இந்த வார ராசிபலன் 5-3-2023 முதல் 11-3-2023 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-5-3-2023-11-3-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 1.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1.

புதன்: சதயம்- 1.

குரு: ரேவதி- 1.

சுக்கிரன்: ரேவதி- 2.

சனி: அவிட்டம்- 4.

dd

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

5-3-2023 இரவு 9.30 மணிக்கு

சிம்மம்.

8-3-2023 காலை 8.53 மணிக்கு

கன்னி.

10-3-2023 மாலை 6.37 மணிக்கு

துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தான மான 11-ல் சூரியன், சனி, புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத்தில் நிம்மதியுண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்று வீர்கள். குரு, சுக்கிரன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் வலிமை இருக்குமென்றாலும் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமை காப்பது மிகமிக உத்தமம். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்களை ஈட்டும் வாய்ப்புகள் உண்டு. தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் இருந்த இடம்தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடித்து விடுவீர்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் எளிதில் அனுகூலமான பலன்களைத் தரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, மகாலட்சுமிக்கு நெய்தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

tt

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிநாதன் சுக்கிரன்- குரு சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றிகிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். சுபகாரியங் கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி யிடையே அன்யோன்யம் மிகச் சிறப்பாக இருக்கும். சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் கௌரவப் பதவிகள் தேடிவரும். உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் நீங்கள்போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்ப தால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் சிறப்பாக செயல் படமுடியும். எந்த பிரச்சினையும் எளிதில் எதிர்கொண்டு பணிபுரிவீர்கள். குடும்பத்திற் குத் தேவையான நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். திடீர் தனவரவு உண்டா கும். குறிப்பாக இந்த நாட்களில் எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும். முருகப்பெருமானை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது நன்று.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 1.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1.

புதன்: சதயம்- 1.

குரு: ரேவதி- 1.

சுக்கிரன்: ரேவதி- 2.

சனி: அவிட்டம்- 4.

dd

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

5-3-2023 இரவு 9.30 மணிக்கு

சிம்மம்.

8-3-2023 காலை 8.53 மணிக்கு

கன்னி.

10-3-2023 மாலை 6.37 மணிக்கு

துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தான மான 11-ல் சூரியன், சனி, புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத்தில் நிம்மதியுண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்று வீர்கள். குரு, சுக்கிரன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் வலிமை இருக்குமென்றாலும் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமை காப்பது மிகமிக உத்தமம். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்களை ஈட்டும் வாய்ப்புகள் உண்டு. தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் இருந்த இடம்தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடித்து விடுவீர்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் எளிதில் அனுகூலமான பலன்களைத் தரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, மகாலட்சுமிக்கு நெய்தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

