இந்த வார ராசிபலன் 5-1-2025 முதல் 11-1-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-5-1-2025-11-1-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூராடம்- 3.

செவ்வாய்: பூசம்- 1 (வ).

புதன்: மூலம்- 1.

குரு: ரோகிணி- 3 (வ).

சுக்கிரன்: சதயம்- 1.

சனி: பூரட்டாதி- 1.

ராகு: உத்திரட்டாதி- 2.

கேது: உத்திரம்- 4.

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கும்பம்

5-1-2025 பகல் 2.34 மணிக்கு மீனம்.

ss

7-1-2025 மாலை 5.49 மணிக்கு மேஷம்.

9-1-2025 இரவு 8.46 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக் கான பலனை அடைவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயல்களுக் கும் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களுடைய பொருளாதார நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையோடு செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன், புதன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பழகுகின்ற போது சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்குத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்க

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூராடம்- 3.

செவ்வாய்: பூசம்- 1 (வ).

புதன்: மூலம்- 1.

குரு: ரோகிணி- 3 (வ).

சுக்கிரன்: சதயம்- 1.

சனி: பூரட்டாதி- 1.

ராகு: உத்திரட்டாதி- 2.

கேது: உத்திரம்- 4.

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கும்பம்

5-1-2025 பகல் 2.34 மணிக்கு மீனம்.

ss

7-1-2025 மாலை 5.49 மணிக்கு மேஷம்.

9-1-2025 இரவு 8.46 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக் கான பலனை அடைவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயல்களுக் கும் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களுடைய பொருளாதார நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையோடு செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன், புதன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பழகுகின்ற போது சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்குத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கௌவுரவம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான கணக்குகளை சரிவர பராமரிப்பது மிகமிக நல்லது. ஒரு சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செல விடுவது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதுமூலம் நன்மைகளை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசில விஷயங்களில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் சில நேரங்களில் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் கடினமான பணிகளைக்கூட மிகச்சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். மாணவ- மாணவியர்கள் உங்கள் செயல்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.

ss

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சம சப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தற்போது குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமை யால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். குறிப்பாக வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகலவிதத்திலும் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் ராகு இருப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் இருக்கும் என்றாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்தக் காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக் கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர் கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 6.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் சனி சேர்க்கை பெற்று 5-ல் சஞ்சரிப்ப தாலும், 3-ல் சூரியன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தாலும் நீங்கள் மேற் கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடனிருப்ப வர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவ மான நிலையினை எட்டுவீர்கள். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலமும், எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்கக் கூடிய திறமையும் தற்போது உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் குறையும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகளும், போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய ஒரு வாய்ப்புகளும் ஏற்படும். குரு வக்ரகதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் சனி சஞ்சரிப்ப தால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப் பதை அனுபவிக்க இடையூறு கள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் இக்கட் டான நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தி யாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடி களைச் சமாளிக்கலாம். தொழில், வியாபாரத்தில் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி நிமித்த மாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் நல்ல பலன்களை அடைய தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தனகாரகன் குருபகவான் 6-ல் இருந்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினைகள் குறைவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் வெற்றியடையும். குறிப்பாக நீங்கள் எதிர்பார்த்த அரசுவழி உதவிகளைத் தற்போது பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக் கூடிய நேரமாகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகுவதால் வளமான பலன்களைப் பெறக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 10, 11.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் அனுசரித்து செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்க முடியும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் ஏற்படும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூல மான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய சிக்கல்களுக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக அரசுவழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்க ளுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங் கள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்கள் மீது இருந்த பழிச்சொற் கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவி யர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள விஷயங்களுக்கு நேரத்தை செலவிட வேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, விநாயகருக்கு சூரை தேங்காய் உடைப்பதுமூலம் அனுகூலங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியும் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பும் உண்டு. தொழில் நிமித்தமாக உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியரீதி யாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய அனு கூலங்களை அடைவீர் கள். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, துர்க்கையம்மனை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10, 11.

bala100125
இதையும் படியுங்கள்
Subscribe