எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 1.

செவ்வாய்: உத்திராடம்- 3.

Advertisment

புதன் : அவிட்டம்- 2.

குரு: பூரட்டாதி- 1.

சுக்கிரன் : உத்திராடம்- 3.

சனி: அவிட்டம்- 1.

ராகு: கிருத்திகை- 2.

கேது: விசாகம்- 4.

rr

கிரக மாற்றம்:

மாசி 22 (6-3-2022) கும்ப புதன் (பகல் 11.22).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

8-3-2022 பகல் 12.30 மணிக்கு ரிஷபம்.

11-3-2022 அதிகாலை 1.03 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் உச்சம்பெற்று சுக்கிரனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஆதாயங்களை அடை வீர்கள். எதிர்பார்த்த கௌரவப் பதவிகளை எட்டமுடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருப் பது மட்டுமல்லாமல் கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். லாப ஸ்தானத்தில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான பண வரவுகள் கிடைத்து சேமிப்புகள் அதிகரிக் கும். கடந்தகால கடன்களை பைசல் செய்யும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி யிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேலோங்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பேச்சில் பொறுமையுடன் இருந்தால் அனுகூலங்கள் உண்டாகும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாமர்த்திய மாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடை வீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் அமைவார்கள். வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். கொடுக் கல்- வாங்கல்ரீதியாக இருந்த சிக்கல்கள் மறையும். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன் களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலம் மிகுந்த பலன் கள் கிடைக்கும். செவ்வாய், வெள்ளிக் கிழமை களில் துர்க்கை, மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளா தாரரீதியாக தேக்கநிலை இருந்தாலும் தக்கநேரத்தில் பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் 6-ஆம் தேதிமுதல் சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஏற்றம்பெறும் யோகமுண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத் துடன் செயல்பட்டால் லாபங்களை அடைய லாம். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. கூட்டாளி களின் உதவியால் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகள் சற்று விலகி ஏற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக வரும் நாட்களில் சில முதலீடு களைச் செய்ய நேரிடும். வேலைக்குச் செல்பவர் களுக்கு தற்போது வேலைப்பளு சற்று கூடுத லாக இருந்தாலும் விரைவில் நல்ல முன்னேற் றங்களை அடைவீர்கள். கிருத்திகையன்று விரதமிருந்து முருக வழிபாட்டை மேற் கொண் டால் நற்பலன்கள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல் பட்டு வளமான பலன்களைப் பெறுவீர் கள். பணவரவுகள் தாரளமாக இருந்து சகல விதத்திலும் முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை 8-ல் சஞ்சரித்த ராசியாதிபதி புதன் 6-ஆம் தேதிமுதல் 9-ல் சூரியன் சேர்க் கைப் பெற்று சஞ்சரிப்பதால் தடங்கல்கள் விலகி நல்லவை நடக்கும். திருமணம் சார்ந்த சுபமுயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, வாகனங்களில் பொறுமையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்த வர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சைக் குறைத்துக் கொள்வது உத்தமம். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத் தில் சரளமான நிலையிருந்து, பொருளா தாரநிலை சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் சில நேரங்களில் இடையூறுகளை ஏற்படுத்து வார்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் சற்று முனைப்புடன் செயல்பட்டால்தான் தொழிலை சிறப்பாக நடத்தமுடியும். அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். உத்தி யோகத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் வேலையில் நிம்மதியுடன் பணிபுரியலாம். முருகனை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எதிலும் கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சைக் குறைப்பது சிறப்பு. 2-ஆமதிபதி சூரியன், குரு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். நியாயப்படி உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்ற தடங்கல்கள் ஏற்படும். ஆரோக்கியக் குறைபாடுகளால் உடல் சோர்வு, மருத்துவச் செலவு களை சந்திக்க நேரிடும். மனைவி, பிள்ளைகளுடைய செயல்கள் மன அமைதி யைக் குறைக்கும். தற்போது பொறுமையுடன் செயல் பட்டால் விரைவில் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சிக்குப்பிறகு வாழ்வில் நல்ல முன்னேற் றங்களை அடையலாம். பிரதான கிரகங்கள் சாதகமற்று சஞ்சரித்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்தி ரன் சாதகமாக இருப்ப தால் அன்றாடச் செயல் களில் இருந்த தேக்கங்கள் விலகி ஒருசில ஆதாயங் களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பைக் கூட தவறவிடாமல் சரியான முறையில் பயன் படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட் களை நம்பாமல் எதிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமான், தட்சிணா மூர்த்தி வழிபாட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 2, 11-க்கு அதிபதி புதன்- குரு சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் முயற்சிகள் வெற்றிபெறும். சனி, செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பை யும் எதிர்கொண்டு ஏற்றங் களைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் மனைவி, பிள்ளைகளின் உடல்நிலையும் நன்றாக இருக்கும். கடந்தகால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மகிழ்ச்சி உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியா பாரத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த அரசு உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபட்டு லாபங் களை அடைவீர்கள். கூட் டாளிகள்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகரீதியாக உங்கள் திறமை களை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால் கடினமாக பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரும். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சகல நன்மைகளையும் அடையலாம்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர் கள். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கம் ஏற்படும் என்பதால், சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்கும் பலம் உண்டாகும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலமாக சில அனுகூலங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். இயற்கை உணவுகளை உட் கொள்வது நல்லது. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வெள்ளி, சனிக் கிழமைகளில் சாதகமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். கூட்டாளி களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள் ளும் செயல்களில் தேவையற்ற தாமதம் ஏற்படும். தற்போது சற்று பொறுமையுடன், இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக ஓய்வின்றி உழைக்க நேரிடும். வரவேண்டிய சம்பளம் சற்று தாமதமாகும். அதிகாரிகள் ஆதரவாக இருப்ப தால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெள் ளிக்கிழமை லட்சுமி வழிபாட்டை மேற்கொண் டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியான செய்தி வரும். சிலருக்கு வெளியூர்த் தொடர்புகள்மூலம் நல்லது நடக்கும். பூர்வீக சொத்துவழியில் இருந்த பிரச்சினைகள் விலகி மனநிம்மதி ஏற்படும். ராசிக்கு 4-ல் சனி, செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் சென்றால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கமுடியும். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் உங்கள் முயற்சிகள் நற்பலனைத் தரும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தி னாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை எளிதில் அடைவீர்கள். தொழில்ரீதியாக தேவையற்ற பயணங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகபடியாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து எண்ணங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மேன்மையளிக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் ஆதாயங்களைப் பெற்று பல்வேறு முன்னேற்றங்களை அடைவீர்கள். 6-ஆம் தேதிமுதல் புதன் 4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் இருந்தாலும் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படாது. ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடைய லாம். கடந்தகால உடல் பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். வெள்ளி, சனிக்கிழமைகளில் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சி யடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால், தொழிலில் நிம்மதி யுடன் செயல்பட முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாய்ப்புகளை அடைவதற்காக தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உத்தி யோகத்தில் எடுத்த பணியை சிறப்பாகச் செய்து முடித்து அதன்மூலம் ஊதிய உயர்வை அடை வீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்ப வர்களுக்கு வரும் நாட்களில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத் தலங் களுக்குச் சென்றுவர நேரிடும். விஷ்ணு பக வானையும் லட்சுமி தேவியையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

