கணவர் அல்லது மனைவி பெயரில் சொத்துசுகங்கள் அமைக்க லாம். பணியாளர்களுக்குக் குறைந்த உழைப்பில் அதிகப் பலனும் பயனும் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். விரும்பிய இடமாற்றங்கள் அமையும். உங்கள் வாழ்க்கையிலும், முயற்சி, செயல்களிலும், தொழில்துறையிலும் சங்கடங்களை உண்டாக்கி, சஞ்சலப்படுத்தி வந்தவர்கள் தாங்களே சங்கடத் திற்கு ஆளாகி உங்களைவிட்டு ஒதுங்கிவிடு வார்கள். சிலர் தர்ம ஸ்தாபனங்களில் இறங்கி சாதனைகள் படைத்து பாராட்டுப் பெறலாம். தேக ஆரோக்கியமும் தெளிவாகக் காணப்படும். சிலருக்கு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலையும் மனதில் ஒருபுறம் இருக்கும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 9-ல் நிற்கும் ராகுவும், அவரைப் பார்க்கும் 3-ஆமிடத்து குருவும், சுக்கிரனும் சனியும் ஆன்மிகத்துறையில் மிகுந்த ஈடுபாட்டையும், மனநிறைவையும் ஏற்படுத்து வார்கள். தர்மகைங்கர்யங்களில் முழு ஈடுபாடு உருவாகும். தெய்வத் தொண்டு, தர்ம பரிபாலனத் தொண்டு, ஊனமுற்றோர் மறுவாழ்வு, முதியோர் காப்பகம், அநாதை ஆதரவு இல்லம் போன்ற அமைப்புகளில் முழு ஈடுபாடு ஏற்படும். அரசு உதவியும், ஆன்றோர்- சான்றோர் உதவியும் பெற்று மேற்படி கைங்கர்யங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியும் மனநிறைவும் அடையலாம். மனைவியால் கணவருக்கும், கணவரால் மனைவிக்கும் பெருமையும் புகழும் மன நிறைவும் உருவாகும். மக்களைப் பெற்றவர்கள் அக்கறையோடு செயல்பட்டு அவர்களைப் பாராட்டும் இடத்தில் அமர்த்தி பூரிப்படைய லாம். வள்ளுவர் சொன்னதுபோல "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்', "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்' என்ற அடிப்படையில் பெற்ற பெருமைக்கும், பிறந்த கடமைக்கும் இருவரும் பலனடையும் காலம். அதேபோல "ஈன்ற பொழுதும் பெரிது வக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என தாயும் பெருமையடையும் காலம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல். எனவே வரவும் உண்டு; செலவும் உண்டு. தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வரவுக்குமேல் செலவும் ஏற்படும். அதை சமாளிக்க வெளியில் கடன் வாங்கநேரும். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் இடம் வாங்குதல், வீடு கட்டுதல், வாகன மாற்றங்கள், புதிய வாகனம் வாங்குதல், கட்டட சீர்திருத்தங்கள் போன்ற சுபச்செலவுகள் செய்யலாம். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு நல்ல காரியம் செய்யலாம். வேலை அல்லது தொழில் சம்பந்த மாக தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்படும். அடிக்கடி வெளியில் பயணம் ஏற்படும். ஜனன ஜாதகத்திலும் ஏழரைச்சனி- அட்டமத்துச் சனி நடந்தால் வெளியூர் வாசம் ஏற்படும் என்பது ஜோதிட விதி. உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் குடும்பத்தைவிட்டு விலகியிருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். மனைவி, மக்களைப் பிரிந்து வாழும் அமைப்பு ஏற்படலாம். 35 வயதிற்குமேல் நடப்பவர் களுக்கு இது இரண்டாம் சுற்று ஏழரைச்சனி. இது பொங்குசனியாகப் பலன் தரும். 60 வயதிற்குமேல் நடப்பவர்களுக்கு மூன்றாம் சுற்று. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி- ஏழரைச்சனி நடக்கிறது. இருந்தாலும் சனிக்கு வீடுகொடுத்த குரு ஆட்சிபெறுவதால் ஜென்மச்சனி கடுமை யாக பாதிக்காது. 6-க்குடைய சுக்கிரனும் கேது- ராகு சம்பந்தம் பெறுவதால், வேலைப்பளு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கும், சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கும் சாப்பிடக்கூட நேரமிருக்காது. நேரம் கெட்டநேரத்தில் சாப்பிடுவதால் சிலநேரம் வயிற்றுக்கு சேராது. குடும்பப் பெண்களுக்கு கணவர், பிள்ளைகள், மருமகன்- மருமகள், பேரன்- பேத்திகள் எல்லாரையும் அனுசரித்துச் செயல்படுவதிலும், எல்லாரையும் திருப்திப்படுத்துவதிலும் ஆர்வம், அக்கறை காணப்படும். 