tt

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிநாதன் சுக்கிரன்- குரு சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றிகிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். சுபகாரியங் கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி யிடையே அன்யோன்யம் மிகச் சிறப்பாக இருக்கும். சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் கௌரவப் பதவிகள் தேடிவரும். உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் நீங்கள்போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்ப தால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் சிறப்பாக செயல் படமுடியும். எந்த பிரச்சினையும் எளிதில் எதிர்கொண்டு பணிபுரிவீர்கள். குடும்பத்திற் குத் தேவையான நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். திடீர் தனவரவு உண்டா கும். குறிப்பாக இந்த நாட்களில் எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும். முருகப்பெருமானை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது நன்று.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதி யான புதன், சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்றா லும், உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். ராசிக்கு 11-ல் ராகு இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு லாபங்களை அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச்சென்றால் தேவையற்ற நெருக்கடி களைத் தவிர்த்து நல்ல லாபங்களைப் பெறலாம். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. அரசுவழியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் நேரமென்பதால் ஒவ்வொன்றிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அதிகாரிகளிடம் பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். என்றாலும் உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைக்கும். புதிய வேலை எதிர்பார்ப்பவர்கள் தற்போது கிடைப்ப தைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல நிலையை எட்டமுடியும். திங்கள், செவ்வாய் ஆகியவை மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக் கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப் பும் உள்ளது. முருகப் பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது, குருபகவானுக்கு நெய்தீபமேற்றுவது கெடுதி யைக் குறைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தி யாவது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நெருக்கடிகள் குறைவதால் வாங்கிய கடன் களை பைசல் செய்யமுடியும். ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு கௌரவமான நிலையை எட்டுவீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதால் நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக வயதில் மூத்த வர்கள், உறவினர்களிடம் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உடன் வேலைசெய்பவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்து வார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு செயல்பட்டால் உயர்வான நிலையை எட்டமுடியும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக உள்ளதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, சனி பகவானுக்கு எள் தீபமேற்று வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், சனியுடன் 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேர மாகும். குடும்பத்தில் தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய விஷயங்கள் சற்று தாமதமாகும். தனகாரகன் குரு- சுக்கிரனுடன் 8-ல் இருப்ப தால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்க மான நிலை இருக்குமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்வதில் இழுபறி நிலை நீடிக்கும். அதனால் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால், ஒவ்வொன் றிலும் யோசித்து செயல்படுவது நல்லது. வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப் பாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் நிமித்தமாக அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தற்போது மிகவும் கவனத்தோடு செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருக்கும். உங்கள் பணியில் மட்டும் பொறுமையோடு செயல்பட்டால் நிலை மையை சமாளித்துவிடமுடியும். பெண்கள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பொருளா தாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு எதையும் எதிர்க்கொள்ளும் பலம் உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமல்லாமல் பணவரவு மிக தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணம் தற்போது பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்கள்கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பிரதிபலனை அடையமுடியும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலன் கிடைக்கும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவது, வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். விநாயகர் வழிபாடு, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். கேது- ராகு 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களே அமைதியைக் குலைப்பார்கள். உடல்ரீதியான பாதிப்புகளால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியாது. நேரத்திற்கு உணவு உட்கொள்வது, தகுந்த மருத்துவ சிகிச்ச மேற்கொள்வது நல்லது. சூரியன், புதனுடன் 5-ல் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நிலைமையை எதிர்கொள்ளமுடியும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் நேரமென்ப தால் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவறவிடாமல் செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் வீண்பழிச் சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமாகும். வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மிகவும் நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பிறருக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றமுடியும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடுவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வாரத்தில் சூரியன், சனி சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்ப தாலும் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீடு, வாகனங் களைப் பராமரிப்பதற்காக எதிர்பாராத செலவு களை எதிர்கொள்ள நேரிடும். ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமை யால் எந்த செயலையும் குறித்த நேரத்தில் செய்துமுடித்து சமுதாயத்தில் நல்லபெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். சக ஊழியர்கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரமென்பதால் உங்கள் பணியில் பொறுமையோடு இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகியவை மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்தகாலப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து சுமூக மான நிலை உண்டாகும். உங்களுக்கிருந்த தேவையற்ற சங்கடங்கள் விலகி மதிப்பு, மரியாதையுடன் வாழக்கூடிய நிலை உண்டாகும். கடன் பிரச்சினைகள் படிப்படி யாகக் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள், விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும் யோகமும் வரும் நாட்களில் உண்டு. படித்து முடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 2-ல் சனி, சூரியன் சஞ்சரிப்ப தால் எதிலும் சிந்தித்துப் பேசுவது, நெருங்கிய வர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். குரு, சுக்கிரன் 3-ல் இருப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். உடல்ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியாது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கடினமாகப் பணிபுரிந்தால் மட்டுமே அடைய வேண்டியதை அடையமுடியும். சிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். சட்டரீதியாக ஏற்படும் சிறுசிறு சிக்கல்களால் மனஅமைதி குறையும். எனவே அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனத்தோடு இருப்பது, கணக்கு வழக்குகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும். வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரும் என்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையோடு நடந்துக்கொள்வது, பிறரிடம் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சக ஊழியர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படும். ஞாயிறு, சனி ஆகியவை மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றும் யோகமுண்டு. மறைமுக எதிர்ப்புகள் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஒவ்வொரு செயலிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே அனுகூலங்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியரீதியாக சிறு பாதிப்பென்றாலும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன்மூலம் பெரிய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வாகனங்கள்மூலமாக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வீர்கள். தொழில்ரீதியாக நல்ல வாய்ப்புகளும், போட்ட முதலை எளிதில் எடுக்கும் சூழலும் உண்டு. வேலையாட்கள் சில நேரங்களில் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால், அனைத்து விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும். உத்தியோகரீதியாக உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் செய்யவேண்டிய நெருக்கடிகள் இருந்தாலும், எதிலும் சிறப் பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகியவை அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சற்று கவனத்தோடு செயல்பட்டால் இலக்கை அடையலாம். உங்கள் செயல்களுக்கு சில இடையூறுகள் இருக்குமென்றாலும், சிறு தடைக்குப்பிறகு அனுகூலங்களை அடையமுடியும். சூரியன், சனி 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக இருக்கவேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். ராகு 2-ல் இருப்பதால் குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பேசாமலிருப்பது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்று. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. மறைமுகப் போட்டிகள் அதிகப்படியாக இருக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் எதிலும் பக்குவமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். உங்களுடைய தொழில் கணக்கு வழக்குகளை கவனத்தோடு கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்காது. பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் நிலையும், அதன்மூலம் தேவையற்ற செலவுகளையும் எதிர்கொள்வீர்கள். இந்த வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும், திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையமுடியும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது, சிவ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

bala100323
இதையும் படியுங்கள்
Subscribe