எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 4.

செவ்வாய்: பூராடம்- 1.

Advertisment

புதன் (வ) : உத்திராடம்- 2.

குரு: சதயம்- 3.

சுக்கிரன் (வ) : பூராடம்- 2.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

d

கிரக மாற்றம்: இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.6-2-2022

மாலை 5.09 மணிக்கு மேஷம்.

9-2-2022 அதிகாலை 4.09 மணிக்கு ரிஷபம்.

11-2-2022 மாலை 5.05 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன் 10-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைவீர்கள். எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவு மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் அதிகபடியான ஆதாயங்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக லாபங்கள் கிடைத்து சேமிக்கக்கூடிய அளவுக்குப் பொருளாதாரநிலை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிடைக்கும். கூட்டாளிகள்மூலமாக புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலம் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகளை அடையமுடியும். சிலருக்கு ஒரு பெரிய இடத்துத் தொடர்பு கிடைத்து நல்ல நிலையை அடையமுடியும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுவதாலும், வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதாலும் முன்னேற் றங்கள் ஏற்படும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 8-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. உங்கள் முன்கோபத்தால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் யோசித்து செயல்படுவது சிறப்பு. ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து 9-ல் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் மூலமாக அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதரின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு மேற்கூறிய நாட்களில் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற பொருட் தேக்கங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உங்களின் தனித்திறமை யால் ஒருசில அனுகூலங் களை அடைவீர்கள் என்றா லும், வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. தற்போது கிடைப்பதைப் பயன் படுத்திக்கொண்டால் இரு மாதங்களில் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, உற்றார்- உறவினர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் பொறுமையுடன் செல்லவும். கேது 6-ல் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். குரு 9-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலங்களைப் பெற்று குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை வரும் நாட்களில் எடுத்துவிட முடியும். எந்தவொரு பணியிலும் நீங்கள் சற்று முனைப்பு டன் செயல்பட்டால் தான் நற்பலன்களை அடைய முடியும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். உத்தியோகத்தில் சாதக மான சூழ்நிலை கிடைக்கும். சிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். சிவ பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு கேந்திர- திரிகோணாதி பதிகளான சுக்கிரன், செவ்வாய் இணைந்து 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும் காலமென்பதால் அனா வசிய செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குரு பார்வை 2, 4-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, நெருங்கியவர்களின் உதவியால் சில ஆதாயங்களை அடையும் யோகம் ஏற்படும். அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். சனி, சூரியன் இணைந்து 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டால் விரைவில் நல்ல முன்னேற் றங்களை அடையமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமையாக செயல்பட்டு எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவிருப்பதால் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். விநாயகர் வழிபாட்டையும், சஷ்டியன்று முருக வழிபாட் டையும் மேற்கொண்டால் நற்பலன்களை அடையலாம்.

