இந்த வார ராசிபலன் 8-5-2022 முதல் 14-5-2022 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-8-5-2022-14-5-2022

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 3.

செவ்வாய்: பூரட்டாதி- 1.

புதன் : ரோகிணி- 1

குரு: உத்திரட்டாதி- 1.

சுக்கிரன் : உத்திரட்டாதி- 3.

சனி: அவிட்டம்- 3.

ராகு: கிருத்திகை- 1.

கேது: விசாகம்- 3.

கிரக மாற்றம்:

சித்திரை 27 (10-5-2022) புதன் வக்ர ஆரம்பம் (மாலை 5.17).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

9-5-2022 மாலை 5.07 மணிக்கு சிம்மம்.

12-5-2022 அதிகாலை 1.32 மணிக்கு கன்னி.

14-5-2022 காலை 6.12 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால்தான் இடர்களை எதிர்கொண்டு வளமான பலன்களைப் பெறமுடியும். ராசிக்கு 12-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக தேக்கங்கள் ஏற்படும் என்றாலும், ராசியாதிபதி செவ்வாய், சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் எல்லாம் குறையும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதன்மூலம் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உங்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும், உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப் பாகக் கையாண்டு வளர்ச்சியை அடைவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் இலக்கை அடையும் யோக முண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வேலைக் குச் செல்பவர்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையோடு நடந்துகொண்டால் நல்ல வாய்ப் பினை அடையமுடியும். இவ் வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய வழிபாடு, அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ff

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலும் கூடக்கூடிய வார மாக இவ்வாரம் இருக்கும். குரு லாப ஸ்தானத்தில் அமையப் பெற்று 5, 7 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே நீண்டநாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொரு ளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறை யும். கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப் பீர்கள். சிறப்பான ஆரோக் கியத்தால் கடந்தகால மருத்து வச் செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல் படும் யோகமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள், மறைமுகப் போட்டிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோக முண்டு. வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் செய்து முடிக்க முடியாத கடினமான பணியை நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். அஷ்டலட்சுமியை வழிபடவும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராகு லாப ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கை பெற்று சஞ்சரிப

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 3.

செவ்வாய்: பூரட்டாதி- 1.

புதன் : ரோகிணி- 1

குரு: உத்திரட்டாதி- 1.

சுக்கிரன் : உத்திரட்டாதி- 3.

சனி: அவிட்டம்- 3.

ராகு: கிருத்திகை- 1.

கேது: விசாகம்- 3.

கிரக மாற்றம்:

சித்திரை 27 (10-5-2022) புதன் வக்ர ஆரம்பம் (மாலை 5.17).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

9-5-2022 மாலை 5.07 மணிக்கு சிம்மம்.

12-5-2022 அதிகாலை 1.32 மணிக்கு கன்னி.

14-5-2022 காலை 6.12 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால்தான் இடர்களை எதிர்கொண்டு வளமான பலன்களைப் பெறமுடியும். ராசிக்கு 12-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக தேக்கங்கள் ஏற்படும் என்றாலும், ராசியாதிபதி செவ்வாய், சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் எல்லாம் குறையும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதன்மூலம் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உங்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும், உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப் பாகக் கையாண்டு வளர்ச்சியை அடைவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் இலக்கை அடையும் யோக முண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வேலைக் குச் செல்பவர்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையோடு நடந்துகொண்டால் நல்ல வாய்ப் பினை அடையமுடியும். இவ் வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய வழிபாடு, அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ff

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலும் கூடக்கூடிய வார மாக இவ்வாரம் இருக்கும். குரு லாப ஸ்தானத்தில் அமையப் பெற்று 5, 7 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே நீண்டநாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொரு ளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறை யும். கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப் பீர்கள். சிறப்பான ஆரோக் கியத்தால் கடந்தகால மருத்து வச் செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல் படும் யோகமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள், மறைமுகப் போட்டிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோக முண்டு. வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் செய்து முடிக்க முடியாத கடினமான பணியை நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். அஷ்டலட்சுமியை வழிபடவும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராகு லாப ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால், எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு சில ஆதாயங்களை அடைவீர் கள். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். சனி, செவ்வாய் 9-ல் இருப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த வருவாய் தக்க நேரத்தில் வருமென்றாலும், திடீர் செலவுகள் காரணமாக சேமிப்புகள் குறையும். வீடு பழுதுபார்ப் பதற்காக சுபச்செலவுகள் செய்யும் சூழ்நிலை உண்டா கும். தொழிலில் நல்ல வாய்ப்பு கள் கிடைக்குமென்றா லும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடும் பொழுது சற்று பொறுமை யோடு செயல்படுவது நல்லது. தகுதிவாய்ந்த வேலை யாட்கள் தொழிலுக்குக் கிடைப்பார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப் பாக இருப்பதால் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். அதிக வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். என்றாலும் அதற்கான பொருளா தார ஆதாயத்தை அடையும் வாய்ப்புண்டு. சில நேரங்களில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சிகளில் சிறப் பான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தட்சிணாமூர்த்தி, நரசிம்மரை தரிசிப்பது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

