முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூரட்டாதி- 2.

செவ்வாய்: புனர்பூசம்- 2.

Advertisment

புதன்: உத்திரட்டாதி- 3.

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 4 (வ).

Advertisment

சனி: பூரட்டாதி- 3.

ராகு: உத்திரட்டாதி- 1.

கேது: உத்திரம்- 3.

கிரக மாற்றம்:

14-3-2025 மீன சூரியன் மாலை 6.50 மணிக்கு

15-3-2025 புதன் வ.ஆ பகல் 12.16 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: மிதுனம்

9-3-2025 மாலை 5.45 மணிக்கு கடகம்.

12-3-2025 அதிகாலை 2.15 மணிக்கு சிம்மம்.

14-3-2025 பகல் 12.56 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்களது எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பணி தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் பொருளாதார அனுகூலத்தை தரும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 9, 14, 15.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், ராகு, புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகளில் சற்று ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 5-ல் கேது சஞ்சரிப்ப தால் பேச்சில் சற்று நிதானத்தோடு இருப்பது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களால் சிறுசிறு இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு தேவையற்ற வகையில் வேலைப்பளு அதிகரிக்கக் கூடும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் நிலைமையை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறக் கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன் களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ஒருசில நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய பலம் இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு வயதுமூத்தவர் களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒருகாலம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 9, 12, 13.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 9-ல் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத் தில் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் மிகவும் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி நிம்மதி உண்டாகும். உடன்பிறந்த வர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்டக்கூடிய ஒரு நேரமாகும். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சனி, சூரியன் சஞ்சரிப்ப தால் வேலையாட்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் முடிந்தவரை வேலையாட்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. ஒருசிலருக்கு பயணங்கள்மூலமாக நெருக்கடிகள் ஏற்படக்கூடிய கால மென்பதால் தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள் மீது வீண்பழிச் சொற்களை சொல்லக்கூடிய காலமென்ப தால் எதிலும் பொறுமைக் காப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சில நேரங்களில் ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 14, 15.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன்- சனி சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்ப தாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமை யோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக் கூடிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிக மாக தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக எதிர்பாராதவகையில் ஏற்படக்கூடிய பராமரிப்பு செலவு காரணமாக உங்களது கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான அலைச்சல் காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். ஒருசில நேரங்களில் மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனத்தோடு இருந்தாலும் உடன் படிக்கக்கூடிய நபர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் அனுகூலங்களை பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 12, 13.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில்ரீதியாக புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்ட கூடிய ஒரு நேரமாகும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகளில் உங்களுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக் கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 14, 15.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், சனி, 8-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படவேண்டும். தேவை யில்லாத நெருக்கடிகள் காரண மாக மனநிம்மதிக் குறையும். உடல் ஆரோக்கியரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய பயணங் கள் காரணமாக வீண் செலவு கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக் கான பலனை அடைய ஒருசிலர் இடையூறாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். வேலை யாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு அதிகரிப் பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் அதிகாரி யிடம் வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு பெற்றோர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன், சம சப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்ப தால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததெல் லாம் நடந்து போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவி களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். சக ஊழியர்களால் இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்:12, 13, 14, 15.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சூரியன், 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். அசையும், அசையா சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் சக ஊழியர்களிடம் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் இருந்துவந்த தேக்கநிலை தற்போது மறைந்து படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். நீண்டநாட்களாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் தற்போது சில கருத்து வேறுபாடுகள் உண்டானாலும் வரும் வெள்ளிக்கிழமையன்று ஏற்பட உள்ள சூரியன் மாற்றத்தின்மூலமாக வார இறுதியில் குடும்பத்தில் நிலவக்கூடிய பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத் துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, சூரியன், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத் துக்கொண்டு எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பேச்சால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரத்தை காட்டாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஒருசில நேரங்களில் வேலையாட்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையில்லாத அவப்பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைய புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலமாக அனுகூலங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன், 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். உடனிருப்பவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது அதிகப்படியான வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று நினைத்தாலும் தேவையற்ற நிகழ்வுகள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரங்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.