முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 4.
செவ்வாய்: ரோகிணி- 3.
புதன்: உத்திராடம்- 1.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: சதயம்- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 1.
கேது: சுவாதி- 3.
கிரக மாற்றம்:
தை 24 (7-2-2023) மகர புதன் (காலை 7.29).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
6-2-2023 மாலை 3.03 மணிக்கு சிம்மம்.
9-2-2023 அதிகாலை 2.50 மணிக்கு கன்னி.
11-2-2023 பகல் 1.02 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசிக்கு 10-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன், சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபங்களைப் பெறும் வாய்ப்புண்டு. நவீன யுக்திகளைப் பயன்படுத்தி எடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் சிறப்பு டன் செய்துமுடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். பெரிய முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக் குத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பணியில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் குறையும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். குரு 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)>
ராசிநாதன் சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவே மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் புதன் 7-ஆம் தேதிமுதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றங் களைப் பெறுவீர்கள். குடும்பத் தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பூர்வீக சொத்துவகையில் இருந்த வம்பு, வழக்குகள் விலகி ஆதாயங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடு கள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி அனுகூலங்களை அடையமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு இணையும் உன்னத நிலையுண்டாகும். பணிச்சுமை குறையும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் எதில் ஈடுபட்டாலும்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 4.
செவ்வாய்: ரோகிணி- 3.
புதன்: உத்திராடம்- 1.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: சதயம்- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 1.
கேது: சுவாதி- 3.
கிரக மாற்றம்:
தை 24 (7-2-2023) மகர புதன் (காலை 7.29).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
6-2-2023 மாலை 3.03 மணிக்கு சிம்மம்.
9-2-2023 அதிகாலை 2.50 மணிக்கு கன்னி.
11-2-2023 பகல் 1.02 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசிக்கு 10-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன், சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபங்களைப் பெறும் வாய்ப்புண்டு. நவீன யுக்திகளைப் பயன்படுத்தி எடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் சிறப்பு டன் செய்துமுடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். பெரிய முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக் குத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பணியில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் குறையும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். குரு 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)>
ராசிநாதன் சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவே மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் புதன் 7-ஆம் தேதிமுதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றங் களைப் பெறுவீர்கள். குடும்பத் தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பூர்வீக சொத்துவகையில் இருந்த வம்பு, வழக்குகள் விலகி ஆதாயங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடு கள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி அனுகூலங்களை அடையமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு இணையும் உன்னத நிலையுண்டாகும். பணிச்சுமை குறையும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியடையும் யோகமுண்டு. >
மிதுனம்>
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் 7, 8-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 8-லும், செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதாலும் எதிலும் பொறுமையோடு செயல் படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக நிம்மதிக் குறைவுண்டாகும். எளிதில் முடியவேண்டிய காரியங் களும் தாமதப்படும். நம்பியவர்களே நெருக்கடிகளைத் தருவார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. நினைத்தது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும். ஆரோக்கியத் தில் சற்று அக்கறை செலுத்துவது, வாகனங்களில் கவனத்துடன் செல்வது நல்லது. குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல நிலையை எட்டமுடியும். வேலையாட்கள் சில நெருக்கடிகளைத் தருவார்கள். எதிலும் நீங்களே முன்நின்று செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரண மாக உடல் அசதி ஏற்படும். மற்றவர்கள் பணியும் சேர்த்துச் செய்வதால் ஓய்வுநேரம் குறையும். முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். செவ்வாய், புதன்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர் கள். செவ்வாய் 11-ல் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணப் பரிமாற்ற விஷயங்களில் நல்ல லாபங்களும், நண்பர்கள்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முதல் புதன் 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்திய மாக செயல்பட்டு நல்ல நிலையை அடைவீர்கள். பிரச்சினைகளை எளிதில் எதிர்கொண்டு நெருக்கடிகளை சமாளித்து, போட்ட முதலீட்டை எடுக்கும் யோகமுண்டு. தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் பொருளாதார உதவி கள் கிடைக்கப்பெற்று தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாத பணிகளைக்கூட தற்போது எளிதில் முடித்து விடுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகளும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரனின் அனுகூலமான சஞ்சாரத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு, நீண்டநாள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். 7-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலமுண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தற்போது எளிதில் தீர்க்கமுடியும். அதிக முதலீடுகொண்ட செயல்களில் சற்று கவனத் தோடு செயல்படுவது மிகவும் நல்லது. உடனிருப்பவர்களைப் பக்குவமாகக் கையாண் டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்பவர் களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் யோகமும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலையும் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்குவதற் காக செலவு செய்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வளமான பலன்களைப் பெறலாம். