முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: கேட்டை- 2.
சந்திரன்: சதயம்- 3.
செவ்வாய்: பூசம்- 3 (வ).
புதன்: கேட்டை- 1 (வ).
குரு: ரோகிணி- 4 (வ).
சுக்கிரன்: உத்திராடம்- 4.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கும்பம்
9-12-2024 காலை 9.14 மணிக்கு மீனம்.
11-12-2024 பகல் 11.47 மணிக்கு மேஷம்.
13-12-2024 பகல் 1.19 மணிக்கு ரிஷபம்.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்:
இல்லை
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 4-ல் வக்ரகதியில் இருப்பதாலும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் மேலதிகாரியிடம் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள் என்றாலும் உங்களது ஆரோக்கியமானது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். அசையும், அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 8, 11, 12.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று மற்றவர்கள் ஆச்சரியப் படும் அளவிற்கு பரிசுகளை வெல்லக்கூடிய ஒரு நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 14.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் தற்போது 12-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய பலம் உண்டாகும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக செய்துமுடித்து இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியருடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். மாணவ- மாணவியர் கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 5-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது தற்போதைக்கு உத்தமம். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். முடிந்தவரை வேலை ஆட்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எந்தவித நெருக்கடியையும் சமாளித்து எடுத்தப் பணியை குறித்து நேரத்தில் செய்துமுடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவர்கள் பேச்சைக்கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் 4-லும், 7-ல் சனி, 8-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்கு கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். குருபகவான் வக்ர கதியில் இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத ஒரு அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒருசில விஷயங்களில் கூட்டாளி களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது தற்போது அதிகப்படியான நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் எதையும் சிறப்பாக கையாண்டு எடுத்த பணியை முடிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் சிலர் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக படித்தாலும் எதிர்பாராதவகையில் ஏற்படக்கூடிய ஞாபக மறதி காரணமாக நல்ல மதிப்பெண் எடுக்க தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 13, 14.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கலாம். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலங்களும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பொழுதுபோக்கு விஷயங்களிலும் உங்கள் திறனை வெளிப்படுத்தி மற்றவரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை பெறுவீர்கள். தொழில்ரீதியாக இருந்த வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைத்து அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடிய நேரமாகும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உடனிருக்கக்கூடிய நண்பர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண வரவில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு வண்டி, வாகனங் கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு வீண் இடையூறுகளை உண்டாக்குவார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாமாகும். மாணவ- மாணவியர்கள் ஒருசில ஆரோக்கிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த தேவையற்ற இடைஞ்சல்கள் ஏற்படும். பெற்றோர் சொல்படி நடந்து கொண்டால் சிக்கல் களை சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் சுக்கிரன் 3-ல் சனி சஞ்சரிப்பதாலும் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவி, பிள்ளை கள் விரும்பிய பொருட்களை வாங்கி தரக்கூடிய யோக மானது உங்களுக்கு இருக்கி றது. உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்கள் உடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய வேலைப்பளு சற்றுக் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். உத்தியோகத் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 13, 14.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவி களும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்களது தேக ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் அதற் கான சிகிச்சைகளை உடனே மேற்கொள்வது தற்போதைக்கு நல்லது. சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நவீன கரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த உயர்வுகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் உடன் வேலை செய்யக்கூடிய நபர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுவதைவிட கல்வி சார்ந்த செயல்களுக்கு நேரத்தை செலவிடுவது தற்போதைக்கு நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேச பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏற்றங்களை பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப் பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, நெருங்கியவரிடம் பேசுகின்றபோது பொறுமை யைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். பனி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் அதன் காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழலும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். இந்த வாரத்தில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 8, 11, 12.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு நிலவிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படக்கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த தேக்கநிலை மாறி உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்க வழியில் உங்களுக்கு ஒருநல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறன்பட செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். புதிய வேலை வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பு களை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவர் களிடம் பேசுகின்றபொழுது கவனமாக இருக்க வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 13, 14.