முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 3.

செவ்வாய்: மூலம்- 3.

Advertisment

புதன்: கேட்டை- 4.

குரு: அஸ்வினி- 4.

சுக்கிரன்: அனுஷம்- 4.

ss

சனி: சதயம்- 1.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

கிரக மாற்றம்:

(7-1-2024) தனுசு புதன்

(இரவு 9.16).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்.

7-1-2024 மாலை 4.01 மணிக்கு விருச்சிகம்.

9-1-2024 இரவு 9.11 மணிக்கு தனுசு.

11-1-2024 இரவு 11.05 மணிக்கு மகரம்.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

8-1-2024 மார்கழி 23-ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் தனுசு லக்னம். தேய்பிறை

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய், பஞ்சமாதிபதி சூரியன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த புதன், இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து எல்லாவகையிலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் புதுதெம்புடன் செயல்படுவீர்கள். தேவையற்ற மருத்துவச் செலவுகள் குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள்கூட நட்புடன் பழகுவார்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். எடுத்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வேலைக்கு செல்பவர் களுக்கு கௌரவமான வாய்ப்புகள் தேடிவரும். மாணவ- மாணவிகள் கல்வியில் சிறப் பாக செயல்படக்கூடிய வாய்ப்பு கள் உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். வெளியூர் மூலமாக ஆதாயம் தரக்கூடிய பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு மாலை, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சுலபமாக முடியக்கூடிய காரியங்கள் தடைப்படக்கூடிய ஒருநிலை உண்டாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் வெளியிலி-ருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைக்கப்பெற்று உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் நீங்கள் நினைத்தது நிறைவேறும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதியான சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்வை செய்வதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படு வீர்கள். பெண்களுடைய ஆதரவானது உங்களுக்கு சிறப் பாக இருக்கும். இந்த வாரத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் பக்குவத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஒருசிலருக்கு தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்காத காரணத்தினால் எதிலும் நீங்களே முன்நின்று செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மட்டும் மிகவும் கவனத்தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க நேரத்தில் வராத காரணத்தினால் மன நிம்மதி குறைவு ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெற்றோரி டம் வாக்குவாதம் செய்யாமல் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய இனிய செய்திகள் இல்லம் தேடிவரும். புதன், வியாழக்கிழமைகளில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது, முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதியான புதன் இனி சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கக்கூடிய யோகம், தாராள தனவரவுகள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப் படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாமிருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக் கக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி தரக்கூடிய நாட்களாக இருக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அனுகூலப்பலன் கிடைக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் தேவையற்ற மனகுழப்பங்கள், உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்யக்கூடிய நிலை உண்டாகலாம் என்பதால் புதியமுயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது நன்மையைத் தரும்

ff

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். மாதக் கோளான சூரியன், செவ்வாயுடன் இணைந்து ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் நல்லவாய்ப்புகள் கிடைத்து உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு கடினமான பணிகளைக்கூட சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். அஷ்டமச்சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் இடத்தில் குறிப்பாக தாய்- தந்தையிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மிக முக்கியமான பயணங்களை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். நீங்கள் இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிதருவது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும் மிகச்சிறப்பான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திங்கட்கிழமைமுதல் புதன் 5-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் உறவினர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை நம்பாமல் எதிலும் தனித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். சில முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு ஒரு மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைக்கு ஒருநல்ல தீர்வு கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, காலபைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் திங்கட்கிழமைமுதல் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு 6-ல் பலமாக சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலி-மையும் கூடி எதிரிகளின் பலம் குறையக்கூடிய நேரமாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சில தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். பணி நிமித்தமாக அடிக்கடி தேவையற்ற பயணங்கள் செல்ல நேரிடும். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நண்பர்களிடம் தேவையற்ற பேச்சைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமம் அபிஷேகம் செய்வது கெடுதியைக் குறைக்கும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சகலவிதத்திலும் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலங்களை அடையமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருக்கும். பெண்கள்வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் குறையும். ஒருசிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தரமுடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்கள் பாராட்டை பெறுவார்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதுமூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதியான செவ்வாய், சூரியன் சேர்க்கைப்பெற்று 2&ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத் தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்காது. ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடிய நிலை உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத ஒருசில உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்படவேண்டிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யாமல் மிகவும் நிதானத்தோடு செயல்படுவது, பிறர் கூறும் ஆசை வார்த்தைகள் நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு கவனக் குறைவு ஏற்படக்கூடிய நேரமென்பதால் தேவையற்ற செயல்களை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அமைப்பும், உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறையக்கூடிய ஒரு சூழலும் உண்டாகும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, பிரித்தியங்கரா தேவிக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி 5-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த கடந்தகால கஷ்டங்கள் எல்லாம் முழுமையாக விலகி பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும், நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலமும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறலாம். உடன்பிறந்தவரிடம் பேச்சில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் தக்கநேரத்தில் கிடைக்கப்பெறுவதால் தொழில் விருத்திக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாட்களாக வேலை வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய இடத்தி-ருந்து அழைப்புவரும். மாணவ- மாணவியர்கள் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட்டால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய ஒரு இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெற்று எதிர்பாராத லாபங்களை அடைவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு செய்வது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய தைரியம் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கையாக செயல்பட்டால் மட்டுமே வீண் பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும். போட்ட முதலை எடுக்க எதிர்நீச்சல்போட வேண்டிய நேரமாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில் சம்பந்தமான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். சக ஊழியர்களிடம் பேச்சைக் குறைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற சகவாசத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக இருப்பதால் எதிர்பாராதவகையில் வெளியி-லிருந்து உங்களுக்கு வரவேண்டிய தொகை கிடைக்கப்பெற்று உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சூரிய நமஸ்காரம் செய்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் உங்கள் கெடுதிகள் குறையும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் சற்று குறைந்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் 10-லும் புதன் திங்கட்கிழமை முதல் 11-லும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறமுடியும். பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவதன்மூலம் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். பெரிய முதலீடுகொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் உத்தமம். பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு வீண் பயணங்களும் அதன்மூலம் எதிர்பாராதச் செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உடல்சோர்வு இருந்தாலும் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பது, நவீனப் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு வலுவாக சஞ்சரிப்பதும், ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மனைவி, பிள்ளைகள் விரும்பி கேட்டதை வரும் நாட்களில் வாங்கித் தரக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அரசு ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிரச்சினை தந்த அதிகாரிகள் தற்போது இடம் மாறி செல்வதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவையற்ற அலைச்சல், மன நிம்மதி குறைவு உண்டாகும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்மையை தரும்.