இந்த வார ராசிபலன் 6-4-2025 முதல் 12-4-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-6-4-2025-12-4-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ரேவதி- 2.

செவ்வாய்: புனர்பூசம்- 4.

புதன்: பூரட்டாதி- 4 (வ).

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: பூரட்டாதி- 4 (வ).

சனி : பூரட்டாதி- 4.

ராகு: பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

கிரக மாற்றம்:

7-4-2025 புதன் வக்ர முடிவு மாலை 4.36 மணிக்கு.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கடகம்.

8-4-2025 காலை 7.54 மணிக்கு சிம்மம்.

10-4-2025 இரவு 7.04 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி, ராகு சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப் பாக இருக்காது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்களுடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உங்களுக்கு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

ss

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சனி, ராகு, சூரியன், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகரீதியாக பார்க் கின்றபொழுது உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் குரு ச

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ரேவதி- 2.

செவ்வாய்: புனர்பூசம்- 4.

புதன்: பூரட்டாதி- 4 (வ).

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: பூரட்டாதி- 4 (வ).

சனி : பூரட்டாதி- 4.

ராகு: பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

கிரக மாற்றம்:

7-4-2025 புதன் வக்ர முடிவு மாலை 4.36 மணிக்கு.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கடகம்.

8-4-2025 காலை 7.54 மணிக்கு சிம்மம்.

10-4-2025 இரவு 7.04 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி, ராகு சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப் பாக இருக்காது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்களுடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உங்களுக்கு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

ss

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சனி, ராகு, சூரியன், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகரீதியாக பார்க் கின்றபொழுது உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் ஆதாயத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண்பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். உடன்பிறந்த வர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்கு நேரத்தை செலவிடவேண்டிய நேரம் ஆகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தீபமேற்றுவது அனுகூலங்களைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, பாக்கிய ஸ்தானத்தில் சனி, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக் கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுடைய நீண்டநாளைய கனவுகள் எல்லாம் தற்போது ஒன்று ஒன்றாக நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் மேம்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 11, 12.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன்- சனி, ராகு சேர்க்கைப்பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்கவேண்டிய நேரமாகும். மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திலும் ஒரு சிலருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அன்றாட பணிகளை சரியாக கையாள்வதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரித்து வருவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களால் பணியில் சுறுசுறுப்பாக செயல்படமுடியாது. தேவையில்லாத வகையில் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட நினைத் தாலும் ஞாபகமறதி காரணமாக தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய் 11-ல் இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரக்கூடிய ஒரு வாய்ப்புகளும் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்களை அடையக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், சனி, ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். இந்த வாரத்தில் நற்பலன்களை அடைய துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 11, 12.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், சனி, ராகு சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் வரும் நாட்களில் விலகும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக காப்பாற்றமுடியும். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை பெற்று உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமானது வரும் நாட்களில் உண்டு. அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் தற்போது விலகி எதையும் சுலபமாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9, 10.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன், சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல்ரீதியான பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது மறைந்து மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அரசாங்க உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை வரும் நாட்களில் பெறமுடியும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11, 12.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் சனி, சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். ஒருசிலருக்கு உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைக்கவேண்டும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்க மான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் அவர்களை சரியான முறையில் கையாள்வது மிகவும் நல்லது. மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலைப்பளு அதிகரிப்பதால் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு உடனிருப்ப வர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத் தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்ட லட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். 5-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் குறையும். கடந்த காலங்களில் குடும்பத்தில் இருந்துவந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குறிப்பாக கடந்தகால உடல் உபாதைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை சந்தையில் கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். உத்தியோகரீதியாக உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக் கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, எந்த ஒரு செய-லும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்ட மானது உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் உடனிருப்பவர்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, ராகு, சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் உண்டாகும். உங்களது முன்கோபத்தால் நல்லவாய்ப்பை இழப்பீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படவேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு தேவையற்ற பயணமும் அதன்மூலம் வீண்செலவுகளும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உங்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கவனச்சிதறல் ஏற்படலாம் என்பதால் படிப்புக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11, 12.

bala110425
இதையும் படியுங்கள்
Subscribe