இந்த வார ராசிபலன் 30-4-2023 முதல் 6-5-2023 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-30-4-2023-6-5-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 1.

செவ்வாய்: புனர்பூசம்- 2.

புதன்: பரணி- 2.

ff

குரு: அஸ்வினி- 1.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 2.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

சித்திரை 19 (2-5-2023) மிதுன சுக்கிரன் (பகல் 1.49).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

1-5-2023 இரவு 12.20 மணிக்கு கன்னி.

4-5-2023 காலை 9.20 மணிக்கு துலாம்.

6-5-2023 மாலை 3.22 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய 3-ல் வலுவாக அமையப்பெற்று, லாப ஸ்தானத் தில் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் தேவையற்ற இடர்ப்பாடுகளை சமாளிக்க முடியும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பதால் வரும் நாட்களில் தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். கடந்தகால சட்டச் சிக்கல்கள் தற்போது படிப்படியாகக் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்குவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலைசெய்பவர்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உங்களிடம் உண்டு. வெளியூர்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயல் ஈடுபட்டாலும் அதில் அதிகப் படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சனிக்கிழமை மதியத்திற்குப்பிறகு சந்திராஷ்ட மம் தொடங்குவதால் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமை யோடு இருப்பது உத்தமம். சூரியன்- ராகு மற்றும் குரு சேர்க்கைப்பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் பணப் பரிமாற்ற விஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமாகும். முடிந்தவரை எதிலும் சிக்கனமாக இருப்பது வீண் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை சிறிது காலம் தள்ளிவைக்கவும். தொழில், வியாபாரத் தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்கவும். முக்கிய விஷயங்களை வெளியிடங்களில் பேசாமல் இருப்பது சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் கடினமாக உழைத்தாலும் தேவையற்ற பழிச் சொற்களை எதிர் கொள்ளக்கூடிய நேரமென்பதால் உடன் வேலை செய்பவர்களிடம் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் சில அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்க

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 1.

செவ்வாய்: புனர்பூசம்- 2.

புதன்: பரணி- 2.

ff

குரு: அஸ்வினி- 1.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 2.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

சித்திரை 19 (2-5-2023) மிதுன சுக்கிரன் (பகல் 1.49).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

1-5-2023 இரவு 12.20 மணிக்கு கன்னி.

4-5-2023 காலை 9.20 மணிக்கு துலாம்.

6-5-2023 மாலை 3.22 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய 3-ல் வலுவாக அமையப்பெற்று, லாப ஸ்தானத் தில் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் தேவையற்ற இடர்ப்பாடுகளை சமாளிக்க முடியும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பதால் வரும் நாட்களில் தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். கடந்தகால சட்டச் சிக்கல்கள் தற்போது படிப்படியாகக் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்குவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலைசெய்பவர்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உங்களிடம் உண்டு. வெளியூர்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயல் ஈடுபட்டாலும் அதில் அதிகப் படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சனிக்கிழமை மதியத்திற்குப்பிறகு சந்திராஷ்ட மம் தொடங்குவதால் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமை யோடு இருப்பது உத்தமம். சூரியன்- ராகு மற்றும் குரு சேர்க்கைப்பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் பணப் பரிமாற்ற விஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமாகும். முடிந்தவரை எதிலும் சிக்கனமாக இருப்பது வீண் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை சிறிது காலம் தள்ளிவைக்கவும். தொழில், வியாபாரத் தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்கவும். முக்கிய விஷயங்களை வெளியிடங்களில் பேசாமல் இருப்பது சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் கடினமாக உழைத்தாலும் தேவையற்ற பழிச் சொற்களை எதிர் கொள்ளக்கூடிய நேரமென்பதால் உடன் வேலை செய்பவர்களிடம் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் சில அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், ராகு, குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த உடல் உபாதைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த வீண் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் எதிர்பார்த்த வரவேற்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களின் கடன் பிரச்சினைகள் குறைவது மட்டுமல்லாமல் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளையும் எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருட்தேக்கங்கள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் சவால்கள் நிறைந்த ஆர்டர்களை எளிதில் முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்ப தால் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலப்பலன் உண்டாகும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வருமென்றாலும் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. குரு பகவான் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமை யோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படவும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதும், ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நேரடியாக செயல்படுவதும் நன்மை தரும். வேலையாட்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. பெரிய மனிதர் களுடைய ஆதரவு கிடைக் கும் என்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருந்தாலும் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். சக ஊழியர் களை சற்று அனுசரித்துச் செல்வது, உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருப்பது நன்மை தரும். பெண்கள் வழியில் தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்ப தால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர் கள். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற் கொண்ட வர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கடந்தகால வீண் விரயங்கள் குறையும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலங்கள், மங்களகரமான சுப காரியங் கள் கைகூடக்கூடிய வாய்ப்பு கள் வரும் நாட்களில் உண்டு. ராசிக்கு லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத அனுகூலங் களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படு மளவுக்கு உயர்வான நிலை யினை எட்டமுடியும். உங்களுக்கிருந்த சட்ட ரீதியான சிக்கல்கள் எல்லாம் தற்போது முழுமையாகக் குறைந்து மகிழ்ச்சி உண்டா கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மன நிறைவை அடைவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகி எடுக்கும் பணிகளை எளிதில் செய்துமுடிக்க முடியும். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை வரும் நாட்களில் பெறுவது மட்டுமல்லாமல், கடந்தகால நிலுவைத் தொகைகள் தற்போது கிடைத்து நிம்மதி உண்டாகும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.