சூரியன் ராசிக்கு 10-ல் ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால், உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குரு, சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருக்கும். மற்றவர் களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் பலம் ஏற்படும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். உற்றார்- உறவினரிடம் இருந்த கருத்து வேற்றுமை கள் மறைந்து ஒற்றுமை யான நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள் வது, வெளியூர்ப் பயணங் கள் மேற்கொள்ளும் பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபங்களை ஈட்டமுடியும். நீண்டநாட்களாக எதிர் பார்த்த தொழில் வளர்ச் சிக்கான பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் பதவி உயர்வடையும் வாய்ப்பிருக்கிறது. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வளமான பலன்களை அடையலாம். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் முழுமையான அனுகூலப் பலனை அடையமுடியும். சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல் படவேண்டிய நேரமாகும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவி யிடையே வீண்வாக்குவாதங்கள், உற்றார்- உறவினர்கள்மூலமாக நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். குரு, சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் வர வுக்குமீறிய செலவுகள் அதிகரித்து மன அமைதி குறையும். ராசிக்கு 3-ல் கேது, 10-ல் புதன் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் அதனை உங்களின் தனித்திறமை யால் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். வெளி நபர்கள்மூலமாக உங்க ளுக்கு உதவி கிடைத்து கஷ்டங்கள் சற்று குறையும். உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தருவது- குறிப்பாக மனைவி, பிள்ளையின் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்து வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ளவும். சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் பணியில் மட்டும் பொறுமை யோடு இருந்தால் நிலைமையை சமாளிக்க முடியும். செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக் கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமை விளக்கேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி யிடையே அன்யோன்யம் கூடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருந்து கடந்த காலங்களில் வாங்கிய கடன் களைத் தற்போது பைசல் செய்யமுடியும். சனி அதிசாரமாக 6-ல் சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரரீதியாக உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல லாபங்களை வரும் நாட்களில் அடையும் வாய்ப்புண்டாகும். வேலையாட்களால் இருந்த நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். அரசு மூலம் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைக்கும். வசதிபடைத்த கூட்டாளிகள் உங்கள் தொழிலில் இணைவதால் வளமான பலன்களை அடையலாம். உத்தியோகஸ்தர் களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்தால் சிறப்பான பலனை அடையலாம். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட பகைமையை மறந்து தற்போது நட்பாகப் பழகுவார்கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் முழுமையான வெற்றியை அடையமுடியும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, சூரிய நமஸ்காரம் செய்வது, பிரத்தியங்கரா தேவியை வழிபடுவது உத்தமம்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், குருவுடன் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, நெருங்கியவர்களால் மன நிம்மதி குறையும் நிலை நிலவும். நீண்டநாட்களாக 4-ல் சஞ்சரித்த சனி தற்போது திருக்கணிதப்படி 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய காலமென்ப தால் சூழ்நிலைக்குத் தக்கவாறு நிதானத் தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தேவையற்ற தேக்கங்கள் இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது, தொழில் விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமலிருப்பது நல்லது. கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் அனைத்து செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல் பட்டால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்ப வர்கள் ஆதரவாக இருப்பதால் எதையும் எதிர் கொள்ள முடியும். தற்போது உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதக மாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளா தார உதவிகள் கிடைத்து உங்களது நெருக்கடி கள் குறையும். மகாவிஷ்ணுவை வழிபடுவது, மாணவர்களின் படிப்புக்காகப் பொருளுதவி செய்வது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 10-ஆமதிபதி சூரியன் 6-ல் ராகு சேர்க்கைபெற்று வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப் பான நிலை, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த சிறுசிறு உடல் பாதிப்புகள் கூட முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். ராசியாதிபதி செவ்வாய், சனியுடன் இணைந்து 4-ல் சஞ்சரிப்ப தால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற் கேற்ற ஆதாயங்கள் கிடைக்கும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான நிலையை அடைவீர்கள். வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். தொழில் வளர்ச்சிக் காக