முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன் : பரணி- 2.
செவ் : பூசம்- 3.
புதன் : ரேவதி: 3.
குரு : மிருகசீரிடம்- 2.
சுக்கிரன் : உத்திரட்டாதி- 2.
சனி : உத்திரட்டாதி- 1.
ராகு : பூரட்டாதி- 4.
கேது : உத்திரம்- 2.
கிரக மாற்றம்:
7-5-2025 மேஷ புதன் அதிகாலை 4.08 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
5-5-2025 பகல் 2.01 மணிக்கு சிம்மம்.
7-5-2025 இரவு 12.57 மணிக்கு
கன்னி.
10-5-2025 பகல் 1.42 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடன்பிறந்த வரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தனக்காரகன் குருபகவான் 2-லும், 6-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில விஷயங்களில் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக மனஅமைதி குறைவு உண்டாகும். சக ஊழியரிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. பதவி உயர்வை எதிர்பார்ப்பவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய யோகம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மாற்றுத் திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சனி, ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது விலகி வளமான பலன்களை அடைவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ராசியாதிபதி புதன் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க லாம். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத் தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடினமான பணியைகூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக் கூடிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதும் வளமான பலன்களைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இருக்குமிடத்தில் உங்களுடைய பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய நேரமாகும். பெரிய மனிதர் களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வேலைப்பளு எல்லாம் தற்போது குறைந்து சுமூகமானநிலை உண்டாகும். பிள்ளைகள்வகையில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8, 9.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, ராகு, சுக்கிரன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரரீதியாக தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டும். அடுத்த வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தற்போதைக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் சில நாட்கள் நீங்கள் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைக்க வேண்டும். மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களால் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய ஒரு நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மனமகிழ்ச்சி ஏற்படும். ஒருசிலருக்கு அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். சக ஊழியருடைய ஆதரவானது மிகமிகச் சிறப்பாக இருக்கும். பெண்கள்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். பொதுவாக முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8, 9.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி ஒன்று உங்களைத்தேடி வரக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் தற்போது குறைந்து வளமான பலன்களை பெறக்கூடிய காலமாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களுடைய தேவைகளைக் குறித்த நேரத்தில் பூர்த்திசெய்து நல்லபெயர் எடுப்பீர்கள். சில விஷயங்களில் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றங்களை அடையக்கூடிய காலமாகும். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சக ஊழியருடைய ஆதரவானது உங்களுக்கு கிடைப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் எல்லாம் தற்போது குறையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் குறைவதால் மனநிம்மதியுடன் பணிபுரியக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் அது மிகையாகாது. ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் விரும்பிய மேற்படிப்பு வாய்ப்பையும் அடைவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நற்பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் சனி, ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் கள் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் நிலவும். உடன்பிறந்தவர் களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். பணவரவில் ஏற்ற- இறக்கமானநிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக தற்போது நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியானமுறையில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு தற்போது செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக அடுத்த வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத் தோடு இருக்கவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப்பெற்று பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதல்களை வரும் நாட்களில் பெறமுடியும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி, ராகு சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் மிகவும் சாதகமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது ஒரு வளமான பலனைத்தரும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேக்கங்கள் விலகி நல்ல முன்னேற் றத்தை அடையக்கூடிய அமைப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டிகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்டமுடியும். உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 10.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குறிப்பாக அடுத்த வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு சிறப் பான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் எல்லாம் வரும் நாட்களில் எளிதில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் உங்களுடைய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் சற்று கவனத் தோடு இருந்தால் நல்ல மதிப்பெண்களைப்பெறக் கூடிய நேரமாகும். உடல் மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது, வீண் பேச்சை குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வேலை இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது உத்தமம். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.