இந்த வார ராசிபலன் 7-5-2023 முதல் 13-5-2023 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-7-5-2023-13-5-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 3.

செவ்வாய்: புனர்பூசம்- 3.

புதன்: பரணி- 1.

குரு: அஸ்வினி- 2.dd

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

சித்திரை 27 (10-5-2023) கடக செவ்வாய்

(பகல் 1.49).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

8-5-2023 இரவு 7.10 மணிக்கு தனுசு.

10-5-2023 இரவு 9.50 மணிக்கு மகரம்.

12-5-2023 இரவு 12.19 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் தேவைக்கேற்றவாறு வரவுகள் வந்தடைந்து மன மகிழ்ச்சி உண்டாகும். குரு பார்வை 5, 7, 9-ஆம் வீடு களுக்கு உள்ளதால் எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடக்கூடிய யோகமுண்டு. ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப் படாமல் ஒவ்வொரு செய-லும் கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட் களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்வீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். புதிய யுக்திகளை பயன்படுத்தி பல்வேறு வளர்ச்சிகளை வரும் நாட்களில் அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும். உங்களுக்கு இருந்த தேவையற்ற நெருக்கடிகள் விலகி மன நிம்மதி உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமான நாட்களாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களை நீங்கள் பெறுவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். எதிலும் நிதானத் தோடு இருப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு தற்போது 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 10-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்த பிரச்சினையையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், ராகு சேர்க்கை பெற்று விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் மிகவும் நெருங்கிய வர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடி களை உண்டாக்குவார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் ஒருசிலரால் கடைசி நேரத்தில் தடைப்படும். வேலையாட்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரியிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். முக்கிய விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் முழுமையான வெற்றி கிடைக்கும். செவ்வாய், புதன் கிழமை களில் தேவையற்ற நெருக்கடிகள், எடுத்த காரியங்கள் பாதியில் தடைப்படக்கூடிய நிலை ஏற்படும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 3.

செவ்வாய்: புனர்பூசம்- 3.

புதன்: பரணி- 1.

குரு: அஸ்வினி- 2.dd

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

சித்திரை 27 (10-5-2023) கடக செவ்வாய்

(பகல் 1.49).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

8-5-2023 இரவு 7.10 மணிக்கு தனுசு.

10-5-2023 இரவு 9.50 மணிக்கு மகரம்.

12-5-2023 இரவு 12.19 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் தேவைக்கேற்றவாறு வரவுகள் வந்தடைந்து மன மகிழ்ச்சி உண்டாகும். குரு பார்வை 5, 7, 9-ஆம் வீடு களுக்கு உள்ளதால் எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடக்கூடிய யோகமுண்டு. ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப் படாமல் ஒவ்வொரு செய-லும் கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட் களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்வீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். புதிய யுக்திகளை பயன்படுத்தி பல்வேறு வளர்ச்சிகளை வரும் நாட்களில் அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும். உங்களுக்கு இருந்த தேவையற்ற நெருக்கடிகள் விலகி மன நிம்மதி உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமான நாட்களாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களை நீங்கள் பெறுவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். எதிலும் நிதானத் தோடு இருப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு தற்போது 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 10-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்த பிரச்சினையையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், ராகு சேர்க்கை பெற்று விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் மிகவும் நெருங்கிய வர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடி களை உண்டாக்குவார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் ஒருசிலரால் கடைசி நேரத்தில் தடைப்படும். வேலையாட்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரியிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். முக்கிய விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் முழுமையான வெற்றி கிடைக்கும். செவ்வாய், புதன் கிழமை களில் தேவையற்ற நெருக்கடிகள், எடுத்த காரியங்கள் பாதியில் தடைப்படக்கூடிய நிலை ஏற்படும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சூரியன், குரு, ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப் பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். எதிர் பாராத தனச் சேர்க்கை ஏற்படுவது மட்டுமில் லாமல் உங்களது கனவு கள் நிறைவேறும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். நண்பர்கள்மூலமாக ஆதாயங்களை பெறு வீர்கள். சனிபகவான் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக அனு கூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூல மான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான லாபங்களை பெறமுடியும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். அரசுவழியில் இருந்து வந்து சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பது, அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திராஷ் டமம் இருப்பதால் புதிய முயற்சி களைத் தவிர்ப்பதும், பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சூரியன், புதன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும், நெருக்கடியான நேரத்தில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடி, தேவையற்ற அலைச்சல், எதிலும் நிம்மதி இல்லாத நிலை நிலவும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு தக்க நேரத்தில் உங்களுக்கு கிடைப்பதால் எந்தவித நெருக்கடி யும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களைத் தள்ளிவைப்பது மிக மிக நல்லது. உடல்ரீதியாக சிறு பாதிப்பு இருந்தாலும் அதற்கான மருத்துவ சிகிச்சை களை உடனடியாக மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலை யாட்களிடம் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்து வது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையோடு செயல்படு வது உத்தமம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதக மற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூல பலன் களை அடையமுடியும். சனிக் கிழமையன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன்- குரு, புதன் சேர்க்கைபெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது வாழ்க்கை தரமானது மிகச் சிறப்பாக இருக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் அனு கூலமான பலன்களை பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் விலகி மன நிம்மதி உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கடந்தகால சட்ட சிக்கல்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பெண்கள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர்மூலமாக ஒரு ஆதாயமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய யோகமும், உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களால் செய்யமுடியாத செயல்களைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப் பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வெளியூர் வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சி களைத் தற்போது மேற் கொண்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட் கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய நாட்களாக இருக்கும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தான மான 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த் தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், இந்த வாரத்தில் செவ்வாய் 10, 11-ஆகிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், இருக்கும் இடத்தில் உங்களுடைய பெயர், புகழ் மேலோங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். உடன்பிறந்தவகையில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்டநாட்களாக உங்களிடம் கருத்து வேறுபாட்டில் இருந்த உறவினர்கள் கூட தற்போது உங்களிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு, சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உண்பது, தூரப் பயணங்களையும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வதையும் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். நீங்கள் வெகுளித்தனமாக செயல்பட்டாலும் பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் சிறு சிறு இடப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் கவனமாக இருந்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் எதிர் பாராத அதிர்ஷ்டங்களை பெற்று உங்களுக் குள்ள பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் வலுவாக சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். தடைபட்டுவந்த மங்கள கரமான சுப காரியங்கள் வரும் நாட்களில் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளை கள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப் பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுகொடுத்து செல்வது நல்லது. செவ்வாய் வரும் 10-ஆம் தேதிமுதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். தொழில், வியாபாரத் தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை பெறமுடியும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய முயற்சிகளுக்கு வெளியிடங்களில் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய அமைப்பும், உங்கள் திறமைகளை வெளிக் காட்ட நல்ல சந்தர்ப்பங்களும் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகி உங்களுடைய நீண்டநாள் எண்ணங்கள் எதிர்பாராத வகையில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும்.