பூமி, மனை வாங்கும் யோகம், புதிய நவீன கருவிகள் வாங்கும் வாய்ப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்த கடுமையான நெருக்கடிகள் முழுமையாக விலகி எதிலும் நிம்மதியுடன் செயலாற்ற முடியும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாக விலகும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மேலும் வளமான பலன்களை அடைவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபமேற்றுவது உத்தமம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஒரு ராசியில் நீண்டநாட்கள் தங்கும் கிரகமான சனிபகவான் தற்போது திருக்கணிதப்படி 3-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். செவ்வாயும் 3-ல் பலமாக இருப்பதால் உங்களது முயற்சிகள் வெற்றி தரும். பொருளாதாரரீதியாக இருந்த நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம், குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும் சூழல் ஏற்படும். நிழல் கிரகமான கேது லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் மேலும் உற்சாகத்தோடு நீங்கள் தொழில், வியாபாரத்தில் செயல்பட்டு கௌரவமான நிலையினை எட்டும் வாய்ப்புண்டு. பொருளாதார நெருக்கடிகள் விலகி மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு உயர்வான நிலையை எட்டும் வாய்ப்பேற்படும். தொழிலை மேம்படுத்தும் யோகம், தொழிலுக்காக முதலீடு செய்யும் வாய்ப்பு, புதிய ஆர்டர்களை அடையும் வாய்ப்பு வரும் நாட்களில் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீதிருந்த அவப் பெயர்கள் விலகி உயர்வான நிலையினை எட்டமுடியும். அதிகாரிகளிடமிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகமான நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக வரும் நாட்களில் சிறப்பான நிலையினை எட்டமுடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடிகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பதும், முடிந்தவரை கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வதும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. பண விஷயமாக மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். சூரியன், ராகு சேர்க்கைபெற்று 4-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், அதிகப்படியான வேலைப்பளு, உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனி, செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக மிகவும் நிதானமாக இருப்பதும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதும் நல்லது. வேலையாட்களால் நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். எதிலும் மனவுறுதி யோடு செயல்படக்கூடிய நீங்கள் தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருப்பதும், இருக்கும் வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திக்கொள்வதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களிடம் பேச்சை குறைத்துக்கொண்டு முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களது நெருக்கடிகள் குறையும். பார்வதிதேவியை மனதார நினைத்துக்கொள்வதும், மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதும் கஷ்டத்தைக் குறைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் வாழ்வில் நல்லதோர் முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கிருந்த எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி சிறப்பான வளர்ச்சியினை அடையமுடியும். கடன் பிரச்சினைகள் குறையும். ராசிக்கு 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு ஏற்படும். சனி, செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்பு டன் செயல்பட்டால் வரும் நாட்களில் படிப்படியான வளர்ச்சியைப் பெறமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகள்மூலம் இருந்த கெடுபிடிகள் குறைந்து தொழிலை நிம்மதியுடன் நடத்தமுடியும். வேலைக்குச்செல்பவர்களுக்கு சக ஊழியர்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி உங்கள் பணியில் திறம்பட செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினை களுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைவீர்கள். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமையன்று முருகனுக்கு விரதமிருப்பது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சில நெருக்கடிகள் இருந்தாலும் எதிர் பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, உற்றார்- உறவினர்களின் ஆதரவால் ஒருசில ஆதாயங்களை அடையும் வாய்ப்புண்டு. ராசிக்கு 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தோடு இருப்பது, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொள்வது நல்லது. சனியும், செவ்வாயும் 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும், தூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே தற்போது உள்ள நெருக்கடியான நிலையினை எதிர்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தற்போது இருக்கும் நிலையே சற்று சாதகமான நிலையாகும். மற்றவர்கள் சொல்லும் ஆசை வார்த்தை யைக் கேட்டு இருப்பதை இழந்துவிட வேண்டாம். வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத சில அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமை மட்டும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.

bala130522
இதையும் படியுங்கள்
Subscribe