முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 4.
செவ்வாய்: அஸ்வினி- 2.
புதன்: மிருகசீரிடம்- 3.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: ரோகிணி- 3.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
3-7-2022 காலை 6.30 மணிக்கு சிம்மம்.
5-7-2022 மாலை 4.50 மணிக்கு கன்னி.
7-7-2022 இரவு 12.20 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சூரியன் புதனுடன் 3-ல் சஞ்சரிப்பதால், முயற்சியில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். சுக்கிரன் 2-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத தனவரவால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட உணர்ச்சிவசப்படும் சூழல் இருப்பதால், சூழ்நிலைக்குத் தக்கவாறு முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் தொழில்ரீதியாக இருக்கும் நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடைவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை வரும் நாட்களில் அடையும் யோகமுண்டு. புதன் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். தனகாரகன் குரு லாப ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வரவுகள் ஏற்பட்டு எல்லாவகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதுடன், சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் விலகி மங்கள நிகழ்வுகள் நடப்பதற்கான யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவுக்கு அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக நவீனகரமான கருவிகளை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து நிம்மதியடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைக்கும். உங்களின் கடந்தகால பிரச்சினைகள் முழுமையாக விலகும். குடும்பத்தில் நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனநிம்மதி உண்டாகும். இவ்வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய செய்திகள் கிடைக்கும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தால் தீபமேற்றுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். ஜென்ம ராசியில் புதன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடையும் திறமை உங்களுக்குண்டு. குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமுடன் இருந்தால் நிலைமையை சமாளிக்கமுடியும். அவசரப்பட்டு பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை எதிர்பார்க்காமல், எந்த விஷயத்திலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தாலே வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறும் வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியரீதியாக வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். மகாலட்சுமிக்கு அர்ச்சனை, அபிஷே கம் செய்வது, சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் சங்கடங் கள் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு செவ்வாய் 10-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் பெயர், புகழ் மேலும் கூடும் வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை, குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சியான நிகழ்ச்சி கள் அரங்கேறும் நிலை ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எல்லாவகையிலும் அனுகூலங்கள், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் ஏற்படும். உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்குக்கூட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உங்களுடைய வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை வரும் நாட்களில் பெறும் வாய்ப்புண்டு. வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, சிவத் தலங்களுக் குச் சென்றுவருவது உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிநாதன் சூரியன் புதனுடன் 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக் கும். கேது 3-ல், சுக்கிரன் 10-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்படும். ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும், சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்தையும் எதிர்கொள்ளும் திறமை ஏற்படும். உங்கள் சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளை சமாளித்து வளமான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நன்று.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், சூரியன் சேர்க்கைபெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக காரகன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் எதிலும் தெம்போடும், சுறுசுறுப்போடும் செயல்படுவீர்கள். செவ்வாய், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது, உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவுகளுடன் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் வருகின்ற நாட்களில் கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் விலகி குடும்பத்தில் நிம்மதியுண்டாகும். வயது மூத்தவர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதில் பைசல் செய்யமுடியும். இவ்வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. சஷ்டியன்று விரதமிருந்து முருக வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால்தான் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் புதன், சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் பிரச்சினைககள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது, மற்றவர்கள் சொல்வதற்கு செவிசாய்க்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முதலீட்டை எடுக்கமுடியும். எந்தவொரு முடிவெடுப்பதென்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகளின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது நல்லது. உடன் வேலைசெய்பவர்களிடம் கவனமாக செயல்பட்டால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலுக்குமான ஆதாயத்தைப் பெறக்கூடிய யோகமுண்டு. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் 6-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகாரிய முயற்சிகளில் வெற்றி, உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். இவ்வாரத்தில் சூரியன், புதன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த வம்பு, வழக்குகள் விலகி எதிலும் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். நீண்டநாட்களாக நீங்கள் மேற்கொண்ட அனைத்து செயல்களுக்கும் தற்போது பிரதிபலன் கிடைத்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் புதிய ஆர்டர்கள் கிடைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் வியக்கத்தக்க அளவுக்கு நற்செய்திகள் கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையினை எதிர்கொள்ள வேண்டிய நேரமாகும். செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர் களிடம்- குறிப்பாக உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேற்றுமைகள் ஏற்படும். நீங்கள் பொறுமையாக செயல்பட்டால் வீண் வம்பு, தேவையற்ற வாக்குவாதங்களை சமாளிக்கமுடியும். சூரியன், புதன் 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டாலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு டன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் கவனத்தோடு செயல்பட்டால்தான் பெரிய இழப்புகள் ஏற்படாமல் போட்ட முதலீட்டையாவது எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தாலும், சில நேரங்களில் நீங்களும் நேரடி யாக செயல்பட்டால்தான் ஆதாயங்களைப் பெறமுடியும். நெருங்கிய நண்பர்களே தேவையில்லாத நெருக்கடிகளை உண்டாக்கு வார்கள். தொழில் விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பதன்மூலம் பிரச்சினை கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் உழைப் புக்கான பலனை முழுமையாக அடையமுடி யும். பெருமாள் வழிபாடு, கந்தர் சஷ்டி கவசம் படிப்பது கெடுதியைக் குறைக்கும்.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. சுக்கிரன் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் சில இடர்ப்பாடுகளை எதிர்கொண்டாலும் உற்றார்- உறவினர்களின் ஆதரவால் அவற்றை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை கள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். செவ்வாய், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச் சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு கள் ஏற்படும். வேலையாட்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. வயது மூத்தவர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு தொழில்ரீதியாக இருந்த தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தற்போது சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். பேச்சில் பொறுமையோடு இருந்து பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். குரு 2-ல் சிறப்பாக இருப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் நிறைந்திருக்கும். ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து நிம்மதியுடன் செயல்படமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் விலகி லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புண்டு. நீங்கள் எடுத்த ஆர்டர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடித்து தொழிலை விருத்தி செய்யமுடியும். தொழிலுக்காக அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித் திறமையால் அனைத்தையும் சமாளித்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவது மட்டுமல்லாமல், வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் நிறைவேறும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது உத்தமம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் புதன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலை ஏற்படும். ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்படுவது நல்லது. சூரியன் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், உறவினர்கள்மூலமாக தேவையற்ற குழப்பங் கள் ஏற்படலாம். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தவிர்த்துவிட்டு கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பொறுமை யோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு, உடன் வேலைசெய்பவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். உங்கள் பணியில் பொறுமை யோடு செயல்பட்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.