இந்த வார ராசிபலன் 30-1-2022 முதல் 5-2-2022 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-30-1-2022-5-2-2022

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026.

தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 2.

செவ்வாய்: மூலம்- 3.

புதன்: உத்திராடம்- 2.

குரு: சதயம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 2.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

தை 22 (4-2-2022) புதன் வக்ர முடிவு காலை 9.41 மணிக்கு.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

31-1-2022 அதிகாலை 5.46 மணிக்கு மகரம்.

2-2-2022 காலை 6.45 மணிக்கு கும்பம்.

4-2-2022 காலை 10.02 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய், சப்தமாதிபதி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்ப தால், சகலவிதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி ஏற்படும் நிலை இவ்வாரத்தில் உண்டு. நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையமுடியும். கடந்த சில நாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து மற்றவர்களுக் குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற முடியும். பிள்ளைகள்வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ராகு 2-ல் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். தொழிலில் நல்ல வளர்ச்சியடையும் யோகமுண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத் துடன் இணையும் வாய்ப்புண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் சுபச்செய்திகள் தேடிவரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட்டால்தான் நெருக்கடிகளை சமாளிக்கமுடி யும். ராகு ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் சில நேரங் களில் தன்னிலை மறந்து செயல் படுவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதையும் சிந்தித்துப் பேசுவது நல்லது. வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். 10-ல் சஞ்சரிக்கும் குரு பொருளாதாரரீதியாக சில ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தினாலும், 2, 4 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால், எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களுடைய உதவியால் ஒருசில ஆதாயங் களை அடைவீர்கள். ஞாயிற் றுக்கிழமை தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக இருப்பதால் புதிய செயல்களில் ஈடுபட்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக் கும். தொழில்ரீதியாக சில ஆதாயங்களை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் உண்டா கும். ஓரிரு மாதங்களுக்கு இருக்கும் வாய்ப்பு களைத் தக்கவைத்துக் கொண்டால் விரைவில் நல்ல வளர்ச்சியை அடையமுடி யும். வேலைக்குச் செல்பவர்கள் தற்போதிருக் கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன் படுத்திக் கொள்வது நல்லது. அம்பிகையையும், முருகப் பெருமானையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

மிதுனம்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026.

தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 2.

செவ்வாய்: மூலம்- 3.

புதன்: உத்திராடம்- 2.

குரு: சதயம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 2.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

தை 22 (4-2-2022) புதன் வக்ர முடிவு காலை 9.41 மணிக்கு.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

31-1-2022 அதிகாலை 5.46 மணிக்கு மகரம்.

2-2-2022 காலை 6.45 மணிக்கு கும்பம்.

