எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: ரேவதி- 1.

செவ்வாய்: அவிட்டம்- 2.

புதன் : ரேவதி- 1.

Advertisment

குரு: பூரட்டாதி- 3.

சுக்கிரன் : அவிட்டம்- 3.

சனி: அவிட்டம்- 2.

ராகு: கிருத்திகை- 2.

கேது: விசாகம்- 4.

கிரக மாற்றம்:

பங்குனி 24 (7-4-2022) கும்பச் செவ்வாய் (பகல் 3.16).

பங்குனி 25 (8-4-2022) மேஷ புதன் (பகல் 11.59).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

4-4-2022 இரவு 9.01 மணிக்கு ரிஷபம்.

7-4-2022 காலை 9.09 மணிக்கு மிதுனம்.

9-4-2022 இரவு 9.51 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு சமுதாயத்தில் நல்ல நிலையினை அடைவீர்கள். குரு, சுக்கிரன் இணைந்து 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடும். சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான பலன்களை எட்டமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் அமைவார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங் களில் நிதானத்தோடு செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகப் பிரச்சினைகள் விலகுவதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய சூழல், அதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையும் வாய்ப்பும் உண்டாகும். துர்க்கையம்மனை தரிசிப்பது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வதன்மூலம் உங்கள் சங்கடங்கள் விலகி நல்லது நடக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் தனது நட்புவீடான கும்ப ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தற்போதைய நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். ராசிக்கு 2, 5-க்கு அதிபதி புதன், சூரியனுடன் லாப ஸ்தானத் தில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களின் உதவியால் பல்வேறு அனுகூலங்களை அடைவீர்கள். 7-ஆம் தேதிமுதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பெயர், புகழ் மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வெளியூர் நபர்கள்மூலம் அனு கூலப் பலன்களை அடையமுடியும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நற்பலன் கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொண்டு, வேலை யாட்களை அனுசரித்துச் சென்றால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது தடைபட்டாலும், விரைவில் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். வேலையாட்கள் இடையூறுகளை ஏற்படுத்தி னாலும், உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்த வர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவதும், அஷ்டலட்சுமி வழிபாடு மேற் கொள்வதும் கெடுதியைக் குறைக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. ராசியாதிபதி புதன், சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் கௌரவ மான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் யோகம், அசையா சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகி மகிழ்ச்சியடையும் வாய்ப்பு உண்டாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 7-ஆம் தேதிமுதல் 9-ல் சஞ்சரிக்க விருப்பதால் தற்போது உங்களுக்குள்ள ஆரோக்கி யக் குறைபாடுகள் வரும் நாட்களில் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சிறப்பான ஆதரவுகள் கிடைத்து நல்ல நிலையை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபங்களை அடையமுடி யும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகநிலை ஏற்படும். வங்கிமூலம் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். அதிகாரி கள் உறுதுணையாக இருப்பதால் வேலைப்பளு குறையும். ஆஞ்சனேயர் வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நல்லது நடக்கும்.