tt

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்ப தால் பண விஷயத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். செவ்வாய், சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச்சினை, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வும். சிறு பாதிப்பென்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களின் தனித்திறமையால் எந்தவித பிரச்சினையையும் தைரியத்து டன் எதிர்கொள்வீர்கள். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். தொழில், வியாபாரத்தில் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள்மூலம் வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால், முக்கிய விஷயங்களில் நீங்கள் தலையிட்டால்தான் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். அரசு அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் அதிகரித்து பணியில் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு மனக்கவலைகள் ஏற்படும். விரைவில் ஏற்படவுள்ள குருப் பெயர்ச்சிமூலமாக உங்கள் பிரச்சினைகள் குறையும். விநாயகரையும் ஆஞ்சனேயரையும் வழிபட்டால் கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் காரணமாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ளவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் நிதானத்துடன் இருப்பது சிறப்பு. குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய மங்கள நிகழ்வுகள் எளிதில் கைகூடி நிம்மதி ஏற்படும். சூரியன் 2-ல், ராகு 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பல்வேறு ஆதாயங் களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்கள்மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும், கேது 11-ல் இருப்பதால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். புதிய நபர்களிடம் வீண் பேச்சைத் தவிர்க்கவும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல லாபங்களை அடையலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது நிதானமாக செயல்பட்டால் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். நண்பர்களின் உதவியால் நெருக்கடிகள் சற்று குறைந்து நிம்மதியடைவீர்கள். சிவபெருமானையும் துர்க்கையம்மனையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதிக்குறைவு ஏற்படும். பணவரவில் நெருக்கடி, வீண் செலவுகளால் சேமிப்பு கள் குறையும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஆறுதல் தரும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நினைப்பதொன்று- நடப்பதொன்றாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாகும். நம்பியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படும். அதிக முதலீடுகொண்ட செயல்களைத் தற்போது தவிர்த்துவிட்டு பொறுமையுடன் இருந்தால் விரைவில் உங்கள் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் சக ஊழியர்கள் தக்க நேரத்தில் உதவிசெய்வதால் எதையும் சமாளிக்கமுடியும். அதிகாரிகள் சில நேரங்களில் நெருக்கடிகளைக் கொடுத்தாலும், உங்களின் திறமையால் அவர்களின் ஆதரவை அடைந்துவிடுவீர்கள். கிருத்திகையன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவதும் நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, லாப ஸ்தானமான 11-ல் சனி, செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். எந்த செயலில் ஈடுபட்டாலும் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குரு 6, 8 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகளெல்லாம் இருந்த இடம்தெரியாமல் மறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் கடன்களை பைசல் செய்வது மட்டுமல்லாமல், நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நற்பலன்களை எளிதில் அடையமுடியும். தொழில்ரீதியாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு லாபகரமான பலன்களை அடைவது மட்டுமல்லாமல், கடந்தகாலப் பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக விலகும். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிதரும். வேலைக்குச் செல்பவர்களுக்கு, உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி சிறப் பாக செயல்படமுடியும். சக ஊழியர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இடமாற் றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகைகள் வரும் நாட்களில் கிடைத்து பொருளாதார நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கமுடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தனவரவு உண்டாகும்.