முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 1.

செவ்வாய்: விசாகம்- 4.

Advertisment

புதன்: கேட்டை- 2.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: உத்திராடம்- 1.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 4.

கேது: அனுஷம்- 2.

கிரக மாற்றம்:

கார்த்திகை 22 (8-12-2021)

மகர சுக்கிரன் (பகல் 1.51)

கார்த்திகை 24 (10-12-2021)

தனுசு புதன் (காலை 6.05)

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

5-12-2021 காலை 7.48 மணிக்கு தனுசு.

7-12-2021 காலை 7.45 மணிக்கு மகரம்.

9-12-2021 காலை 10.10 மணிக்கு கும்பம்.

11-12-2021 மாலை 4.15 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். தன, ஏழாமதிபதி சுக்கிரன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பேற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீரும் வாய்ப்புண்டு. தடைப்பட்ட சுப நிகழ்ச்சி நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப் பாக இருக்கும். ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், கேது சேர்க்கை பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, பயணங்கள் மேற்கொள்ளும்போது நிதானமாகச் செல்வது நல்லது. உங்களுக்கிருந்த குழப்பங்கள் விலகி நிம்மதி நிலவும். சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பலமாக சஞ்சரிப்பதால், உங்கள் செயல்களுக்கு இவ்வாரத்தில் பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் அனுகூலங்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரி களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, வில்வ இலையால் சிவபூஜை செய்வது, சிவ மந்திரங்கள் படிப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத் துக்கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். ராசியாதிபதி சுக்கிரன் 8-ஆம் தேதிவரை 8-ல் சஞ்சரிப்பதாலும், குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் பண வரவுகளில் நெருக்கடிகள் தோன்றினாலும், சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் கிடைக்கப்பெறும் உதவிகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே இலக்கை அடையமுடியும். சந்திரன் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரரீதியாக அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். தற்போதிருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது. அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் கவனமாக செயல்படவும். கொடுக்கல்- வாங்கலில் சிறு சறுக்கல்கள் ஏற்படலாம் என்பதால் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். மகாவிஷ்ணு- மகாலட்சுமியை வழிபட்டுவந்தால் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.

tt

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

செவ்வாய் ஆட்சிபெற்று சூரியன், கேதுவுடன் உபஜெய ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கிருந்த மறைமுக பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து நிம்மதி ஏற்படும். பூர்வீகச் சொத்துரீதியாக அனுகூல செய்தி கிடைக்கும். குரு 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதால், எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பமையும். சுக்கிரன் இவ்வாரத்தில் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். உங்கள் ராசிக்கு ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் எளிதில் வெற்றிபெறலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமான பலனைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைத்து தொழிலை விரிவுப் படுத்தமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனி பகவான், துர்க்கை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