4-2-2022 காலை 10.02 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய், சப்தமாதிபதி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்ப தால், சகலவிதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி ஏற்படும் நிலை இவ்வாரத்தில் உண்டு. நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையமுடியும். கடந்த சில நாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து மற்றவர்களுக் குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற முடியும். பிள்ளைகள்வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ராகு 2-ல் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். தொழிலில் நல்ல வளர்ச்சியடையும் யோகமுண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத் துடன் இணையும் வாய்ப்புண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் சுபச்செய்திகள் தேடிவரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட்டால்தான் நெருக்கடிகளை சமாளிக்கமுடி யும். ராகு ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் சில நேரங் களில் தன்னிலை மறந்து செயல் படுவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதையும் சிந்தித்துப் பேசுவது நல்லது. வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். 10-ல் சஞ்சரிக்கும் குரு பொருளாதாரரீதியாக சில ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தினாலும், 2, 4 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால், எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களுடைய உதவியால் ஒருசில ஆதாயங் களை அடைவீர்கள். ஞாயிற் றுக்கிழமை தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக இருப்பதால் புதிய செயல்களில் ஈடுபட்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக் கும். தொழில்ரீதியாக சில ஆதாயங்களை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் உண்டா கும். ஓரிரு மாதங்களுக்கு இருக்கும் வாய்ப்பு களைத் தக்கவைத்துக் கொண்டால் விரைவில் நல்ல வளர்ச்சியை அடையமுடி யும். வேலைக்குச் செல்பவர்கள் தற்போதிருக் கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன் படுத்திக் கொள்வது நல்லது. அம்பிகையையும், முருகப் பெருமானையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். தனகாரகன் குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் முன்னேற்றங் களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் ஏற்படும் சிறுசிறு மறைமுக எதிர்ப்பைக்கூட திறமை யாகக் கையாண்டு நற்பலனை அடைவீர்கள். ராசியாதிபதி புதன் வக்ரகதியில் சூரியன் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால், உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, மனைவியின் ஆரோக்கியத் திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. பயணங் களால் அலைச்சல் ஏற்படும் என்பதால், முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட் களில் எதிர்பாராத அனு கூலங்கள் ஏற்படும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங் கள் தாமதமாகும் என்பதால், கவனமாக செயல் படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பொருட்தேக்கங்கள் இன்றி லாபகரமான பலன்களை அடைவீர்கள். அரசு அதிகாரி களிடம் தொழில் விஷயமாக பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வேலை கிடைக்கும். பிரதோஷ நாளில் சிவ வழிபாடும், புதன்கிழமை விஷ்ணு வழிபாடும் செய்வது நல்லது.

weekrasi

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து 6-ல் சஞ்சரிப்பதால், சில நெருக்கடி கள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் இருப்ப தால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் நன்மை நடக்கும் வாய்ப்புண்டு. சூரியன், சனி 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பல்வேறு வளமான பலன்களை அடையும் வாய்ப் புண்டு. தொழில்ரீதியாக ஒருசில அனுகூலங் களை அடைவீர்கள் என்றாலும், அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்கள் தகுந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. முடிந்தவரை தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். நீங்கள் உங்களது பணியில் கவனமாக செயல்பட்டால்தான் எடுத்த வேலையை செய்துமுடிக்க முடியும். சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது நற்பலன் தரும். தை அமாவாசை நாளில் முன்னோர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன்- சனியுடன் இணைந்து 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். குரு சாதகமாக சஞ்சரிப்பதால், பணவரவுகள் அமோகமாக இருந்து எல்லாவகையிலும் சுபிட்சமாக இருப்பீர்கள். வீடு, மனை வாங்கும் உங்களுடைய நீண்டநாள் ஆசைக்கு தற்போது முயற்சித்தால் அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான செவ்வாய், சுக்கிரன் இணைந்து 5-ல் இருப்பதால்- சிறப்பான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருப்ப தால் மிக அனுகூலமான பலன்களை அடையமுடியும். ஆரோக்கியம் சிறப் பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் விருத்திக்காக எடுக்கும் அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். வங்கிமூலம் எதிர்பார்த்த பண உதவிகள் தக்கநேரத்தில் வரும். கடந்தகாலப் பொருட் தேக்கங்கள் விலகி நீண்டநாளைய கடன்களைக்கூட எளிதில் பைசல் செய்யமுடியும். தொழிலுக்காக நவீன கருவிகள் வாங்கும் வாய்ப்பேற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், எதிர்பார்த்த நீண்டநாள் சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். சுக்கிரன் 4-ல், ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கமுடியும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையாக இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர் களுடைய ஆதரவு நன்றாக இருப்பதால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். வாகனங் கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், எதில் ஈடுபட்டாலும் ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. தொழில்ரீதியாக தூரப் பயணங்கள் மேற்கொள்ளும் நிலையும், அதன்மூலம் வீண் செலவுகளும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய்தீபமேற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியடையும் யோகமுண்டு. நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். வசதி வாய்ப்புகளை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வாகனங்களில் பொறுமையுடன் செல்வது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் எளிதில் வெற்றிகிடைக்கும். திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபம் பெறும் யோகமுண்டு. அரசுவழியில் ஆதாயங்களை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லையென்றாலும், நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர் களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங் களுக்கு தற்போது முயற்சித்தால் அனுகூலங்கள் ஏற்படும். பிரதோஷ நாளில் சிவ வழிபாடும், சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும் சிறப்பான பலன்களைத் தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பணவரவுகள் அற்புத மாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். வாங்கிய கடன்களை பைசல் செய்யும் வாய்ப்பும், சேமிக்கக்கூடிய அளவுக்கு பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையாக இருப்பது நல்லது. ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. குரு பார்வை 8, 10, 12 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய செயல்களில் ஈடுபட்டு அதில் அனுகூலங்களை அடையும் வாய்ப்பும் உண்டு. ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டு. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் கள் கிடைக்கும். வேலையாட்கள் சிறப்பாக செயல்படுவதால் போட்ட முதலீட்டைவிட அதிகபடியான லாபங்களை அடைவீர்கள். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் அவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத் தலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்புண்டு. மகாலட்சுமியை தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