dd

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் சனிபகவான் வலுவாக சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். கடந்த காலங்களில் இருந்துவந்த வம்பு, வழக்குகள் வரும் நாட்களில் முழுமையாக விலகி மன அமைதி உண்டாகும். சுக்கிரன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்து வகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன், ராகு, குரு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச் செல்வது, உடல் ஆரோக் கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, பிள்ளைகள்வழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். தொழில், வியாபாரத் தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படி யான லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வ தைத் தவிர்க்கவும். செவ்வாய், புதன் கிழமைகள் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். சனி 5-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் குறையும். 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் 2-ஆம் தேதிமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம், பெண்கள்வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். சூரியன், ராகு 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து நல்ல லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. கடந்த காலங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறைந்து தொழி-ல் நல்ல வளர்ச்சி ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எடுத்த பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பு, அனைத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். படித்து முடித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவனத் தி-ருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தாலும், சனி 4-ல் சஞ்சரிப்பதாலும் தேவை யற்ற நெருக்கடிகள் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். குருபகவான் 6-ல் உள்ளதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைக்காது. மாதக்கோளான சூரியன், ராகு சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படுவதும், மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்காமல் உங்கள் கண்காணிப்பிலேயே எல்லா செயலையும் செய்தால் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒரு பெரிய மனிதனுடைய ஆதரவு தக்கநேரத்தில் கிடைப்பதால் வீண் பிரச்சினையி-ருந்து தப்பித்து நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நன்றாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் வேலை செய்பவர்கள் செய்யும் இடைஞ்சல்களால் உங்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரிக்கும். உங்கள்மீது வீண் பழிச் சொற்கள் வரக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக உள்ளதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த செய-லும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலை சிறப் பாக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்களுக்கிருந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி மன நிம்மதி உண்டாகும். கடந்தகால கடன் தொல்லைகள்கூட குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள்வகையில் இருந்துவந்த மனக் கவலைகள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கெல்லாம் தற்போது நல்ல சன்மானங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். ராசிக்கு 5-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பங்காளியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். பொதுவாக வெளிநபரிடம் பேச்சைக் குறைக் கவும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய காலமாகும். தேவையில்லாத நெருக்கடிக ளால் மன நிம்மதி குறையும். இருந்தும் அனுபவிக்கமுடியாத அளவுக்கு வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களது அமைதியைக் குறைப்பார்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டு உங்கள் கையிருப்பு குறையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 6-ல் இருப்பதால் எந்தவித பிரச்சினையையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சிலர் செய்யும் இடர்ப்பாடுகளால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். உங்கள் உழைப்புக்கான பலனையடைய தடங்கல்கள் உண்டாகும். வண்டி, வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக தற்போது நீங்கள் நிதானத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் திடீர் உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் மறையும். வேங்கடேசப் பெருமாள் வழிபடுவது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்ப தால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் நீங்கள் தனித் திறமையோடு செயல்பட்டு எதையும் சமாளிப்பீர்கள். சுக்கிரன் இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்வகையில் கிடைக்கக்கூடிய உதவி காரணமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. உங்களது ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். உங்கள் உழைப்பின் காரணமாக அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருந்தாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அனைத்தையும் சிறப்பாகச் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதால் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று தன ஸ்தானமான 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் கடந்தகாலப் பிரச்சினைகள் முழுமையாகக் குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். தேவையில்லாத அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மிகவும் நெருங்கியவர்களே நெருக்கடிகளைத் தருவார்கள். செவ்வாய்க்கிழமை முதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறித்த நேரத்தில் எடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடித்து நல்ல லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் சில நேரங்களில் ஒத்துழைக்காவிட்டாலும் எதையும் சிறப்பாகக் கையாள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் வரும். குறிப்பாக குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்..

bala050523
இதையும் படியுங்கள்
Subscribe