mm

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 6-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீண்டநாள் கனவுகள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் பொருளா தாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். நவீன கரமான பொருட்களை வாங்கும் யோக முண்டாகும். வம்பு வழக்குகளில் நிரந்தரத் தீர்வேற்பட்டு நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ராசிக்கு 9, 10-க்கு அதிபதி செவ்வாய், சுக்கிரன் இணைந்து 5-ல் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே, எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. ஞாயிற்றுக்கிழமை தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையும் வாய்ப்பிருக்கிறது. உடன் பிறந்தவர்கள் வகையில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங் களை அடையும் வாய்ப்பும் தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு களை அடையமுடியும். வேலைப்பளு குறையும். சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்புண்டு. முருகன், துர்க்கையம்மன் வழிபாட்டை செய்துவந்தால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்தகால நெருக்கடிகள் குறையும். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிரபாராத அனுகூலங்கள் ஏற்பட்டு அதன்மூலம் கஷ்டங்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக தேக்கமான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளிநபர்களால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க முடியும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். இவ்வாரத்தில் சனிக்கிழமை அனுகூலமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் தற்போதுள்ள வாய்ப்புகளைப் பொறுமை யுடன் கையாண்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். மறைமுகப் போட்டிகள் அதிகரிப்பதால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகத்தில் திறமையாக செயல்பட்டு எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். உங்கள்மீது வீண் பழிச்சொற்களை மற்றவர்கள் சுமத்துவார்கள் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் ஓரிரு மாதங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தைக் கிருத்திகையன்று முருக வழிபாட்டையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாட்டை யும் செய்வது மிகவும் நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரநிலை மிகத் திருப்திகரமாக இருந்து மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்- வாங்கல்மூலம் ஆதாயம் அடையமுடியும். சூரியன், சனி சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சில நேரங்களில் இருப்பதை அனுபவிக்க தடை உண்டாகும். ராகு 8-ல் இருப்பதால் வாகனப் பயணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு லாபத்தை அடைய முடியும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி அதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்லவேண்டிய காலமாகும். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறமுடியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் எடுத்த பணியை சிறப்பாகச் செய்யமுடியும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப்பெற்று நல்ல நிலையை அடையமுடியும். நீண்டநாட்களாக நிலவிய குடும்பப் பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுககாரகன் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள்வழியில் சுபச்செய்தி கிடைக்கும். ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சனிக்கிழமை மட்டும் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் கடந்த காலங்களில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து, எடுத்த ஆடர்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்து சிலருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஆதாயங்களை அடையும் யோகமிருந்தாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தைக் கிருத்திகை நாளில் விரதமிருந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து 2-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சமார்த்தியமாக செயல்பட்டு நன்மைகளைப் பெறுவீர்கள். குரு 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடிகள் இருக்குமென்பதால், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் மேலோங்கும். உற்றார்- உறவினர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் அன்றாட செயல்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கும். தொழில்ரீதியாக தற்போதிருக்கும் வாய்ப்புகளைத் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். நேரம் பார்க்காமல் சற்று முனைப்புடன் பணிபுரிந்தால்தான் நெருக்கடிகளை சமாளித்து முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருந்தாலும் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போதைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டால் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். சிவ வழிபாடு செய்வது, ரதசப்தமி நாளில் நவகிரகங்களில் சூரியனுக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. 2-ல் சஞ்சரிக்கும் குரு 6, 8-ஆம் வீடுகளைப் பார்ப்பதால் எதையும் சமாளித்து பணியைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் பலமுண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வதும், கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும் சிறப்பு. சுக்கிரன், செவ்வாய் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்கள் மேற்கொள்கின்றபோது பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால், பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சரிவர பணிபுரியாத காரணத்தினால் நெருக்கடி களை எதிர்கொள்ள நேரிடும். என்றா லும் பொருளாதாரரீதியாக லாபங்களை அடையும் யோகமுண்டு. மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கடன்கள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அனைத்தையும் சிறப் பாகக் கையாள்வீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். சஷ்டி மற்றும் கிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வது, ரதசப்தமி நாளில் சூரிய வழிபாடு செய்வது, வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி- சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரரீதியாக எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். குரு பார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர் களின் உதவியால் உங்களுக்குள்ள நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், செவ்வாய் இணைந்து 11-ல் சஞ்சரிப்பது வலுவான தர்மகர்மாதிபதி யோகமென்பதால் எதிர்பாராத ஆதாயமடைவீர்கள். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தள்ளிவைக்கவும். சிறிது காலம் பொறுமையாக இருந்தால் வரும் ஏப்ரலில் ஏற்படும் கிரகப் பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் பணியை நீங்கள் எடுத்துச் செய்யவேண்டிய நிலை இருந்தாலும், அதற்கான ஆதாயங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். சிவ வழிபாடு, சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அனுகூலமான அமைப்பென்பதால் எல்லாவகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். சனி, சூரியன், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெற்று சேமிக்கமுடியும். வீடு, மனை வாங்குவதற்கு தற்போது முயற்சித்தால் வெற்றியடைய வாய்ப்புண்டு. ராகு 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் அமைப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகமும் அதன்மூலம் ஆதாயமும் கிடைக்கும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதில் ஈடுபட்டாலும் அதிக அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக அமையும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதியான இடத்திலிருந்து அழைப்பு வரும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களாலும், மகாலட்சுமிக்கு தாமரை மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் பல நடக்கும்.