முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அவிட்டம்- 1.
செவ்வாய்: புனர்பூசம்- 2 (வ).
புதன்: அவிட்டம்- 1.
குரு: ரோகிணி- 3.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 2.
சனி: பூரட்டாதி- 2.
ராகு: உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
11-2-2025 கும்ப புதன் பகல் 12.54 மணிக்கு.
12-2-2025 கும்ப சூரியன் இரவு 09.56 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மிதுனம்.
10-2-2025 பகல் 11.56 மணிக்கு கடகம்.
12-2-2025 இரவு 7.35 மணிக்கு சிம்மம்.
15-2-2025 அதிகாலை 5.44 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத் ததெல்லாம் நடக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கு தற்போது ஒரு முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு குறைவது மட்டும் இல்லாமல் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 15.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- ராகு சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் சின்னசின்ன பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்பாராதவகையில் தனவரவுகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய நேரமாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதன் உங்கள் ராசிக்கு 9, 10-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் உதவியால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த சில நாட்களாக இருந்துவந்த பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறக்கூடிய நேரமாகும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், வார முற்பாதியில் சூரியன், புதன் 8-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமை யோடு இருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை தூரப் பயணங் களைத் தள்ளிவைப்பது உத்தமம். குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வார முற்பாதியில் சில நெருக்கடிகள் இருந்தாலும் வியாழக்கிழமைமுதல் சூரியன் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்றுக் குறையும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பாமல் உங்களுடைய செயல்களில் சற்று கவனத் தோடு இருந்தால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை மாற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 13, 14.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகலவிதத்திலும் வளமான பலன் களைப் பெறுவீர்கள். சுக்கிரன்- ராகு சேர்க்கைப்பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக அனுகூலங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற வகையில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, முடிந்தவரை இரவு நேரப்பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால் முடிந்தவரை சில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்படுவது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப் பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகால பிரச்சினைகள் குறையும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக் கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 15.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் வார முற்பாதியில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. பெண்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறுசிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் அனுகூலத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முடிந்த வரை தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு தற்போது ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனை தரிசிப்பது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 13, 14.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, 9-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மிகச்சிறப்பான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். வருகின்ற வியாழக்கிழமைமுதல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களது பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அமைப்பும், தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தந்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 15.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், இவ்வாரத்தில் 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் ஒரு சில ஆதாயத்தை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். மாணவ- மாணவியர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிக தாராளமாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கக்கூடிய அமைப்புகள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது பணியில் நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால்தான் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பதுடன் பணி தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 15.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய நேரமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பதுடன் எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கௌரவமான இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத் தோடு இருப்பது குறிப்பாக பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதன் இவ்வாரத்தில் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச் செல்வது, முன்கோபத்தை குறைத் துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், சின்ன பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்வதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். முடிந்தவரை சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் உடல் உபாதைகள் காரணமாக எதிர்பாராதவகையில் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். வரும் நாட்களில் நற்பலன்களை அடைய ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக மனநிம்மதி குறைவு ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனத் தோடு செயல்பட வேண்டும். வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். இந்த வாரத்தில் வார முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எந்த ஒரு செய-ல் ஈடுபடுவது என்றாலும் அதனை வாரத் தொடக்கத்தில் மேற்கொள்வது சற்று சாதகமான பலனைத் தரும். குறிப்பாக வியாழக்கிழமைக்குபிறகு சூரியன் 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை சிறிது காலத்திற்கு தள்ளிவைப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வீண்பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு அலைச்சல் காரணமாக படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.