முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, தபால் பெட்டி எண்: 2255,
வடபழனி, சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 3.
செவ்வாய்: சித்திரை- 4.
புதன்: சித்திரை- 2.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: மூலம்- 1.
சனி: திருவோணம்- 1.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 16 (2-11-2021)
துலா புதன். (காலை 9.54).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்
1-11-2021 மாலை 6.39 மணிக்கு கன்னி.
3-11-2021 இரவு 8.53 மணிக்கு துலாம்.
5-11-2021 இரவு 9.05 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் தேவைகேற்றவாறு பணவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், நீண்டநாள் ஆசைகளும் நிறைவேறும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய ராசிகளில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் உங்களின் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். சனிக் கிழமை சந்திராஷ்டமம் இருப்பதால், அன்று சற்று பொறுமைடன் செயல்படுவது நல்லது. ராசியாதிபதி செவ்வாய்- சூரியனுடன் இனைந்து 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற் குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால். ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் தேடிவரும். நீங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல்கள்கூட தவறாக முடியும் சூழ்நிலை ஏற்படும் என்பதால், எதிலும் சிந்தித்து செயல்படவும். 10-ல் குரு, சனி இனைந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங் களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் வேலையையும் நீங்களே சேர்த்துச் செய்யவேண்டிய சூழ்நிலை நிலவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கடந்தகால வம்பு வழக்குகளில் தற்போது தீர்வுக்காக முயற்சித்தால் ஒரு நல்லமுடிவு கிடைக்கும். தனகாரகன் குரு 9-ல் சனி சேர்க்கைபெற்று நீசபங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையும் யோகமுண்டு. குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு தற்போது திருமண முயற்சி எடுத்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி ஏற்படலாம், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அமைப்பும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் யோகமும் உள்ளது. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்கள்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய யுக்தியைக் கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, தபால் பெட்டி எண்: 2255,
வடபழனி, சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 3.
செவ்வாய்: சித்திரை- 4.
புதன்: சித்திரை- 2.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: மூலம்- 1.
சனி: திருவோணம்- 1.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 16 (2-11-2021)
துலா புதன். (காலை 9.54).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்
1-11-2021 மாலை 6.39 மணிக்கு கன்னி.
3-11-2021 இரவு 8.53 மணிக்கு துலாம்.
5-11-2021 இரவு 9.05 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் தேவைகேற்றவாறு பணவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், நீண்டநாள் ஆசைகளும் நிறைவேறும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய ராசிகளில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் உங்களின் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். சனிக் கிழமை சந்திராஷ்டமம் இருப்பதால், அன்று சற்று பொறுமைடன் செயல்படுவது நல்லது. ராசியாதிபதி செவ்வாய்- சூரியனுடன் இனைந்து 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற் குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால். ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் தேடிவரும். நீங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல்கள்கூட தவறாக முடியும் சூழ்நிலை ஏற்படும் என்பதால், எதிலும் சிந்தித்து செயல்படவும். 10-ல் குரு, சனி இனைந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங் களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் வேலையையும் நீங்களே சேர்த்துச் செய்யவேண்டிய சூழ்நிலை நிலவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கடந்தகால வம்பு வழக்குகளில் தற்போது தீர்வுக்காக முயற்சித்தால் ஒரு நல்லமுடிவு கிடைக்கும். தனகாரகன் குரு 9-ல் சனி சேர்க்கைபெற்று நீசபங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையும் யோகமுண்டு. குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு தற்போது திருமண முயற்சி எடுத்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி ஏற்படலாம், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அமைப்பும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் யோகமும் உள்ளது. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்கள்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய யுக்தியைக் கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றமான நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால், பணவரவுகள் சிறப்பாக அமையும். நெருங்கியவர்கள்மூலம் உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சூரியன்- செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 10-ஆம் அதிபதி குரு 8-ல் சனி சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் நவம்பர் மாதம் ஏற்படும் குருப் பெயர்ச்சிமூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனமாக செயல்படுவது நல்லது. வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சனி பகவான் வழிபாடும், குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடும் நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் குரு நீசம்பெற்றாலும், உடன் சனி அமைந்து நீசபங்க ராஜயோகம் உண்டாகி உள்ளதால் பொருளாதாரரீதியாக வளமான பலன்களை வரும் நாட்களில் பெறுவீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு கள்மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப் பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெற்று சுபகாரியங் கள் கைகூடும். ராகு 11-ல் சிறப்பாக சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரரீதியாக போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம்காண முடியும். அரசுவழி அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால பொருட் தேக்கங்கள் எல்லாம் குறைந்து தொழிலை விரிவுபடுத்த முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் வரும் நாட்களில் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். சந்திரன் இவ்வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் சிறப்பாக சஞ்சரிப்ப தால் வளமான பலனைப் பெறமுடியும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள்கூட தடைப்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சில் பொறுமை யுடன் இருப்பது சிறப்பு. கேது 5-ல் சஞ்சரிப்ப தால் அஜீரண பாதிப்புகள் ஏற்படலாம்; உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் தனது நட்புகிரகமான செவ்வாய் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத் தெல்லாம் இவ்வாரத்தில் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றிபெற முடியும். சுககாரகன் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்தி ருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் ஈடேறும். பிள்ளைகள் வழியில் நீண்டநாட்களாக இருந்த கவலைகள் விலகி நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தானமான 6-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற் றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்புண்டாகும். வெளியூர்மூலம் ஒரு நல்லசெய்தி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் வாரத் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால், நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்படு வீர்கள். சுக காரகன் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதா லும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. பூர்வீக சொத்து வழியில் இருந்த தீர்க்கமுடி யாத சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிந்து நிம்மதி ஏற்படும். உங்கள் கணவுகள் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக் கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். சந்திரன் இவ்வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் செய்யும் செயல் களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித் துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்ப தாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருட்தேக்கங் கள் குறைந்து உங்களது கடன் சிக்கல் குறையும். சிவ பெருமானையும் முருகப் பெருமானை வழிபட்டால் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் இனைந்து சஞ்சரிப்பதால், எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு குடும்பத்தில் உள்ளவர் களையும் அக்கம் பக்கத்தினரையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமலிருப்பது நல்லது. கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டா கும். குரு- சனி இருவரும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பொருளாதார ரீதியாக தேக்க நிலை, வரவேண்டிய பண வரவுகள் தாமதப்படும் நிலை, இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். கொடுக் கல்லி வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்து வதைத் தவிர்க்கவும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால், குறிப்பாக இந்த நாட்களில் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்படும் காலம் என்பதால், தற்போது கிடைப்ப தைப் பயன்படுத்திக்கொண்டால் நவம்பர் மாதம் ஏற்படும் குருப் பெயர்ச்சிக்குப்பின்பு உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிடைக் கும். உடன் பணிபுரிவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானுக்கு எள்தீப மேற்றி நீலநிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கவலைகள் தீரும்; மகிழ்ச்சி கூடும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சனியும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பணவரவுகள் சிறப்பாகவும் தேவைக்கேற்றவாறும் இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் ஆசை நிறைவேறும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான சூழ்நிலை அமையும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றா லும், குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் அனைத்துப் பிரச்சினைகளும் விலகி ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், மேல குறிப்பிட்ட நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முடிந்தவரை ஆடம்பரத் தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி யைப் பெருக்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான இடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்து கடன் பிரச்சினைகள் குறையும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத் திலும் வெற்றிபெறுவதோடு, எதையும் சமாளித்து முன்னேற முடியும். ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பெண் உறவினர்கள்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய ராசிகளில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட இந்த நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 10-ஆம் அதிபதி புதன் இவ்வாரத்தில் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தன லாபத்தைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சிறப் பாக இருக்கும். வராது என்று நினைத்த கடன்களும் எதிர்பாராத வகையில் வசூலாகி மகிழ்ச்சியளிக்கும். சூரியன், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படு வதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் கவனத் துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர் களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகளும், திறமை களுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். என்றா லும் ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது, எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கேது 11-ல் இருப்பதால் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற குழப்பங்கள், காரியத் தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய ராசிகளில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்ப தால், உங்கள் செயல்களுக்கு சாதகப்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தி யோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்க் கும் உயர்வுகளைப் பெறுவீர்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழி பட்டுவந்தால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி, குரு சேர்க்கைபெற்று விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலையே இருக்கும். என்றாலும் உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்மூலம் ஒரு அனுகூலமான செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை நிலவும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம் இருப்பதால், நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது, புதிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட இந்த நாட்களில் எதிர்பாராத ஒருசில அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளி களையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் எதிர்பார்க்கும் அனுகூலங் களை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். துர்க்கை வழிபாட்டையும், ஏகாதசி நாளில் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண் டால் முன்னேற்றங்கள் ஏற்படும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குரு, சனி சேர்க்கை பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால நெருக்கடிகள் விலகி பொருளாதாரரீதியாக சிறப்பான பலனைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றி நிம்மதியடைவீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய நாட்களாக இவ்வாரம் இருக்கும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வாழ்வில் ஏற்றங் களை அடைவீர்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் சற்று குறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்தி லும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர் கள். 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது நிதானமாக இருப்பது நல்லது. குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரனும் 8-ல் சஞ்சரிப்பதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம்காண முடியும். சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.