tt

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங் கள் கிடைத்து அனைத்தையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமை ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் நெருங்கிய வர்களை அனுசரித்து செல்வது, பண விஷயத் தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல் களை சிறிது காலம் தள்ளிவைப்பது உத்தமம். தற்போது 8-ல் சஞ்சரிக்க கூடிய செவ்வாய் வரும் 10-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு உள்ள தேவையற்ற நெருக்கடிகள் சற்று குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது, கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களை அனுசரித்து செல்வது தற்சமயத்துக்கு உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். மற்றவர்கள் பணியை நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். பெண்கள் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதில் சிறப்பான அனுகூலங்களை அடையமுடியும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு- புதன் சேர்க்கைப்பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது எளிதில் கைகூடும். சனி உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் திறமையோடு செயல்பட்டு பல்வேறு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீண்டநாட்களாக உங்களால் தீர்க்க முடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் நல்லதீர்வு கிடைக்கும். நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக் கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் தற்போது கிடைக்கப் பெற்று உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, சுக ஸ்தானமான 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, உறவினர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். வயது மூத்தவர் களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். சட்டரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது நல்லது. வேலையாட்கள் உங்களுக்கு வீண் நெருக்கடி களை ஏற்படுத்துவார்கள். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது சிறப்பு. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது தற்போதைக்கு நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக மனநிம்மதி குறைவு ஏற்படும். அதிகாரியிடம் தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடப்பதாலும், குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதாலும் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாதக்கோளான சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையையும் உங்கள் மன தைரியத்தால் எதிர்கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு வரும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் உங்களது அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகப்படியாக இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் திறமை யாக கையாளுவீர்கள். போட்ட முதலை எப்பாடுபட்டாவது எடுத்துவிடுவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் சில இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அவர்களுடைய பணிகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். வெளியூர் வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் திடீர் அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டால் பெருமளவு பிரச்சினைகளை சமாளித்து அனுகூலமான பலன்களை அடையமுடியும். தன ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்ப தால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் முழுமையாக மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 10-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கும் அலைச்சல்கள் சற்று குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நெருக்கடியான நிலை விலகி அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். அனைத்து விஷயத்திலும் சாமர்த்தியமாக முடிவுகளை எடுத்து தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் சிறு சிறு உடல் பிரச்சினைகள் மனக்கவலையை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும்.

bala120523
இதையும் படியுங்கள்
Subscribe