முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 3.
செவ்வாய்: பூரம்- 2.
புதன்: மகம்- 3.
குரு: பரணி- 2.
சுக்கிரன்: மகம்- 2 (வ).
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- தனுசு
31-7-2023 இரவு 12.15 மணிக்கு மகரம்.
2-8-2023 இரவு 11.25 மணிக்கு கும்பம்.
4-8-2023 இரவு 11.17 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தக்கநேரத்தில் சிறப்பான பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருபார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் ராகு, சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். என்றாலும் ஒவ்வொரு செயலிலும் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலமாக கடினமான பணிகளைகூட அவர்கள் உதவியுடன் எளிதில் செய்துமுடிக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் பணியில் திறம்பட செயல்படக்கூடிய அளவுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் விரும்பும் இடமாற்றங்களை பெற்று கடந்தகாலங்களில் குடும்பத்தைவிட்டு விலகி இருந்தவர்கள் தற்போது குடும்பத்துடன் இணையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். கடந்தசில நாட்களாக இருந்த குழப்பங்கள் எல்லாம் தற்போது குறைந்து பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மிகச்சிறப்பான பலன்களை அடையும் வாய்ப்பும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டு. துர்க்கையம்மனை தரிசிப்பது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியாதிபதி சுக்கிரன்- புதனுடன் 4-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகி மனமகிழ்ச்சி உண்டாகும். மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வீண்செலவுகள் குறையும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் உங்கள் கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக் கொண்டால் அனைத்தையும் எதிர்கொண்டு அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும் என்றாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். அதிகாரியிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் வீண் குழப்பம் எளிதில்முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை ஏற்படும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைத்து நன்மையை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் குருபார்வையுடன் இருப்பது மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு- ராகு லாப ஸ்தானத் தில் இருப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் சிறப் பான பலன்களைப்பெற்று அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, கடந்த காலங்களில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழிலில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒரு சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சித் தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத் திற்காக முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுடைய மதிப்பு, மரியாதைகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஒரு அனுகூலத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். செவ்வாய், புதன்கிழமைகளில் வீண்குழப்பங்கள், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிவன் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதுமூலம் கெடுதிகள் குறையும்
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சூரியன், அஷ்டம ஸ்தானத் தில் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நேரத்திற்கு சாப்பிடுவதும் உடல்நலத்துக்கு நல்லது. சுக்கிரன்- புதன் 2-ல் இருப்பதால் தக்க நேரத்தில் உரிய நபர்கள்மூலம் ஒருசில பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொள்வது தற்போதைக்கு உத்தமம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் தவறவிடாமல் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. சட்டரீதியாக தொழிலில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் உங்களுடைய கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது முடிந்த வரை தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது சிறப்பு. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் அதன்காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்வார் கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பக்குவமாக நடந்துகொள்வது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சந்திப்பதால் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக மேற்கொண்ட நாட்கள் இருக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். முருகவழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது சிறப்பு.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் அனைத்து செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு, ராகு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் நன்றாக இருந்து வளமான பலன்களை பெறுவீர். உடல்நிலை சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். பயணங்கள் மூலமாக வளமான பலன்களை பெறுவீர்கள். நவீனமான பொருட்களை வாங்கக்கூடிய யோகங்கள் வரும் நாட்களில் உண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப் பணியை குறித்து நேரத்தில் செய்துமுடிக்கக்கூடிய ஒரு பலமும் சக ஊழியர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களது வேலைப்பளு சற்றுக் குறையக்கூடிய சூழலும் உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியை உங்களுக்குத் தரும். சனிக்கிழமையன்று சற்று அலைச்சல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக் கையுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன்- செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொண்டு சிக்கனமாக இருக்கவேண்டும். குரு- ராகு 8-ல் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒருநிலை ஏற்படும். மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள் தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும் படி இருக்காது. அன்றாட செயல் களில் நீங்கள் மிகவும் கவனமாக கையாண்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் தரக்கூடிய இடையூறு காரணமாக நீங்கள் செய்யக்கூடிய வேலையில் இடைஞ்சல், மன அமைதி குறைவும் ஏற்படும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றல் ஏற்படும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, குருபகவானுக்கு நெய் தீபமேற்றுவது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய், புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்த கடந்தகால சோதனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் தொழில் ஸ்தானமான 10-ல் இருப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதைகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். குருபகவான் 7-ல் அமைந்து ஜென்ம ராசியை பார்ப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப் பாக இருந்து உங்களுக்கு உள்ள கடன்கள் குறைவது மட்டுமில்லாமல் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மன அமைதி ஏற்படுவது மட்டுமில்லாமல் சிலருக்கு உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய மாற்றங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும் மேற்குறிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய முயற்சி எடுத்தால் அதில் ஆதாயங்களை பெறமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய்- சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைமிகுந்த பலன்களை பெறுவீர்கள். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பெண்கள் வழியில் ஒருசில சாதகமான பலன்களை பெறக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒரு சாதகமான பலன்களும், ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவும் கிடைக்கும். குருபகவான் 6-ல் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. அதிக செலவினங்களில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் ராகு இருப்பதால் தொழில், வியாபாரத்தில் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றமுடியும். தொழில் நிறுவனத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அமைப்புகளும் ஒருசிலர் புதிய கிளைகளை நிறுவக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் உங்களிடம் வருவதால் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். சக ஊழியருடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்லநிலையை அடையமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமையில் உங்களின் அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால்முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவையும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு ஒருசில சாதகமான பலன்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துவழியில் பொருளாதார அனுகூலங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும். எந்த ஒரு செயலிலும் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று வரும் நாட்களில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது ஒரு விடுவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்படக்கூடிய பலம் இருக்கும் என்றாலும் அதிகாரியிடம் பேசுகின்றபோது மட்டும் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அணுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பிரத்திங்கராதேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு நிம்மதி குறைவு களை ஏற்படுத்துவார்கள். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளால் தேவையில்லாத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் வேலையாட்கள் செய்யக்கூடிய சில செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல ஒரு வாய்ப்புகளும் லாபங்களும் தடைப்படும். இயந்திரங்கள் பழுதாவதால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் அனுகூல பலன்களை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, செவ்வாய்க் கிழமை விரதமிருப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். புதன், சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள கடந்தகால சோதனைகள் எல்லாம் சற்று குறையும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலை இருக்கும் என்றாலும் தக்கநேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல நிலை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். முக்கிய விஷயங்களை வேலை ஆட்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஒரு பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். கூட்டாளி ஆதரவானது சற்று சாதகமாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய ஒரு நேரமாகும். உடன் இருப்பவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மன நிம்மதி உண்டாகும். உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்கு உள்ள கடந்தகால நெருக்கடிகள் விலகுவது மட்டுமில்லாமல் உடல் உபாதைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே உறவு மிகவும் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளும் பொருளாதார அணுகூலங்களும் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக தற்போது நீங்கள் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டால் அதில் கண்டிப்பாக ஒரு நற்பலன் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் தொழில் நிறுவனத்தில் திறமைவாய்ந்த வேலையாட்கள் இணைவார்கள். அதன் காரணமாக தொழிலை சிறப்பாக செய்து வாடிக்கையாளர்களும் நல்ல பெயர் எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு சிறப்பான ஒரு வாய்ப்பு வரும் நாட்களில் கிடைக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதிகாரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் பூர்த்தியாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உக்கிர தெய்வங்களை வழிபடுவது நல்லது.