சூரியன்- செவ்வாய், கேது சேர்க்கைபெற்று 5-ல் சஞ்சரிப்பதால், உங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது நல்லது. பெற்றோ ரிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சற்று நெருக்கடியாக இருந்தாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து எதையும் சமாளித்து ஏற்றங்களை அடையமுடியும். உற்றார்- உறவினர் களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையலாம். பணவிஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் சிறப்பாக சஞ்சரிப்பதால் புதிய சொத்துகளை வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்றவற்றை மேற்கொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அடையவேண்டிய இலக்கை உங்கள் தனித் திறமையால் அடைந்து விடுவீர்கள். எடுக்கும் எந்தவொரு காரியத் திலும் சிந்தித்து செயல்படுவது, ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் கடினமான பணியையும் தக்க நேரத்தில் முடிப்பீர்கள். சஷ்டியன்று முருக வழிபாட்டையும், சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்து கடன்கள் குறையும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்கு உங்கள் பலம் அதிகரிக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டி சமுதாயத்தில் நல்லநிலையை எட்டமுடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர் கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய், கேது சஞ்சரிப்பதால், இருப்பதை அனுபவிக்க இடையூறு, அலைச்சலால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். எனவே, எதிலும் கவனமாக செயல்படவும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சந்திரன் இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 6, 7-ல் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அதிகாரிகளிடம் தேவையற்ற பேச்சைக் குறைக்கவும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது சிறப்பு.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் செவ்வாய் ஆட்சிபெற்று, உடன் நட்பு கிரகமான சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து பல்வேறு வகையில் வளர்ச்சியடையமுடியும். ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம், தூரப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சாதகப்பலன் கிடைக்கும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 6, 7-ல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால் வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டால் அனுகூலமான பலன் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய தொகைகளைக் கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். ராகு 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் எடுத்த ஆர்டர்களை தக்கநேரத்தில் முடித்து லாபத்தை அடையமுடியும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைசாற்றி வழிபட்டால் நல்லவை நடைபெறும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சூரியன், செவ்வாய் இனைந்து 2-ல் சஞ்சரிப்பதும், 8-ல் ராகு சஞ்சரிப்பதும் தேவையற்ற அலைச்சல், உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுப்பாட்டை ஏற்படுத்தும். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. குறிப்பாக நீங்கள் நல்லதாக நினைத்து எது பேசினாலும் அதனை மற்றவர் தவறாக எடுத்துக்கொள்வார்கள். எனவே பேச்சைக் குறைக்கவும். ஆரோக்கியரீதியாக சிறுசிறு உபாதைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பிருக்காது. புதன் 2-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இவ்வாரத்தில் சந்திரன்- ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். என்றாலும் அடையவேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். அரசாங்க வழியில் தேவையற்ற கேள்விகள் ஏற்படலாம் என்பதால், உங்கள் செயல்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் முன்னேற் றத்தை அளிக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் புதன், முயற்சி ஸ்தானத் தில் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் வார முற்பாதியில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறையுடனும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடனும் இருக்கவும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. சந்திரன்- செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சாதகமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த பணவரவுகள் எதிர்பாராத வகையில் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கவும். குரு பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் இதுவரை இருந்த போட்டிகள் விலகி சிறப்பான முன்னேற் றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளை வரும் நாட்களில் பெறமுடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்லும் வாய்ப்பும், அதன்மூலம் ஆதாயமும் கிடைக்கும். சஷ்டியன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்துவந்தால் கஷ்டங்கள் குறையும்.

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக இருக்கவேண்டிய காலமாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி, மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வார முற்பாதியில் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் தகுந்த நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கிருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வதால், நிலைமையை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1 ,2-ஆம் பாதங்கள்

குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதும், சூரியன்- செவ்வாய், கேது சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் தடைகளெல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பணவரவுகளில் இருந்த ஏற்ற இறக்கங்கள் விலகி தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்பக் கஷ்டங்கள் விலகி நல்லவை பல நடக்கும். ஜென்ம ராசியில் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியரீதியாக வெளியில் சொல்லமுடியாத பாதிப்புகள், சோம்பல்தனம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் நிம்மதி கிடைக்கும். சந்திரன் இவ்வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், நீங்கள் இந்த நாட்களில் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதைத் தடையின்றி செய்துமுடித்து வெற்றிபெறுவீர்கள். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த பெரிய ஆர்டர் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறமுடியும். சனி பகவானுக்கு எள் தீபமும், துர்கையம்மனுக்கு நெய்தீபமும் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்

இவ்வாரம் சூரியன் 10-ல் செவ்வாய், கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், வார முற்பாதியில் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் தேக்கநிலை இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும் நேரத்திற்கு சாப்பிடுவதும் நல்லது. குரு பார்வை 5, 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் புத்திரர்களால் அனுகூலம் கிட்டும். திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. பெரிய மனிதர்களின் தொடர்புகளால் நீண்டநாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உங்கள் ராசிக்கு ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஏற்றங்களை அடைவீர்கள். செவ்வாய், புதன்கிழமைகளில் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். என்றாலும் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசியாதிபதி குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சஞ்சலத்தை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பல்வேறு மேன்மைகளை அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி நிம்மதி ஏற்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பரத்தைக் குறைத்துக்கொள்ளவும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனைத் தரும். சூரியன்- செவ்வாயுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நெருங்கியவர்கள் உதவிகள் கிடைக்கப்பெற்று அதன்மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங் கள் ஏற்படும். இவ்வாரத்தில் புதன் 9, 10-ல், சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. சந்திரன் ராசிக்கு 10, 11 ஆகிய ராசிகளில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து நிம்மதி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள்மூலம் அனுகூலமான பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு குடும்பத்துடன் இணையமுடியும். பைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் உன்னதமான பலன்களை அடையலாம்.