கடுமையான நெருக்கடியில் இருக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உற்றார்- உறவினர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். சிலருக்கு குடும்பத்தில் தேவையற்ற வகையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றா லும், குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். திருமணம் சார்ந்த முயற்சிகளைத் தற்போது செய்தால் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்புகளை முடிந்தவரை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகளும் புதிய ஆடர்களும் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமான், நந்தி வழிபாட்டை மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, சூரியன் சஞ்சரிப்ப தால் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருக்கவும். ராகு 5-ல் சஞ்சரிப்ப தால் நேரத்திற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளவும். தனகாரகன் குரு 2-ல் வலுவாக இருப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பிரச்சினைகள் இருக்காது. எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் பலம் உண்டு. ஆரோக்கியம் எப்படியிருந்தாலும் எதிலும் தைரியத்துடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் பணியைச் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அன்றாட செயலில் அதிகப்படி யான அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் பொருட்தேக்கங்கள் இன்றி லாபகரமான பலன்கள் கிடைக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் எடுத்த பணியை முடிக்க நேரடியாக வேலைசெய்ய வேண்டிருக்கும். அதிகப்படியான அலைச்சலால் ஓய்வு நேரம் குறையும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபங்களைப் பெற்று கடந்தகால கடன் பிரச்சினைகள் குறையும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக நல்ல செய்தி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்குமென்றாலும், அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிவ வழிபாடு செய்வதாலும், தை அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வதாலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. இதனால் எதிர்பாராத பொருளாதார மேன்மைகள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்த கவலைகள் மறைந்து நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு தக்க நேரத்தில் கிடைப்பதால் படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சற்று தேக்கநிலை இருந்தாலும் கூட்டாளிகளின் ஆதரவால் அனுகூலங்களை அடையமுடியும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை ஈட்டமுடியும். தற்போதைக்கு இருக்கும் சிறு வாய்ப்பைக்கூட உதாசீனபடுத்தாமல் பயன்படுத்திக் கொண்டால் ஓரிரு மாதங் களில் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற் கான சன்மானத்தை அடையமுடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப் பிடிப்பது, துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதால், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வீடு, மனை வாங்கும் உங்களுடைய ஆசைகள் தற்போது பூர்த்தியாகும். சனி, சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகச்சிறப்பான பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டும் யோகமுண்டு. கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். ராகு 3-ல் இருப்பதால் புதிய செயல்களில் ஈடுபட்டு ஆதாயத்தை அடைவீர்கள். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். பூர்வீக சொத்து வழியாக அனுகூலமான செய்தி வரும் நாட்களில் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடை பெறும். தொழில்ரீதியாக புதிய யுக்திகளைப் பயன்படுத்தி அதிக லாபத்தை அடையமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வங்கிமூலம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் நாடிவரும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி, அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது. தை அமாவாசை நாளில் முன்னோர் வழி பாட்டைக் கடைப்பிடிக்கவும்.

bala040222
இதையும் படியுங்கள்
Subscribe