rasipalan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான செவ்வாய், இவ்வாரத்தில் 7, 8-ல் சஞ்சரிப்பதால், நீங்கள் மிகவும் நிதானமாக செயல்படவேண்டிய நேரமாகும். சனி 7-ல், குரு 8-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவு கள் தாமதப்படும். எந்த செயல் செய்தாலும் சிந்தித்து செயல்படுவது, கையிருப்பைக் கொண்டு செலவுசெய்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளா விட்டால் எதிர்பாராத கடன்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். இருப்பதை அனு பவிக்க இடையூறு, அலைச் சல் காரணமாக உடல் அசதி ஏற்படும் நேரமென்பதால் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக வேலை செய்தால்தான் நெருக்கடி களை சமாளிக்க முடியும். உடனிருப்பவர்களே மறைமுகமாக பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். தற்போது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வந்தால், விரைவில் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல், தேவை யில்லாத பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை வெளிநபர் களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, சஷ்டி விரதம் இருப்பது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதால் பொருளா தாரரீதியாக அனுகூலங் கள், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த வம்பு வழக்குகளில்கூட வரும் நாட்களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மனநிம்மதி ஏற்படும். தற்போது 6-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வருகிற 7-ஆம் தேதிமுதல் 7-ல் சஞ்சரிப்ப தால், கூட்டாளிகளையும், குடும்பத்தில் உள்ளவர் களையும் சற்று அனுசரித் துச் செல்வது நல்லது. ராசியாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உடல் நலத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு. சில நாட்களாக இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் மறைந்து நிம்மதி ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்கள் வெற்றியடையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்கள் சொல்லும் அறிவுரைகளைக்கேட்டு நடந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியைத் திறம்பட செயல்படுத்தி மேலதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பயணங்கள்மூலமாக நல்ல வாய்ப்புகளையும், பொருளாதார அனுகூலங்களையும் அடைவீர்கள். சிவ வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்றத் தாழ்வான நேரமென்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. நீங்கள் பெரிதும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் செவ்வாய், 7-ஆம் தேதிமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது மிகவும் நல்லது. அகலக்கால் வைக்காமலிருந்தால் நிலைமையை சமாளிக்கமுடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஒருசில சிறப்பான ஆதாயங்கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும், எதிலும் திறமையாக செயல்பட்டு நிலைமையை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல், எதிர்பார்த்த சம்பளம் குறித்த நேரத்தில் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். விரைவில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியின்மூலமாக சிறப்பான நிலையை அடையமுடியும். தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மனை வழிபடுவதன்மூலம் சங்கடங்கள் குறையும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 6-ல் சூரியன் நட்பு வீட்டில் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு சிறப்பான நிலையை அடைவீர்கள். ராசியாதிபதி சுக்கிரன், குருவுடன் 5-ல் இருப்பதால் பொருளாதாரநிலை மிகவும் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பங்காளிவகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் வரும் நாட்களில் குறையும். ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், 7-ஆம் தேதிமுதல் 4-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 5-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் கவலைகளெல்லாம் மறைந்து ஒருசில ஆதாயங்களை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சியில் வெற்றிகிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் பொருளாதாரத் தேவைகளை எளிதில் பூர்த்திசெய்யமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். அரசுவழியில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்களை அடையமுடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிக்கு 3-ல் சனி, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வார முற்பாதியில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால், எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நெருக்கடிகளை எளிதில் சமாளிப்பீர்கள். சூரியன், புதன் சேர்க்கைபெற்று 5-ல் சஞ்சரிப்பதால், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் அனைத்துவிதமான செயல்களிலும் எவ்வித தொய்வுமில்லாமல் வெற்றிகளை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைக்கூட சிறப்பாகக் கையாண்டு போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழிலில் லாபம் கிடைப்பதால் கடன்களை பைசல் செய்யமுடியும். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நிம்மதியான நிலையிருக்கும். சம்பள நிலுவைத் தொகைகள் வரும் நாட்களில் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சஷ்டியன்று விரதமிருப்பது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு 3-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடியான நிலை ஏற்படும். நியாயப்படி கிடைக்கவேண்டிய பணவரவுகள் தாமதப்படுவது மட்டுமல்லாமல் வீண் செலவுகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானமாக செயல்படுவது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது மிக நல்லது. பேச்சால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய், 7-ஆம் தேதிமுதல் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவுள்ளதால், குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், பொருளாதார மேன்மைகளும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல், கிடைக்கும் வாய்ப்புகளை எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் மூலமாக பிரச்சினைகள் மேலோங்கக்கூடிய நேரமென்பதால், அவர்கள் செய்யும் இடையூறுகளைக் கருத்தில் கொள்ளாமல் தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் அசதி, ஓய்வுநேரம் குறையக்கூடிய சூழல் ஏற்படும். புதிய நபர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி, அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்யும் வாய்ப்பு ஏற்படும். நீண்டநாட்களாக வாங்க நினைத்த நவீன பொருட்களை வரும் நாட்களில் வாங்கமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சூரியன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நல்ல நட்புகள்மூலமாக பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஜென்ம ராசியில் சனி, இவ்வாரத்தில் செவ்வாய் 1, 2-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். அசையா சொத்துகள் வழியில் லாபகரமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. எதிலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும், உழைப்புக்கான பலனை அடைவீர்கள். ஆஞ்சனேயர் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத் தோடு இருப்பதும், உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதும் நல்லது. ஜென்ம ராசியில் குரு, சுக்கிரன் இருப்பதால் பொருளாதார நிலையானது ஏற்ற- இறக்கமாகதான் இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் எதையும் எதிர்கொள்ளமுடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். செவ்வாயும் இவ்வாரத்தில் 12-ஆமிடம் மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருங்கிய உறவினர்களின் உதவியால் உங்களுக்குள்ள நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தற்போதைக்கு மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருக்கவும். உங்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட போட்டிகள் காரணமாக கைநழுவிப் போகும். விரைவில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சி நற்பலனைத் தருமென்பதால் தற்சமயம் பொறுமையோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் கெடுபிடி சற்று கூடுதலாகதான் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்பதால் பொறுமையாக இருக்கவும். சூரியநமஸ்காரம் மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையை எதிர்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எவ்வித நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். இவ்வார முற்பாதியில் செவ்வாய் 11-ல் இருப்பது ஒருசில அனுகூலப் பலனை ஏற்படுத்தும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறா கப் புரிந்துகொள்வார்கள். குடும்ப உறுப்பினர் களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. சுப காரியங்கள் நடைபெற உடனிருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் இலக்கை எளிதில் அடையமுடியும் என்றாலும், ஒருசில சிக்கல்கள் ஏற்படும். அரசு அதிகாரியிடம் பேசும்பொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. வேலையாட்கள் சில நேரங்களில் நெருக்கடிகளைத் தந்தாலும், தக்கநேரத்தில் உதவியாக செயல்படுவதால் எதையும் சமாளிக்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தற்போதைக்கு பொறுமை காப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதமாகும். மகாவிஷ்ணு, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.