இந்த வார ராசிபலன் 8-6-2025 முதல் 14-6-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-8-6-2025-14-6-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ரோகிணி- 4.

செவ்வாய்: மகம்- 1.

புதன்: மிருகசீரிடம்- 4.

குரு: மிருகசீரிடம்- 4.

சுக்கிரன்: அஸ்வினி- 3.

சனி: உத்திரட்டாதி- 2.

ராகு: பூரட்டாதி- 3.

கேது: உத்திரம்- 1.ss

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: துலாம்

9-6-2025 காலை 8.50 மணிக்கு விருச்சிகம்

11-6-2025 இரவு 8.10 மணிக்கு தனுசு

14-6-2025 அதிகாலை 5.38 மணிக்கு மகரம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனபடுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு தற்போது வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணியில் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண்பழிச் சொற் களை சொல்லலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செல விடுவதைவிட பயனுள்ள காரியங் களுக்கு நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடனிருப் பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது குறிப்பாக உடன்பிறந்தவரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்ட மானது உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக் கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக வளமான பலன்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ரோகிணி- 4.

செவ்வாய்: மகம்- 1.

புதன்: மிருகசீரிடம்- 4.

குரு: மிருகசீரிடம்- 4.

சுக்கிரன்: அஸ்வினி- 3.

சனி: உத்திரட்டாதி- 2.

ராகு: பூரட்டாதி- 3.

கேது: உத்திரம்- 1.ss

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: துலாம்

9-6-2025 காலை 8.50 மணிக்கு விருச்சிகம்

11-6-2025 இரவு 8.10 மணிக்கு தனுசு

14-6-2025 அதிகாலை 5.38 மணிக்கு மகரம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனபடுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு தற்போது வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணியில் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண்பழிச் சொற் களை சொல்லலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செல விடுவதைவிட பயனுள்ள காரியங் களுக்கு நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடனிருப் பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது குறிப்பாக உடன்பிறந்தவரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்ட மானது உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக் கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக வளமான பலன்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய், கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர் கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது குறையும். கூட்டாளிகள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரம் ஆகும். மேலதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. பயணங்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல்; போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மனின் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமை யுடன் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் சின்ன, சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர் களுக்கு ஞாபக சக்தி சிறப்பாக இருந்து படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரங்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.

tg

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை தற்போது பெறக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறைவது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் அமையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சனி உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. உடன்பிறந்த வரிடம் பேசுகின்றபொழுது தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது உத்தமம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு சக ஊழியருடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்க முடியும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, புதன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் மிகவும் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. சனி 6-ல் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி வளமான பலன்களை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. தொழில் அபிவிருத்திக் காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலமான செய்திகளை பெறக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, ராகுகால நேரத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 7-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத் தோடு இருக்கவேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதமாகக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற் றத்தை நீங்கள் அடையவேண்டும் என்று நினைத்தாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில நல்ல மாற்றங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்கள் வீண் பேச்சைக் குறைத்துவிட்டு எடுத்த பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை மாற்றுபாதைக்கு அழைத்துச்செல்லக் கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 14.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு- புதன் சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வளமான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் இருக்கும் இடத்தில் உங்களது பலமும் வ-மையும் கூடக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது குறையும். உறவினர்கள் மூலமாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட இப்பொழுது எல்லா வற்றிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்ப தாலும் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு உங்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வார்கள் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11, 14.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, புதன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதன்காரணமாக பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுக்க முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய்- கேது சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில நேரங்களில் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்படுவது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு சின்ன, சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் நல்லவாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் சிறந்து விளங்கினாலும் சில நேரங்களில் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 13.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல்ரீதியாக ஒரு மந்தநிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் தற்போது குறைவதால் எதிலும் தைரியத்தோடு செயல்படமுடியும். பணவிஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது, எந்த ஒரு முடிவு எடுப்பது என்றாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை நீங்கள் அடையமுடியும். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது மறைவதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு தற்போது நல்லபெயர் கிடைக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe