முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 4.
செவ்வாய்: உத்திரட்டாதி- 4.
புதன்: கிருத்திகை- 2.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: பரணி- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
5-6-2022 இரவு 12.24 மணிக்கு சிம்மம்.
8-6-2022 காலை 10.03 மணிக்கு கன்னி.
10-6-2022 மாலை 4.06 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு இருபுறமும் பாவ கிரகங்கள்- அதாவது 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். குரு பகவானும் 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு வாய்ப்பையும் தவறவிடாமல் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களால் சிறிது நெருக்கடி ஏற்படலாம் என்பதால், சில நேரங்களில் நீங்கள் நேரடியாகப் பணிபுரியவேண்டிய நிலை இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதில் இடையூறு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் தவறுசெய்வீர்களா என உடனிருப்பவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் என்பதால், வேலைகளில் சற்று கவனத் துடன் செயல்பட்டால் இருப்பதைக் காப்பாற்றிக்கொள்ளமுடியும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஆதாயங்களை அடையமுடியும். சூரிய நமஸ்காரம் செய்வது, முருகனைப் பிரார்த்திப்பது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் கேந்திர, திரிகோணாதிபதிகளான சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வம், செல்வாக்கு மேலோங்கக்கூடிய நேரமாக இருக்கும். சாமர்த்தியமாகப் பேசி பல்வேறு விஷயங்களில் காரியத்தை எளிதில் சாதித்துவிடுவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமில்லாமல் சுபிட்சமான நிலையிருக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பும் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். வெளியூர்ப் பயணங்கள்மூலம் ஒரு சுபச்செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய செயல்களுக்கு அரசுவழியில் எதிர் பார்த்த ஆதரவையும், அரசு உத்தரவுகளையும் வரும் வாரத்தில் பெறமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் இணைவதால் தொழிலில் அபிவிருத்தி செய்யமுடியும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்கள் குணத்தை சரியாகப் புரிந்துகொண்டு தற்போது சுமுகமாகப் பழகுவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து அனைத்துவிதமான கடன்களும் குறையும். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையோடு செயல்படுவது நல்லது. அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்று. சூரியன் விரய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் எந்த செயலிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறர் சொல்வதைக்கேட்டு இருப்பதை இழந்துவிட வேண்டாம். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் எந்தவொரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, தினமும் அதிகாலையில் சூரியநமஸ்காரம் மேற்கொள்வது நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு இரண்டாமதிபதி சூரியன், புதனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, செவ்வாய் சேர்க்கைப்பெற்று வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும் இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து சமுதாயத்தில் கௌரவ நிலையை அடைவீர்கள். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில் விருத்திக் காக நீண்டநாட்களாக எதிர்பார்த்த வங்கி உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து நிம்மதி ஏற்படும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் எடுத்த ஆர்டர்களை சிறப் பாக செய்துமுடிக்க முடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மா னம் தற்போது கிடைத்து கடன்களை பைசல் செய்வீர்கள். நல்ல நட்புகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச்செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் 2-ஆமதிபதி புதன் சேர்க்கைபெற்று 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும், வாகனங் களில் செல்லும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடி கள் நிலவும். அன்றாட செலவுகளைக் கையாள் வதற்குப் போராட வேண்டியிருக்கும். சிக்கனமாக இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் சில ஆதாயம் ஏற்பட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், உங்களின் தனித்திறமையால் கடினமான பணியைக்கூட சிறப் பாகக் கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத வகையில் வியக்கத் தக்க அளவுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கும். முருகனைப் பிரார்த்திப்பது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் செலுத்தி மனதார வழிபடுவது உத்தமம்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பகவான் 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, நவீன பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். உங்கள் தனித்திறமையால் கௌரவமான நிலையை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வேலையாட்கள் உறுதுணையாக செயல்படுவதால் புதிய ஆர்டர்களைப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டாளி களின் ஆதரவான செயல் பாடுகளால் எந்தவித நெருக்கடியையும் எளிதில் கையாண்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங் களில் சற்று நிதானத் தோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு தகுதிக்கான வேலை கிடைப்பது மட்டுமல்லாமல், இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரியிடம் நிலவும் கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து சுமுகமான நிலை உண்டாகும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அபரிதமான அனுகூலங்கள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, உக்ர தெய்வ தரிசனம் நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் துணிவுடன் செயல்படு வெற்றி காண்பீர்கள். பெண்கள்மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியா கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்துச் சென்றால் நிலைமையை சமாளிக்க முடியும். குரு 6-ல், சூரியன் 8-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக கவனமாக செயல்படுவது நல்லது. வயது மூத்தவர் களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வேலையாட்களால் மன அமைதி குறையும். சில இடைத் தரகர்களால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தட்டிப்போகலாம். எந்த செயலிலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். நேரம், காலம் பார்க்காமல் உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நன்மை நடக்கும். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள், உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மகா விஷ்ணுவை வழிபடுவது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவதன்மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 5-ல் குரு வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாகத் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச்சென்றால் வளமான பலன்களைப் பெறலாம். தொழில், வியாபாரரீதியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு லாபங்களை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால், பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களைப் புரிந்துகொண்டு நட்பாகப் பழகுவார்கள். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளைத் தற்போது நிறைவேற்றமுடியும். வெளிமாநிலங்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகள் பாராட்டப்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த பதவி உயர்வை அடையும் வாய்ப்புண்டு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். சஷ்டியன்று விரத மிருந்து முருகனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது, மகாலட்சுமியை தரிசிப்பதன்மூலம் உங்கள் கஷ்டங்கள் குறையும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து 6-ல் சஞ்சரிப்பது அற்புதமான தர்மகர்மாதிபதி யோகமாகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகளை சமாளித்து நினைத் ததை சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். அது போல இவ்வாரத்தில் 4-ஆமதிபதி குரு, 5-ஆமதிபதி செவ்வாய் சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். அசையா சொத்துவகையில் நீங்கள் மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் 5-ல், கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ் டத்தால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். வெளிநபர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக் கான பலனை வரும் நாட்களில் எளிதில் அடையமுடியும். புதிய முயற்சிகளுக்கு அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல மான இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதார நெருக்கடி கள் குறைந்து நிம்மதி உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப் படியான அனுகூலங்களை அடைவீர் கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 4-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக நெருக்கடியான காலமென்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பரத்தைக் குறைத் துக்கொள்வதும் நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவதும், வேலையாட்களை அனுசரித் துச்செல்வதும் நல்லது. சில இடைத்தரகர் களின் செயல்களால் தொழில்ரீதியாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய புதிய வாய்ப்புகள் தடைப்படலாம். வெளிநபர் களிடம் தொழில் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் உடல்அசதி காரணமாக பணியில் கவனம் செலுத்தமுடியாது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. இவ்வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் ஏற்றங்களைப் பெறமுடியும். சனிபகவான் தலங்களுக்குச் சென்று எள் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பகவான் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகால சோதனைகள் மளமளவென குறைந்து நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும், சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி வரும் நாட்களில் அரங்கேறும். உடல்ரீதியாக சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அவை உடனே சரியாகிவிடும். கடந்தகாலக் கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத் தில் நல்ல லாபத்தை ஈட்டும் யோகமுண்டு. புதிய முயற்சியில் ஈடுபட்டு அதன்மூலம் தொழிலை விரிவுபடுத்த முடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக் குக் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். மற்றவர்களால் செய்யமுடியாத செயல்களைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய மாற்றங் கள் நிகழும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமை களில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு, சூரிய நமஸ் காரம் செய்வது உத்தமம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு 3-ல் சூரியன், புதன் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவு கள் சாதகமாக இருந்து அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடித்துத் தரமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது, உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயங்களை அடையமுடியும். மகாலட்சுமி வழிபாடு, விநாயகருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது நல்லது.