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு தற்போது கிடைக்கும். செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள், கடந்தகாலப் பிரச்சினைகள் முழுமையாக விலகி மகிழ்ச்சி, வாங்கிய கடன்களை பைசல் செய்யும் அமைப்பு ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நல்ல நட்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய முறைகளைக் கையாண்டு அதிகப்படியான லாபங்களைப் பெறுவீர்கள். தொழில்ரீதியாக இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். அதிகாரியிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் பணியில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக உங்களுக்கிருந்த வேலைப் பளு குறைந்து நிம்மதியுண்டாகும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளமுடியும். பெண்கள்வழியில் ஆதாயங்களை அடைவீர்கள். ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். உடனிருப்பவர்களே அமைதியைக் குறைப்பார்கள். வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவதும் நல்லது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையுடன் கையாண்டால்தான் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சிலர் செய்யும் செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். கஷ்டப்பட்டு உழைப்பீர்கள். ஆனால் அதற்கான பலனை அடைபவரோ மற்றொருவராக இருப்பார்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தவிர்ப்பது, தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் ஓய்வுநேரம் குறையும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்களை அடையமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
குருபகவான் 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதாலும், ராகு 6-ல் இருப்பதாலும் நீண்டநாட்கள் எண்ணிய காரியங்கள் தற்போது கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அன்றாட செயல்களில் முழுமையான வெற்றியும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய யோகமும் உண்டு. குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால், பேச்சில் பொறுமையோடு இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலைகிடைத்து அனைத்துவிதமான பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியான நிலை உண்டாகும். கூட்டாளிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மேற்கொள்ளும் செயல்களுக்கு அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 4-ல், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தோடு இருப்பது நல்லது. பணப் பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால், ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக ராசிக்கு 3-ல் சனி, 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் தைரியத்தோடு எதிர்கொண்டு ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகாலப் பொருளாதார நெருக்கடிகள் விலகும்; பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் விலகி நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களைப் போட்டு தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாமல் லாபகரமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில்ரீதியாக இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி மகிழ்ச்சியுண்டாகும். உங்களின் மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயர்ந்து நிம்மதியேற்படும். சிலருக்குப் புதியவீடு, மனை போன்றவை அமையும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்திற்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கப் போகிறது. நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சக ஊழியரிடம் நிலவிய கருத்து வேற்றுமைகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு, மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடக்கூடிய அமைப்புண்டு.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பொருளாதார நெருக்கடிகளால் மன அமைதி குறைவது மட்டுமல்லாமல் கையிருப்பும் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போது குறைத்துக்கொள்வது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதும் உத்தமம். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நாவடக்கம் மிகமிக முக்கியம். பங்காளிகள்வகையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், மனக்குறைகள் ஏற்படலாம். முடிந்தவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனத்தோடு, உங்கள் நேரடிப் பார்வையில் செய்தால்தான் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை உங்கள் பெயரில் செய்யாமல், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமாகும். ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில், பிரதான கிரக சஞ்சாரம் அனுகூலமற்றி ருந்தாலும் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும், ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். உறவினரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது புத்திசாலித்தனமான செயலாகும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பென்றாலும் உடனடியாக தகுந்த மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும், நீங்கள் சிறப் பாக செயல்பட்டு லாபத்தையடையும் வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் சில பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கான பலன் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட எளிதில் முடித்துவிடுவீர்கள். அதிகாரியிடம் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. மனைவி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமானவையாக இருக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் குறித்த நேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் சிக்கலான விஷயங்களில்கூட உங்களின் தனித்திறமை யால் சிறப்பாக செயல்பட்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இலக்கை எளிதில் அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் ஒரு மகிழ்ச்சியான நிலையிருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. சிலருக்கு வெளியூர் வாய்ப்புகளும் அதன்மூலம் பொருளாதார மேன்மைகளும் உண்டாகும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகியவை சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும்.