7-ல் ராகு நிற்பதால், அன்பின் பெருக்கால் வீட்டுக்காரரோடு உரிமைப் போராட்டம் அதிகமாக இருக்கும். ஆண்கள் என்றால், வேலைக்குப்போகும் மனைவிகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு கவனிப்பார்கள். அந்த அளவுக்கு குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். ஏழரைச்சனி- ஜென்மச்சனி நடந்தாலும் இது பொங்குசனியாக மாறி பொலிவைத் தரும். சுபச்செலவுகள் அல்லது முக்கியமான முதலீடுகள் செய்யலாம். ஒருசிலர் சொந்த வீடு, பிளாட் வாங்கும் முயற்சியில் இறங்கலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குருவும் 12-ல் மறைவு. என்றாலும் 4, 11-க்குடைய செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 9-க்கு டைய புதனும் 10-ல் இருக்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அந்த 9-ஆம் இடத்தை ராசிநாதன் சனி குருவோடு சம்பந்தப்பட்டுப் பார்க்கிறார். எனவே குரு வருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். அட்டமாதிபதி சூரியன் 11-ல் பாதக ஸ்தானத்தில் இருக்க, அவருக்கு 12-ல் தகப் பனார் ஸ்தானாதிபதி மறைவதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் அல்லது தகப்பனார் வகையில் வருத்தம் ஏற்பட இடமுண்டு. பிரச்சினைகளும் கவலைகளும் மனதை வருத்தும். 6, 10-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவதால், தொழில்துறையில் சில மாற்றங்கள் வரும். விரயச்சனி நடப்பதால் இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளியூர் வாசம் ஏற்பட இடமுண்டு. சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், குடும்பத்தைவிட்டு விலகி வெகுதூரம் செல்லும் யோகமும் அமையும். பிரிவு நன்மையும், ஆதாயமும், அனுகூலமும் உடையதாக அமையும். 4-க்குடைய செவ்வாய் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனவகையில் முதலீடு செய்யலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக 3, 6, 11-ஆமிடங்கள் உத்தம இடங்களாகும்; யோகம் தரும் இடங்கள். "ஆறு பன்னொன் பான் மூன்றில் அந்தகன் நிற்குமாயின் கூறு பொன் பொருளுமுண்டாம்; குறைவிலாச் செல்வமுண்டாம்; ஏறும் பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்; காரு பால் அஷ்டலட்சுமி கடாட்சமுமுண்டாகும்தானே' என்பது ஜோதிடப்பாடல். (சந்திரகாவிய விதி). சனி 11-ல் நிற்க, 4, 9-க்குடைய சுக்கிரனும் 11-ல் நிற்க, அவருக்கு வீடுகொடுத்த குருவும் 11-ல் ஆட்சிபெறுவதால், மேற்சொன்ன பாடலின் கருத்துப்படி உங்களுக்கு எல்லாச் செல்வமும் யோகமும் உண்டாகும். 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். கருதிய காரியங்கள் கைகூடும். நினைத்தவை நேர்மையானவையாக இருந்தால் நிறைவேறும். பொதுவாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படும். புகழும் பெருமையும் உண்டாகும். சிலசமயம் கைச்செலவும் ஏற்படும். 10-ல் சூரியன் இருப்பதால், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலச் செய்தி தேடிவரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறுகிறார். அவருடன் 8-க்குடைய சுக்கிரனும் 12-க்குடைய சனியும் சேர்க்கை. வரவும் உண்டு; செலவும் உண்டு. ஆயிரமாயிரமாக வரவும் வரும்; ஆயிரமாயிரமாக செலவும் வரும். சிலசமயம் வரவுக்கு முன்பே செலவு வாசலில்வந்து காத்திருக்கும். வரவு வந்தவுடன் பட்டுவாடா செய்துவிடலாம். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கலையார்வம் பெருகும். சினிமா மோகம் ஏற்படும். 10-ல் சுக்கிரன் இருப்பது கலைத்தொழிலை அறிவுறுத்தும். அவரோடு குருவும் சனியும் கேதுவும் சேர்வதால் சினிமா முயற்சியில் தீவிரமாக ஈடுபடலாம். சனி லாபாதிபதி என்பதாலும், விரயாதிபதி என்பதாலும் முதலில் செலவு ஏற்பட்டாலும் அது சுபச்செலவு. செய்த செலவு பிறகு லாபமாகத் திரும்பக் கிடைக்கும். தேவைப்பட்டால் பணமுதலீட்டுக்காக கூட்டு சேர்த்துக்கொள்ளலாம். ஒருசிலர் வெளியூர், வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம். ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்காது. நீண்டநாள் கனவு களும், லட்சியமும் கூடும் காலம். செல்வாக்கும் சிறப்பும் தேடிவரும். பாராட்டும் பெருமையும் உண்டாகும். மொத்தத்தில் உங்கள் திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் காலம்!